Wednesday, May 31, 2023

A little reed has been enough..

Henri De Regnier என்ற ஃப்ரெஞ்சுக் கவிஞரின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது. 

A little reed has been enough
To make the high grass shake and thrill,
The willows tall,
The meadow wide,
The brooklet and the song thereof;
A little reed has been enough
To make the forest musical. 

ஒரு சின்ன புல் போதும் காட்டையே இசை கிளரும் வடிவாய் ஆக்கி விடுகிறது என்கிறார். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை. அந்த முல்லையின் தெய்வமான மாயோன் குழலூதிய வண்ணம் காட்டை நிரப்புகிறான் என்கின்றனர் பத்தர்கள். மேற்படிக் கவிதையைப் படித்தவுடன் மனம் கொஞ்சம் ரீங்காரம் போடத் தொடங்கிவிட்டது. 

புல் ஒன்று போதும் 

புலர் போதம் ஆகும் 

புல் ஒன்று போதும் 

புவி நாதம் ஆகும் 

புல் ஒன்று குழலாகப் 

பரமன் இதழ் அமுதூறப் 

பிரபஞ்சத்தின் நாதம் 

பயில் கானம் ஆகும் 

புல் ஒன்று போதும்... 

கவிதையின் தன்மையே தொற்றிக் கொள்வதும், தோன்றிப் பின் தோன்றித் தோன்றுவதும். இசையின் கார்வைகள் போல், இசைவின் போர்வைகள் போல்.. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***