Friday, August 19, 2022

ஸ்ரீகிருஷ்ணகர்ணாம்ருதம் சொல்லித் தரும் தியானம்

மாது4ர்ய வாரிதி4 மதா3ந்த4 தரங்க34ங்கீ3

ச்ருங்கார ஸங்கலித சீத கிசோர வேஷம் |

ஆமந்த3ஹாஸ லலிதாநந சந்த்3ரபி3ம்ப3ம்

ஆநந்த3ஸம்ப்லவம் அநுப்லவதாம் மநோ மே || 



இனிமையே உருவான பெருங்கடல், அதனின்றும் பெருமிதமும், இறும்பூதும் ஒருங்கே திரண்டெழும் அலைசுழித்த போக்கும், சிருங்கார நலம் விளங்கும் கண்ணிற்கினிய நல் இளமை வடிவும், குமிணகையும் குலவு எழில் கோல மதிமுகமும், ஆநந்த ஸாகரமும் உருவாம் கிருஷ்ணனையே எனது மனம் பற்றிப் பின்தொடரட்டும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***