Thursday, June 30, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 49

அவிவேக க4நாந்த4தி3ங்முகே2

3ஹுதா4 ஸந்தத து3:க்க2 வர்ஷிணி |

43வந் ப4வது3ர்த்தி3நே பத2:

ஸ்க2லிதம் மாம் அவலோகய அச்யுத || 

பகவானே! அடியாரைக் கைவிடாத அச்சுதனே! விவேகம் இல்லாமை ஆகிற கனத்த மேகங்கள் எங்கும் சூழ்ந்து திசையெல்லாம் கும்மிருட்டாய், பலவிதமாகத் துக்கத் தொடர்ச்சிகளாய்க் கொட்டித் தீர்க்கிற பவத்தின் கொடிய நாளில் நல்வழியினின்றும் தவறி விழுகிற என்னைக் கண்கொண்டு பாராய் அச்சுதா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, June 29, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 48

அபராத4 ஸஹஸ்ர பா4ஜநம்

பதிதம் பீ4ம ப4வார்ணவ உத3ரே |

அக3திம் ரணாக3தம் ஹரே

க்ருபயா கேவலம் ஆத்மஸாத்குரு || 

துயரனைத்தும் போக்கியருளும் எம்பிரான் ஹரியே! கணக்கற்ற குற்றங்களுக்குக் கொள்ளும் இடமாக இருப்பவனும், பயங்கரமான பவக்கடலில் ஆழத்தினுள் விழுபவனாகவும், கதியற்றவனாகவும், உம்மையே சரணாகதி என்றடைந்தவனாய் இருக்கும் என்னை, (என் தகுதி எதுவும் நோக்காமல்) உம்முடைய கிருபை மட்டுமே காரணமாக உம்முடையவனாய் ஆக்கிக்கொள்ள வேண்டுகிறேன் பிரானே! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, June 28, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 47

தி43சுசிம் அவிநீதம் நிர்த்த3யம் மாம் அலஜ்ஜம்

பரமபுருஷ! யோSஹம் யோகி3வர்யாக்3ரக3ண்யை: |

விதி4சிவ ஸநகாத்3யை: த்4யாதும் அத்யந்த தூ3ரம்

தவ பரிஜநபா4வம் காமயே காமவ்ருத்த: || 

நினைத்தபடியெல்லாம் நடந்துகொண்டிருக்கும் என்னைப் போல் ஒருவன் உன்னுடைய அந்தரங்க பரிஜநங்கள் செய்யும் கைங்கர்யத்தை ஆசைப் படுகிறேன்! ச.. இதற்காகவே என்னைக் கண்டிக்க வேண்டும்! தூய்மை இல்லாதவன், விநயம் அறியாதவன், தயை என்பதையே அறியாதவன், வெட்கம் கெட்டவன், இப்படிப்பட்ட நான்.. விரும்புவது? பரமபுருஷனே! யோகிகளில் சிறந்தவர்களில் முதன்மையில் இருக்கும் பிரம்மன், சிவன், ஸநகாதி முனிவர்கள் ஆகியோரால் எது தியானிக்கக் கூட மிக அரிதானதோ அந்த உன்னுடைய அணுக்கக் கைங்கரியத்தை.. இந்த நான்.. விரும்புகிறேன்! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, June 27, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 46

4வந்தம் ஏவ அநுசரந் நிரந்தரம்

ப்ரசாந்த நிச்சேஷ மநோரதா2ந்தர: |

கதா3Sஹம் ஐகாந்திக நித்யகிங்கர:

ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத2ஜீவித: || 

உம்மையே இடைவிடாமல் பின்தொடர்பவனாய், மனத்தின் மற்றைக் காமங்கள் அனைத்தும் மிச்சமின்றி நீங்கி உள்ளம் அமைதியுற்றவனாய், ஒரே இலட்சியத்துடன் வழிபடும் ஐகாந்திகம் என்பதுடன் உமக்கு உற்ற தொண்டெல்லாம் புரிந்து அதன் காரணமாக என் ஜீவிதம் பயனடைந்ததுவாய் ஆகி அதன் மூலம் எப்பொழுது நான் உம்மை உகப்பிக்கப் போகிறேன்? 

சுலோகம் 32 தொடங்கி இந்தச் சுலோகம் வரையில் ஒரே பிரார்த்தனையாகப் படிக்க வேண்டும். ஒரே பிரார்த்தனையாகத் தொகுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் கீழே காட்டுகிறேன் -- 

சுலோகம் 32 --- 46 

நிறங்கலந்து பிரகாசமாய் விளங்கும் பீதாம்பர ஆடையும், மலர்ந்த காயாம் பூவையொத்துத் திகழும் காந்தியும், உள்ளடங்கிய நாபியும், இடைசிறுத்து மேலெழும் அழகும், அகன்ற திருமார்பில் விளங்கும் திருமறுவும் 

சுபமான தோள்கள், வில்லின் நாண் தழும்பு ஏறியிருக்கும் தோள்கள், ஒன்றுக்கு நான்காகக் காப்பதற்கு விளங்கும் தோள்கள், முழங்கால்வரை நீண்ட கைகளை உடைத்தான தோள்கள், பிராட்டியின் திருச்செவி மலரான நீலோத்பலமும், காதின் அணிகுழை என்ன, அலையும் திருக்குழல் சுருளென்ன இவை அழுந்தியிருக்கும் அடையாளங்களை தெரிவிக்கும் விதமாகப் பிரகாசிக்கும் சதுர்புஜங்கள் 

உயர்ந்து பருத்த திருத்தோள்கள்வரை தாழ்ந்து தொங்கும் குண்டலங்கள், திருக்குழல் சுருள்கள் இவற்றால் அழகுடன் மூன்று கோடுகள் படிந்த திருக்கழுத்து விளங்க, முகத்தின் ஒளியோ அன்றலர்ந்த தாமரைப் பூவின் அழகொளியையும், முழுமதியின், களங்கமற்ற ஒளியையும் வென்று விளங்க 

அன்றலர்ந்து மலராநிற்கும் தாமரை போல் அழகிய கண்கள், நெறிப்பினால் கொடிபோன்று வளைந்ததான திருப்புருவங்கள், மனத்தைக் கவரும் இதழ்கள், தூய புன்சிரிப்பு, அழகிய கன்னக் கதுப்புகள், உயர்ந்து விளங்கும் நாசி, நெற்றிவரையில் அலையும் திருக்குழல் கற்றைகள் 

ஒளிவிடும் கிரீடம், தோள்வளைகள், ஹாரம், திருக்கழுத்தில் அணியும் அணி, ஸ்ரீகௌஸ்துப மணி, திருஅரைநாண், திருச்சிலம்பு முதலிய ஆபரணங்களும், சக்கரம், சங்கம், கத்தி, கதை, வில் முதலிய ஆயுதங்களும், அழகொளி மிக்க துளஸியுடன் பிரகாசிக்கும் வநமாலையுடனும் சுடர்மிக ஒளிர 

’அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’ என்று யார் விரும்பி உறையும் பவநமாக நின் திருமார்வம் திகழ்கிறதோ, யார் தோன்றிய திருப்பாற்கடலை உனக்குப் பிடித்த உறைவிடமாக நீ ஏற்று மகிழ்கிறாயோ, யாருடைய திருக்கடைக்கண் நோக்கின் கிருபையால் ஜகமெல்லாம் இயங்குகிறதோ, யாருக்காகவென்று கடலைக் கடைந்தாயோ, யாருக்காகவென்று கடலை அடைத்து அணையிட்டாயோ இந்த விச்வம் அனைத்தும் உன் உருவமே என்னும் நிலையில் எப்பொழுதும் உன்னோடு பிரிவின்றி அநுபவிக்கப்படுகின்றவளாயிருந்தும், தம் குணங்களாலும், உருவத்தாலும், எழில்மிகு செயல்களாலும் என்றும் புதுமையாய் உமக்கு ஆச்சர்யத்தை விளைவிப்பவளும், எப்பொழுதும் எந்நிலையிலும், (பரம், விபவம், வியூஹம், அர்ச்சை முதலிய எல்லா நிலைகளிலும்) உமக்கு உசிதமானவளாய், உம்முடைய ஸ்ரீதேவியான  

பிராட்டியுடன் கூட உமக்கு அந்தரங்கமாக விளங்குபவனும், மிகவும் விளங்கும் விஜ்ஞானமும், பலமும் ஒருசேரத் திகழும் நிலையமாகத் திகழ்பவனும், விரிந்து திகழும் படங்களில் ஒலிக்கும் மணிக்கூட்டங்களால் ஒளிதிகழும் உட்பகுதியைக் கொண்டு திவ்ய தேசமாகத் திகழ்பவனும் ஆன திருவநந்தாழ்வானில் எழுந்தருளித் திகழ்ந்திருக்க, திருவநந்தாழ்வானின் கைங்கரியம் எப்படிப்பட்டது! இருக்கும் இடமாகவும், பள்ளிகொள்ளும் படுக்கையாகவும், அமரும் ஆஸநமாகவும், நடக்கும் போது அணியும் பாதுகையாகவும், தலையில் திருப்பரியட்டமாகவும், அணையாகவும், மழை வெயில் தாங்கும் குடையாகவும் நினக்குற்ற சேஷத்வம் நிறம்பெற வேண்டிப் பலப்பல சரீரங்கள் எடுத்து, உரிய தொண்டுகள் அனைத்தும் இயற்றுவதால் அனைவராலும் சேஷன் என்றே அழைக்கப்படும் திருவநந்தாழ்வான் மீது நீ அமர்ந்திருப்ப 

உமக்கு அடியவனாயும், நண்பனாயும், அமர்ந்து செல்லும் வாஹநமாயும், வீற்றிருக்கும் ஆசனமாயும், உமக்கு வெயிலுக்கும் மழைக்கும் மேல்விரிப்பாகவும், உமக்கு வீசப்படும் சாமரமாகவும், நெருக்கும் உம்முடைய திருவடிகளின் தழும்பேறியவனாகவும் விளங்கும் அந்தக் கருடாழ்வான் தேவரீர் திருமுன்பு சேவித்து நிற்க 

நீர் உண்டு மிகுந்த சேஷத்தையே போக்கியமாகக் கொள்பவரும், நீர் அவர் மேல் வைத்த நிர்வாஹம் ஆகிய பாரத்தைச் சுமப்பவரும், அனைவருக்கும் பிரியமானவருமான விஷ்வக்ஸேநராலே எந்தக் காரியம் எவ்வண்ணம் விண்ணப்பிக்கப் படுகிறதோ அந்தக் காரியத்தை அவ்வண்ணமே நிரம்பிய கருணைப் பார்வையால் நியமித்தவாறு நீர் எழுந்தருளியிருக்க 

அவித்யை, அஹங்காரம், மிகுந்த ஈடுபாடு, விருப்பு, வெறுப்பு என்னும் ஐந்தும் கிலேசங்கள் என்று சொல்லப்படும். இவ்விதக் கிலேசங்களும், பிரகிருதியுடன் தொடர்பால் விளையும் மலங்களாகிய குற்றங்களும் எதுவும் அற்றவர்களாயும், இயல்பாகவே நின் கைங்கர்யம் என்னும் ஒன்றிலேயே ஊன்றிய ரஸவடிவாய் இருப்பவர்களும், உனக்கு உவப்பானவர்களும், உன் கைங்கரியத்திற்கு ஏற்ற அந்தந்தத் துணைச் சாதனங்களைக் கைக்கொண்டு, முறையுணர்ந்து உசிதமாகச் சேவை செய்வதிலேயே நிலைத்தவர்களுமான நித்யசூரிகளால் சேவிக்கப்படும் இருப்பில் 

முன்னெப்பொழுதும் இல்லாத புதுப்புதுப் பலவித சுவைகளாலும், உள்ளபா4வங்களாலும் நிறைந்ததும் நெருங்கியமைந்ததும், கணத்தின் ஒரு கூறான நேரத்தில் பிரம்மனின் ஆயுட்காலமான பரமே கழிந்துபோனது போன்ற அழகியதும், விதவிதமான ஸாமர்த்யத்துடன் கூடிய லீலைகளால் பெரிய பிராட்டியாரை மகிழ்விப்பவனாகவும், பெருத்த தோளுடையவனாகவும் 

சிந்தனைக்கெட்டாததாய், தெய்விகமாய், என்றும் வியப்பே விளைப்பதாய், நித்யமாய் இருக்கும் இளமையின் இயல்பான எழில்மயமான அமுதக் கடலாக இருப்பவனும், திருவுக்கும் திருவாகிய செல்வனும், பக்தஜநங்களின் ஒரே ஜீவிதமாக இருப்பவனும், தன்னை அனுபவிக்க நினைப்பார்க்கு உரிய பக்குவம் தந்து அநுபவிக்க வைக்கும் ஸாமர்த்தியம் உடையவனும், ஆபத்து அனைத்தையும் அக்கணமே நீக்கும் உயரிய நண்பனாயும், குறையிரந்து வருவோர்க்கு வேண்டுவன அளிக்கும் கல்பகமரம் போன்றவனுமான 

உம்மையே இடைவிடாமல் பின்தொடர்பவனாய், மனத்தின் மற்றைக் காமங்கள் அனைத்தும் மிச்சமின்றி நீங்கி உள்ளம் அமைதியுற்றவனாய், ஒரே இலட்சியத்துடன் வழிபடும் ஐகாந்திகம் என்பதுடன் உமக்கு உற்ற தொண்டெல்லாம் புரிந்து அதன் காரணமாக என் ஜீவிதம் பயனடைந்ததுவாய் ஆகி அதன் மூலம் எப்பொழுது நான் உம்மை உகப்பிக்கப் போகிறேன்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



Sunday, June 26, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 45

அசிந்த்ய தி3வ்ய அத்3பு4த நித்ய யௌவந

ஸ்வபா4வ லாவண்யமய அம்ருத உத3தி4ம் |

ச்ரிய: ச்ரியம் ப4க்தஜந ஏகஜீவிதம்

ஸமர்த்த2ம் ஆபத்ஸக2ம் அர்த்தி2கல்பகம் || 

சிந்தனைக்கெட்டாததாய், தெய்விகமாய், என்றும் வியப்பே விளைப்பதாய், நித்யமாய் இருக்கும் இளமையின் இயல்பான எழில்மயமான அமுதக் கடலாக இருப்பவனும், திருவுக்கும் திருவாகிய செல்வனும், பக்தஜநங்களின் ஒரே ஜீவிதமாக இருப்பவனும், தன்னை அனுபவிக்க நினைப்பார்க்கு உரிய பக்குவம் தந்து அநுபவிக்க வைக்கும் ஸாமர்த்தியம் உடையவனும், ஆபத்து அனைத்தையும் அக்கணமே நீக்கும் உயரிய நண்பனாயும், குறையிரந்து வருவோர்க்கு வேண்டுவன அளிக்கும் கல்பகமரம் போன்றவனுமான (உன் சந்நிதியில் நான் கண்டு உனக்குத் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ?) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, June 25, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 44

அபூர்வ நாநாரஸ பா4வநிர்ப்ப4

ப்ரபத்34யா முக்34 வித3க்34 லீலயா |

க்ஷண அணுவத் க்ஷிப்த பராதி3காலயா

ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபு4ஜம் || 

முன்னெப்பொழுதும் இல்லாத புதுப்புதுப் பலவித சுவைகளாலும், உள்ளபா4வங்களாலும் நிறைந்ததும் நெருங்கியமைந்ததும், கணத்தின் ஒரு கூறான நேரத்தில் பிரம்மனின் ஆயுட்காலமான பரமே கழிந்துபோனது போன்ற அழகியதும், விதவிதமான ஸாமர்த்யத்துடன் கூடிய லீலைகளால் பெரிய பிராட்டியாரை மகிழ்விப்பவனாகவும், பெருத்த தோளுடையவனாகவும் (இருக்கும் அந்த நிலையில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, June 24, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 43

ஹதாகி2ல க்லேமலை: ஸ்வபா4வத:

ஸதா3நுகூல்யைகரஸை: தவோசிதை: |

க்3ருஹீத தத் தத் பரிசார ஸாத4நை:

நிஷேவ்யமாணம் ஸசிவை: யதோ2சிதம் || 

அவித்யை, அஹங்காரம், மிகுந்த ஈடுபாடு, விருப்பு, வெறுப்பு என்னும் ஐந்தும் கிலேசங்கள் என்று சொல்லப்படும். இவ்விதக் கிலேசங்களும், பிரகிருதியுடன் தொடர்பால் விளையும் மலங்களாகிய குற்றங்களும் எதுவும் அற்றவர்களாயும், இயல்பாகவே நின் கைங்கர்யம் என்னும் ஒன்றிலேயே ஊன்றிய ரஸவடிவாய் இருப்பவர்களும், உனக்கு உவப்பானவர்களும், உன் கைங்கரியத்திற்கு ஏற்ற அந்தந்தத் துணைச் சாதனங்களைக் கைக்கொண்டு, முறையுணர்ந்து உசிதமாகச் சேவை செய்வதிலேயே நிலைத்தவர்களுமான நித்யசூரிகளால் சேவிக்கப்படும் இருப்பில் (நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, June 23, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 42

த்வதீ3ய பு4க்த உஜ்ஜி2சேஷ போ4ஜிநா

த்வயா நிஸ்ருஷ்ட ஆத்மப4ரேண யத்3யதா2 |

ப்ரியேண ஸேநாபதிநா ந்யவேதி3தத்

ததா2Sநுஜாநந்தம் உதா3ர வீக்ஷணை: || 

*


நீர் உண்டு மிகுந்த சேஷத்தையே போக்கியமாகக் கொள்பவரும், நீர் அவர் மேல் வைத்த நிர்வாஹம் ஆகிய பாரத்தைச் சுமப்பவரும், அனைவருக்கும் பிரியமானவருமான விஷ்வக்ஸேநராலே எந்தக் காரியம் எவ்வண்ணம் விண்ணப்பிக்கப் படுகிறதோ அந்தக் காரியத்தை அவ்வண்ணமே நிரம்பிய கருணைப் பார்வையால் நியமித்தவாறு நீர் எழுந்தருளியிருக்க (அந்த நிலையில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, June 22, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 41

தா3ஸஸ் ஸகா2 வாஹநம் ஆஸநம் த்4வஜோ

யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |

உபஸ்தி2தம் தேந புரோ க3ருத்மதா

த்வத3ங்க்4ரி ஸம்மர்த்த3 கிண அங்க சோபி4நா || 


*


உமக்கு அடியவனாயும், நண்பனாயும், அமர்ந்து செல்லும் வாஹநமாயும், வீற்றிருக்கும் ஆசனமாயும், உமக்கு வெயிலுக்கும் மழைக்கும் மேல்விரிப்பாகவும், உமக்கு வீசப்படும் சாமரமாகவும், நெருக்கும் உம்முடைய திருவடிகளின் தழும்பேறியவனாகவும் விளங்கும் அந்தக் கருடாழ்வான் தேவரீர் திருமுன்பு சேவித்து நிற்க (அந்த நிலையில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, June 21, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 40

நிவாஸ ய்யாஸந பாது3காம்சு

உபதா4ந வர்ஷாதப வாரணாதி3பி4: |

ரீரபே4தை3: தவ சேஷதாம் க3தை:

யதோ2சிதம் சேஷ இதீரிதே ஜநை: || 



திருவநந்தாழ்வானின் கைங்கரியம் எப்படிப்பட்டது! இருக்கும் இடமாகவும், பள்ளிகொள்ளும் படுக்கையாகவும், அமரும் ஆஸநமாகவும், நடக்கும் போது அணியும் பாதுகையாகவும், தலையில் திருப்பரியட்டமாகவும், அணையாகவும், மழை வெயில் தாங்கும் குடையாகவும் நினக்குற்ற சேஷத்வம் நிறம்பெற வேண்டிப் பலப்பல சரீரங்கள் எடுத்து, உரிய தொண்டுகள் அனைத்தும் இயற்றுவதால் அனைவராலும் சேஷன் என்றே அழைக்கப்படும் திருவநந்தாழ்வான் மீது நீ அமர்ந்திருப்பக் (கண்டு நான் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, June 20, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 39

தயா ஸஹாஸீநம் அநந்த போ4கி3நி 

ப்ரக்ருஷ்ட விஜ்ஞாந 3லைக தா4மநி

2ணாமணிவ்ராத மயூக2 மண்ட3 

ப்ரகாமாந உத3 தி3வ்யதா4மநி || 



பிராட்டியுடன் கூட அவனுக்கு அந்தரங்கமாக விளங்குபவனும், மிகவும் விளங்கும் விஜ்ஞானமும், பலமும் ஒருசேரத் திகழும் நிலையமாகத் திகழ்பவனும், விரிந்து திகழும் படங்களில் ஒலிக்கும் மணிக்கூட்டங்களால் ஒளிதிகழும் உட்பகுதியைக் கொண்டு திவ்ய தேசமாகத் திகழ்பவனும் ஆன திருவநந்தாழ்வானில் எழுந்தருளித் திகழ்பவனும் (தொடர்ச்சி) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, June 19, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 38

ஸ்வவைச்வரூப்யேண ஸதா3Sநுபூ4தயாSபி 

அபூர்வவத்3 விஸ்மயம் ஆத3தா4நயா

கு3ணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை

ஸதா3 தவைவ உசிதயா தவ ச்ரியா || 



இந்த விச்வம் அனைத்தும் உன் உருவமே என்னும் நிலையில் எப்பொழுதும் உன்னோடு பிரிவின்றி அநுபவிக்கப்படுகின்றவளாயிருந்தும், தம் குணங்களாலும், உருவத்தாலும், எழில்மிகு செயல்களாலும் என்றும் புதுமையாய் உனக்கு ஆச்சர்யத்தை விளைவிப்பவளும், எப்பொழுதும் எந்நிலையிலும், (பரம், விபவம், வியூஹம், அர்ச்சை முதலிய எல்லா நிலைகளிலும்) உனக்கு உசிதமானவளாய், உன்னுடைய ஸ்ரீதேவியானவளை (உன்னுடன் கண்டு அந்நிலையில் நான் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, June 18, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 37

சகர்த்த2 யஸ்யா 4வநம் பு4ஜாந்தரம் 

தவ ப்ரியம் தா4 யதீ4 ஜன்மபூ4: | 

ஜக3த் ஸமஸ்தம் யத3பாங்க3 ஸம்ச்ரயம் 

யத3ர்த்த2ம் அம்போ4தி4: அமந்த்2யப3ந்தி4 || 



’அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’ என்று யார் விரும்பி உறையும் பவநமாக நின் திருமார்வம் திகழ்கிறதோ, யார் தோன்றிய திருப்பாற்கடலை உனக்குப் பிடித்த உறைவிடமாக நீ ஏற்று மகிழ்கிறாயோ, யாருடைய திருக்கடைக்கண் நோக்கின் கிருபையால் ஜகமெல்லாம் இயங்குகிறதோ, யாருக்காகவென்று கடலைக் கடைந்தாயோ, யாருக்காகவென்று கடலை அடைத்து அணையிட்டாயோ (அந்தத் திருமகளோடு எழுந்தருளியிருக்கும் இருப்பில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, June 17, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 36

ஸ்பு2ரத்கிரீடாங்க33 ஹாரகண்டி2கா 

மணீந்த்3 காஞ்சீகு3 நூபுராதி3பி4: | 

ரதா2ங்க3 ங்க2 அஸி 3தா3 4நுர்வரை

லஸத்துளஸ்யா வநமாலயா உஜ்ஜ்வலம் || 



ஒளிவிடும் கிரீடம், தோள்வளைகள், ஹாரம், திருக்கழுத்தில் அணியும் அணி, ஸ்ரீகௌஸ்துப மணி, திருஅரைநாண், திருச்சிலம்பு முதலிய ஆபரணங்களும், சக்கரம், சங்கம், கத்தி, கதை, வில் முதலிய ஆயுதங்களும், அழகொளி மிக்க துளஸியுடன் பிரகாசிக்கும் வநமாலையுடனும் சுடர்மிக ஒளிர்பவனாய் (இருக்கும் இருப்பைக் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, June 16, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 35

ப்ரபு3த்34 முக்3தா4ம்பு3 சாரு லோசநம் 

ஸவிப்4ரமப்4ரூலதம் உஜ்ஜ்வல அத4ரம்

சுசிஸ்மிதம் கோமளக3ண்ட3ம் உந்நஸம் 

லலாடபர்யந்த விலம்பி3 அலகம் || 



அன்றலர்ந்து மலராநிற்கும் தாமரை போல் அழகிய கண்கள், நெறிப்பினால் கொடிபோன்று வளைந்ததான திருப்புருவங்கள், மனத்தைக் கவரும் இதழ்கள், தூய புன்சிரிப்பு, அழகிய கன்னக் கதுப்புகள், உயர்ந்து விளங்கும் நாசி, நெற்றிவரையில் அலையும் திருக்குழல் கற்றைகள் (இவற்றைக் கண்டு அந்த ஆனந்தத்தில் தொண்டு செய்யக் கூடும் நாள் எந்நாளோ?) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



Wednesday, June 15, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 34

உத3க்3 பீந அம்ஸ விலம்பி3 குண்ட3 

அலக ஆவளீ 3ந்து4 கம்பு3 கந்த4ரம்

முக2ச்ரியா ந்யக்க்ருத பூர்ண நிர்மலா

ம்ருதாம்சு பி3ம்ப3 அம்பு3ருஹ உஜ்ஜ்வலச்ரியம் || 



உயர்ந்து பருத்த திருத்தோள்கள்வரை தாழ்ந்து தொங்கும் குண்டலங்கள், திருக்குழல் சுருள்கள் இவற்றால் அழகுடன் மூன்று கோடுகள் படிந்த திருக்கழுத்து விளங்க, முகத்தின் ஒளியோ அன்றலர்ந்த தாமரைப் பூவின் அழகொளியையும், முழுமதியின், களங்கமற்ற ஒளியையும் வென்று விளங்க (இவ்வாறிருக்கும் நிலையில் நான் கண்டு என்று கைங்கரியம் செய்யப் பெறுவேன்!) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, June 14, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 33

சகாஸதம் ஜ்யாகிணகர்க்கசை: சுபை4

சதுர்ப்பி4: ஆஜாநுவிலம்பி3பி4: பு4ஜை: | 

ப்ரியாவதம்ஸ உத்பல கர்ண பூ4ஷண 

ச்லத2 அலகாப3ந்த4 விமர்த்த3ம்ஸிபி4: || 



பகவானின் தோளழகைப் பற்றிப் பேசுகிறார். சுபமான தோள்கள், வில்லின் நாண் தழும்பு ஏறியிருக்கும் தோள்கள், ஒன்றுக்கு நான்காகக் காப்பதற்கு விளங்கும் தோள்கள், முழங்கால்வரை நீண்ட கைகளை உடைத்தான தோள்கள், பிராட்டியின் திருச்செவி மலரான நீலோத்பலமும், காதின் அணிகுழை என்ன, அலையும் திருக்குழல் சுருளென்ன இவை அழுந்தியிருக்கும் அடையாளங்களை தெரிவிக்கும் விதமாகப் பிரகாசிக்கும் சதுர்புஜங்களைக் ( கண்டு என்று கைங்கரியம் செய்யப் பெறுவேன்). 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, June 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 32

விராஜமாந உஜ்ஜ்வல பீதவாஸஸம் 

ஸ்மித அதஸீஸூந ஸம அமலச்ச2விம்

நிமக்3நநாபி4ம் தநுமத்4யம் உந்நதம் 

விசா வக்ஷஸ்ஸ்த2சோபி4லக்ஷணம் || 



இந்தச் சுலோகம் தொடங்கி 46ஆம் சுலோகத்தளவும் 15 சுலோகங்கள் ஒரே வாக்கிய அமைப்பில்  இருப்பவை. அதாவது பகவானின் அவயவங்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், தேவிமார், பரிஜனங்கள் என்று விவரித்து இந்தச் சேர்த்தியழகுடன் திகழும் நிலையில் பகவானுக்குக் கைங்கரியம் புரிந்து அதனால் வரும் அனுபவத்தால் உவகையுற்ற நிறைவில் பிறக்கும் தொண்டின் நிறைவில் பகவான் மகிழத் தாம் காண்பது என்றோ என்று 15 சுலோகங்களின் கருத்துத் தொடர்ச்சியாகும். எனவே ஒவ்வொரு சுலோகத்தோடும் சேர்த்து என்று இந்தச் சேர்த்தியான நிலையில் நான் கைங்கரியம் செய்யப் பெறுவனோ என்பது நினைக்கப்படும். 

நிறங்கலந்து பிரகாசமாய் விளங்கும் பீதாம்பர ஆடையும், மலர்ந்த காயாம் பூவையொத்துத் திகழும் காந்தியும், உள்ளடங்கிய நாபியும், இடைசிறுத்து மேலெழும் அழகும், அகன்ற திருமார்பில் விளங்கும் திருமறுவும் (கண்டு கைங்கரியம் புரியும் பேறு என்று எனக்குக் கிட்டுமோ?) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, June 12, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 31

கதா3புந: ங்க2 ரதா2ங்க3 கல்பக 

த்4வஜ அரவிந்தா3ங்கு வஜ்ர லாஞ்ச2நம்

த்ரிவிக்ரம த்வச்சரணாம்பு3ஜத்3வயம் 

மதீ3யமூர்த்தா4நம் அலங்கரிஷ்யதி || 



மீண்டும் எப்பொழுது திரிவிக்ரமாவதாரம் என்கிறார்? பலியை மூன்றடி யாசித்து உலகளந்தது பெரிய செயல்தான். ஆனால் ’நீ என்னுடையவன்’ என்றால் ’இல்லை நீ நீதான் நான் நான் தான்’ த்வம் மே என்றால் அஹம் மே என்று சொன்ன ஜீவன் உன் திருவடிகளையே யாசித்து வந்து நிற்கும் இதுவன்றோ தருணம்! யாரும் பிரார்த்திக்காத அன்று, நீ யாசித்துச் சென்று, அனைத்துப் பொருட்களின் மீதும் உன் பாத இலச்சினை பதித்தது பெரும் செயல்தான். ஆனால் ’தான் தனக்குரியன், தன்னைத் தானே காக்க வேண்டும்’ என்று திரிந்த ஜீவன் ‘நானும் எனக்குரியன் அன்று. என்னைக் காப்பதும் பகவானே’ என்று நன்கு உணர்ந்து வந்து நின்று பிரார்த்திக்கும் இன்று அன்றோ அந்தத் திரிவிக்ரமாவதாரம் பூர்த்தியாவது! எப்பொழுது உன் திருவடிகளை என் சென்னிக்கணியாய்ச் சூட்டப் போகின்றாய்? சங்கம், ரதாங்கம், கல்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ரம் முதலிய அடையாளங்கள் அமைந்த உன் பத கமலங்கள், த்ரிவிக்ரமா! எனது தலைக்கணியாய் எப்பொழுது திகழப் போகின்றன? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

Saturday, June 11, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 30

விலாஸ விக்ராந்த பராவராலயம் 

நமஸ்யதா3ர்த்தி க்ஷபணே க்ருதக்ஷணம்

4நம் மதீ3யம் தவ பாத3பங்கஜம் 

கதா3 நு ஸாக்ஷாத்கரவாணி சக்ஷுஷா || 



உனது திருவடிமலர்கள் விளையாட்டாகவே உலகளந்து மனிதர் மற்றும் தேவரெலாம் அகப்படுத்திய திருவடிக் கமலங்கள். வணங்கியவர்களின் துன்பங்களைத் துடைப்பதுவே பொழுதுபோக்காய் உள்ள திருவடிகள். உனது பாத கமலங்களே எனது செல்வம். எப்பொழுது அவற்றை என் கண்களால் கண்டு களிப்பனோ (என்று ஏங்குகிறேன்). 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

Friday, June 10, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 29

உதீ3ர்ண ஸம்ஸார 3வாசுசுக்ஷணிம் 

க்ஷணேந நிர்வாப்ய பராம் நிர்வ்ருதிம்

ப்ரயச்ச2தி த்வச்சரண அருணாம்பு3 

த்3வயாநுராகா3ம்ருதஸிந்து4 சீகர: || 



ஒரு துளி என்ன எல்லாம் செய்கிறது! உனது செந்தாமரைச் சோதித் திருவடிகளில் அன்பு என்பதோ பெரும் அமுதக் கடல். அந்த அமுதக் கடலில் ஒரு துளி, உன் திருவடிகளில் அன்பின் ஒரு துளி போதும் பற்றியெரிகிற ஸம்ஸாரமாகிற இந்தப் பெரும் காட்டுத்தீயை ஒரே கணத்தில் அவித்துவிட்டு, மேலான பரம ஆநந்தத்தையும் தந்துவிடுகிறது. ஒரு துளி அன்பு! ஒரு கணம் தீர்வு! உன்னத ஆனந்தம்! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, June 9, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 28

த்வத3ங்க்4ரிமுத்3தி3ச் கதா3Sபி கேநசித் 

யதா2 ததா2 வாSபி ஸக்ருத்க்ருதோSஞ்ஜலி: | 

ததை3 முஷ்ணாதி சுபா4நி அசேஷத

சுபா4நி புஷ்ணாதி ஜாது ஹீயதே || 



பகவானே! உமது திருவடிகளைக் குறித்து எப்போதேனும் யாராலேனும் எந்த விதத்திலேனும் ஒரு முறை கைகூப்புதலாகிய அஞ்ஜலி செய்யப் பட்டிருக்குமாகில் அஃது அவருடைய அசுபங்கள் அனைத்தையும் மிச்சமில்லாமல் போக்கிவிடுகிறது. அவர் வாழ்க்கையில் சுபங்களை ஒரு நாளும் குறைவேயின்றி வளர்த்து விடுகின்றது. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, June 8, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 27

தவாம்ருதஸ்யந்தி3நி பாத3மங்கஜே 

நிவேசிதாத்மா கத2ம் அந்யதி3ச்ச2தி

ஸ்தி2தேSரவிந்தே3 மகரந்த3 நிர்ப்ப4ரே 

மது4வ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே || 



அமுதம் புறம்பொசிந்து வெள்ளமிடா நின்ற உம்முடைய பாத கமலங்களில் உம்முடைய நிர்ஹேதுக (காரணமற்ற) கிருபையாலே எனக்கு முழுமையான தோய்வு ஏற்பட்ட பின்பு வேறொன்றை எப்படி மனம் விரும்பும்? செந்தாமரையும் மலர்ந்திருக்க, அதில் தேனும் நிறைந்து தளும்ப, அந்தத் தேனை அருந்தவும் வாய்த்த வண்டானது முள்ளிமலரின் மீது பார்வையாவது செலுத்துமோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, June 7, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 26

நிராஸகஸ்யாபி தாவது3த்ஸஹே 

மஹே ஹாதும் தவ பாத3 பங்கஜம்

ருஷா நிரஸ்தோSபி சிசு: ஸ்தநந்த4யோ 

ஜாது மாதுச் சரணௌ ஜிஹாஸதி || 



சில உறவுகள் ஒப்பந்த அடிப்படையில் அமைவன. அத்தகைய உறவுகளிலே கூட உள்ளம் கலந்துபடின் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திருக்க இயலாத அளவிற்குப் பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு தாய்க்குக் குழந்தையுடன் ஏற்படும் உறவு ஒப்பந்தம் அடிப்படையாக அன்று. உயிரின் தொடர்பு அடிப்படையாக அமைவது. அத்தகைய உறவில் கனிந்த சொல்லும், கொஞ்சு செயலும் மட்டுமேதான் உறவு என்று சொல்ல முடியாது. கடிந்த சொல்லும், கடுமையான செயலும் கூட அந்த உறவின் பகுதிதான். இந்த உயிருக்கு மாதாவாய், பிதாவாய், மற்றும் அனைத்து வித உறவுமாய் இயற்கையில் அமைந்தவன் நாராயணன். நாராயணன் என்ற பெயரே இதைக் குறிப்பதுவாய் அமைகிறது. நரர்களாகிய ஜீவர்களுக்குப் புகலாகவும், நரர்களாகிய ஜீவர்களைத் தான் இருக்கும் ஆலயமாகவும் கொண்டு விளங்குபவன் ஆகையாலே நாராயணன் என்ற நாமம் பொருளுடன் திகழ்கிறது. 

அத்தகைய நாராயணனாகிய நீ எந்த நேரத்தும் என் விஷயத்தில் நிராஸனாய், பற்று அற்றவனாய் ஆவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை நீயே ஆனாலும் உனது பாத கமலங்களை விட்டு விலக என்னால் ஒரு போதும் இயலாது மஹேசா! கோபத்தால் ஒரு தாய் தன் குழந்தையை, அதுவும் பால்மணம் மாறாத குழந்தையைக் கோபத்தால் விட்டது போல் இருப்பினும் அந்தக் குழந்தைக்குத் தன் தாயின் காலடிகளை விட்டு விலக முடியாதன்றோ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, June 6, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 25

அபூ4தபூர்வம் மம பா4வி கிம் வா 

ஸர்வம் ஸஹே மே ஸஹஜம் ஹி து3:க்க2ம்

கிந்து த்வத3க்3ரே ரணாக3தாநாம் 

பராப4வோ நாத2 தேSநுரூப: || 



செய்ததையெல்லாம் செய்துவிட்டு அதன் பலனாகத் துக்கம் நேரும் போது தப்பிப்பதற்காக என்று இவ்வளவும் சொல்லவில்லை. ஏனெனில் இதுவரையில் எந்த துக்கம் நான் அனுபவிக்கவில்லை, இப்பொழுது என்று புதிதாக ஒரு துக்கம் ஏற்பட? எல்லாத் துக்கத்தையும் சகித்துச் சகித்துத் துக்கமே பழகியன்றோ போய்விட்டது! ஆனால் நாதா! உனக்கு முன்னால் சரணாகதி அடைந்தவனாய் வந்து நின்று கொண்டு அப்பொழுதும் எனக்குத் துக்கம் ஏற்படுமானால் அது எவ்வளவு அவமானம்! உம் ஸ்வரூபத்திற்கும் அஃது தகுந்ததில்லையே ஸ்வாமீ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, June 5, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 24

நிமஜ்ஜதோSநந்த 4வார்ணவாந்த

சிராய மே கூலமிவாஸி லப்34: | 

த்வயாபி லப்34ம் 43வந் இதா3நீம் 

அநுத்தமம் பாத்ரம் இத3ம் 3யாயா: || 



ஜீவன் தன் உண்மை இயல்பு பற்றிய ஞானம் ஆகிய ஆத்ம ஞானத்தை இழந்து உலக வாழ்க்கையில் தோய்வதைப் பவம் என்ற சொல் குறிக்கும். பொதுவாகப் பிறப்பினால் உலகத்தில் வாழ்க்கை ஏற்படுகிறது என்னும் பொழுது கூடவே ஆத்ம ஞானமும் பிறந்த ஜீவனிடமிருந்து மறைந்து அல்லது மறந்து விடுகிறது. அங்கங்கள், அறிவின் இயக்கம் எல்லாம் ஏற்பட்ட பின்பு மீண்டும் இழந்த ஆத்ம ஞானத்தைப் பெற்றுக் கொள்வது ஒரு ஜீவனின் தலையாய வாழ்வுக் கடமையாகும். ஆனால் அதற்குள் வாழ்க்கையின் பல விஷயங்களில் அறிவும், அங்கங்களும் ஈடுபடத் தொடங்கி ஜீவனுக்கு ஆத்ம ஞானத்தைப் பற்றிய அக்கறையோ, நினைவோ கூட இல்லாமல் போய் விடுகிறது. மேலும் அறிவின் விகாரங்கள் ஆக பல வாதங்களும் ஜீவனை ஈர்க்கவே தன் சொந்த இயல்பைப் பற்றிய ஞானத்தை மீட்டுக் கொள்ளாமலேயே ஒரு ஜீவன் மரித்து விடுகிறது. மீண்டும் மீண்டும் பிறப்பு, வாழ்க்கை, அங்கங்கள், அறிவு, கவனச் சிதறல், இறப்பு என்று ஜீவனுக்குப் பவம் என்பது முடிவே இல்லாத பிறவிக் கடலாய்ப் பெருகுகிறது. எப்பொழுதேனும் கஷ்டங்களினால், தெய்வ அருளால் ஜீவனுக்கு உணர்வு தோன்றித் தன் சுய இயல்பை உணரும் போது இங்ஙனம் கடலில் தத்தளித்த தான் தெய்வ அருளால் கரையேறியதாய் உணர்ந்து நன்றியை உணர்கிறது. இதை நன்கு புரிந்து கொண்டால் இந்தச் சுலோகத்தின் சுவை புரியும். 

பவம் ஆகிய கரைகாணாக் கடலில் அழுந்தும் நான் நெடுங்காலம் கதியின்றி அலைந்தேன். காலம், தேசம், பொருள் பற்றிய எல்லைகள் எதுவும் அற்ற அநந்தா! நல்ல வேளையாகக் கலங்காக் கரையாக நீ தென்பட்டாய்! பிழைத்தேன். என்னுடைய தகுதி என்ன என்று பார்க்காதே! ஒன்றுண்டு என் தகுதி. உன்னுடைய தயை என்னும் உயர்ந்த குணத்திற்குச் சரியான ஆள் கிடைக்காமல் நீயும் தேடிக் கொண்டிருந்தாய் அல்லவா? என்னை விட்டால் அந்தத் தயைக்கு உரிய சரியான ஆள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். எனக்குக் கரை கிடைத்து விட்டது என்று நான் மகிழ்வது போல், உனக்கும் தயைக்கு ஆள் கிடைத்து விட்டது என்று நீயும் மகிழலாம் அல்லவா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, June 4, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 23

நிந்தி3தம் கர்ம தத3ஸ்தி லோகே 

ஸஹஸ்ரசோ யந்ந மயா வ்யதா4யி

ஸோSஹம் விபாகாவஸரே முகுந்த3 

க்ரந்தா3மி ஸம்ப்ரதி அக3திஸ் தவாக்3ரே || 



இதான். பெரியவர் பெரியவர்தான்! உயர்ந்த சாத்திர நுட்பங்களுக்குப் பாசுரம் போடுவது இருக்கட்டும். நம்மைப் போல் விழி பிதுங்கி நிற்கும் ஜீவன்கள் என்ன சொல்லிக் கதறணும் என்று நினைக்கிறோமோ அதற்கும் கச்சிதமான பாசுரம் போடுகிறார் பாருங்கள் ! 

முக்தியைத் தரும் முகுந்தா! நிந்திக்கப்பட்ட செயல் என்று உலகத்தில் ஒன்றைக் காட்டு. அதை ஆயிரம் மடங்கு ஆயிரம் தடவை ஆயிரம் விதத்தில் என்னால் செய்யப்படாத ஒன்று இருக்காது. அதெல்லாம் நன்கு பக்குவப்பட்டுப் பலன் கொடுக்க இருக்கும் இப்பொழுது, இந்தச் சமயத்தில், அப்படிச் செய்த நானாகப் பட்ட அந்த நான் என்ன செய்கிறேன்? கதியே இல்லாதவனாக, உனக்கு முன்னாடி நின்று கொண்டு கதறுகிறேன், முகுந்தா! முக்தி கொடுக்கும் முகுந்தா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***