Tuesday, September 3, 2024

ஃப்ரெஞ்ச் மொழி கற்றுக் கொள்ளும் முயற்சி

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன் ஒரு முயற்சி ...

யம்மா! எதைத் தேடும் போது எது கிடைக்கிறது! ஏதோ ஒரு புத்தகத்துள் சுமார் 20 வருஷங்களுக்கு முன் நான் பிரெஞ்சு மொழி கற்க அல்லியான்ஸ் ஃபான்ஸே கழகத்தில் கற்கும் போது ஒரு மாத அறிமுக பிரெஞ்சு மொழிக்குப் பின்னர் எழுதிய இரண்டு பிரெஞ்சுக் கவிதைகள் கிடைத்தன. அப்பொழுது இருந்த கழக டைரக்டரிடம் நல்ல பாராட்டையும், ஊக்கச் சொற்களையும் பெற்றுத் தந்த கவிதைகள் இவை. துண்டு காகிதக் கிறுக்கல் என்றோ தொலைந்தது என்று நினைத்தால், இப்பொழுது மொட்டாட்டும் வந்து நிற்கிறது. மீண்டும் தவறும் முன் இணையத்தில் போட்டு வைப்போம்.

Au revoir


J’ai voulu apprendre de Francais

Je dois faire beaucoup, je sais

Pourquoi je travaille comme ca?

Ne sais-tu pas? Ne sais-tu pas?

Je reve de lire les romans

Les Romans? De qui, Monsieur?

De qui? Veux-tu savoir?

De Victor Hugo, celebre, au revoir!

*



A la compagne


J’ai fait une promenade a la compagne

A la compagne, oui, a la compagne!


J’ai vu une jolie femme

Elle est venue de la montagne


Elle etant souriante

Jeune et tres amusante

A la compagne..oui..a la compagne!

J’ai parle a la jolie femme

Elle mi a invite danser

Nous avons chante

Nous avons danse

Que s’est-il passé entre nous?

Nous avons oublie le temps

A la compagne...oui...a la compagne!


*


பிரெஞ்சு நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். ;-)



இவை தமிழில் சொன்னால் -

மீண்டும் சந்திப்போம்

பிரெஞ்சு மொழி கற்க முனைந்தேன்

நிறைய உழைக்க வேண்டும்

எனக்குத் தெரியும்

பின் எதனால் இந்தப் பாடு
பட விழைந்தேன் என்று தெரியுமா?

தெரியாதா உனக்கு?

நாவல்கள் படிப்பதில்

அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு

யாருடைய நாவல்கள்?

யார் நாவல்கள்?

யாரா? அறியாயோ நீ?

அவர்தாம் விக்டர் ஹ்யூகோ

ஆன்ற பெரும் எழுத்துலகச் செம்மல்.

மீண்டும் யாம் சந்திப்போம்.

*

நாட்டுப் புறத்திலே

நாட்டுப் புறத்திலே நடந்திருந்தேன்

நாட்டுப் புறத்திலே நான்

கண்களி கூட்டுமோர் அழகியைக் கண்டேன்

மலையினின்றும் அவள் இழிதரக் கண்டேன்

எழிலும் இளமையும் இன்னறும் நகையும்

தழைத்தன அவளிடம்

நாட்டுப் புறத்திலே நடந்திருந்தேன்

நாட்டுப் புறத்திலே நான்

அழகி அவளிடம் பேசத் தொடங்கினேன்

அவள் என்னைத் தன்னுடன் ஆட அழைத்தாள்

யாங்கள் பாடினோம்

யாங்கள் ஆடினோம்

எமக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

நிகழ்வா...காலத்தை இருவரும் மறந்து விட்டோம்

நாட்டுப் புறத்திலே நடந்திருந்தோம்

நாட்டுப் புறத்திலே யாம்.



***



2 comments: