Thursday, September 17, 2026

’குமாரு ஆசான்’ அவர்களின் கவி த்ருஷ்டியில் பக்தி

பொதுவாகவே கவிகள் என்றால் தற்காலம் பக்திக்கும் தங்களுக்கும் ஜன்ம ப்ராப்தி கூடக் கிடையாது என்பது போல் ஓர் அந்நியபாவம் காட்டுவதுதான் நவீன சைலியாகத் தமிழ் இலக்கிய உலகில் இருக்கும் பெருவழக்கம். மத நிறுவனங்கள், மத ரீதியான கெடுபிடிகள் என்பவற்றால் மனித சிந்தையானது சிறைபட்டுவிடக் கூடாது என்னும் அக்கறைதான், பக்தி என்பதையே அயல்பாவத்தோடு ஒதுக்கிவிடக் காரணம் என்று நம்புவது பெரும்பாலும் மூடநம்பிக்கையாகத்தான் போய் முடிகிறது. காரணம் நல்லது, தீயது இரண்டும் எதில் எது கலந்து கிடக்கிறது என்று அறிவதே சில சமயம் கடினமாக இருக்கும் நம் உலகில், எதையும் அணுகும் விதத்திலும் நல்லவிதம், தீயவிதம் என்ற அணுகுமுறை பிரித்தறிவும் தேவை என்று ஆகும் பொழுது, கண்மூடித்தனமாக ஒன்றை வறட்டு அடியாக நல்லது என்றோ, கெட்டது என்றோ எதிர் இயங்குவது சிறுபிள்ளைத்தனம் என்னும் போக்கு பிரபலமாக ஆகும் காலகெட்டம் நம்முடையது. இதில் பக்தி என்றால் மட்டும் இந்த முன்சாக்கிரதை உணர்த்திகள் எதுவுமின்றி, பழைய பஞ்சாங்கப் புளிக்காய்ச்சலாக நம் அந்நியப்படும் மனப்பான்மைக்கு இயல்பான நியாயம் எதுவும் இருக்கச் சாத்தியமில்லை. 

பழைய மூடநம்பிக்கைகள்தாம் அறிவுக்கு விரோதி, புதிய மூடநம்பிக்கைகள் அறிவுக்குத் தடையில்லை என்று இயற்கை விதி எதுவும் மாறி அமைந்துவிடவில்லை என்று ஓர்மைப் படுத்தும் விதமாகத்தான் குமரன் ஆசானின் முன்னுரை, அவர் எழுதிய சிவ ஸ்தோத்ரங்களுக்கு அவரே எழுதிய முன்னுரை, அமைந்திருக்கிறது. அந்த முன்னுரையில் அவர் இடும் கையெழுத்து ‘குமாரு ஆசான்’ என்றே இருக்கிறது. நூல் - ஆசான்டெ பத்யக்ருதிகள், அதில் ஆசான்டெ ஸ்தோத்ரக்ருதிகள் 1901 அவதாரிக என்று முகவுரை எழுதியிருக்கிறார் ஸ்ரீ கே அய்யப்பன் பி ஏ அவர்கள். 

சிவஸ்தோத்ரங்கள் முன்னுரையில் குமரன் ஆசான் எழுதுகிறார்: 

“ஈச்வரன்டெ அமேயங்களாய மாஹாத்ம்யங்களெ லளிதமாயி ஹ்ருதயத்தில் ப்ரகாசிப்பிச்சு நிஷ்கன்மஷமாய ஒரு அந்தராச்வாசத்தேயும் ஆநந்தத்தேயும் அநுபவிக்குன்னதின் ஆஸ்திகன்மார்க்கு மதுரங்களாய ஸ்தோத்ரங்கள்போலெ விக்ரஹங்களோ தேவலாயங்களோ ப்ரக்ருதியில் காணப்பெடுன்ன அஸங்க்யேயங்களாய அத்புதங்கள் தன்னெயுமோ அத்ர ஸுகரங்களாய ஸஹாயங்கள் அல்லென்னு பலர்க்கும் அனுபவமாயிரிக்கான் இடயுண்டு. விசிஷ்ய, தேவாலயங்கள், தீர்த்தங்கள் முதலாய பாஹ்யாலம்பனங்கள்க்குபோலும், ஈச்வரவிபூதிகளுடெ காடகளாய பரிசிந்தனகளால் வ்யாஸாதிகளாய திவ்யகவிகளுடெ ஹ்ருதயத்தில்நின்னும் ஸ்தோத்ரரூபமாயி வெளியில் ப்ரவஹிச்ச சைதன்யலஹரிகளாகுன்ன ஸர்வாராதனீயமாய ஒரு விசேஷத்தெ ஆதானம் செய்யுன்னு என்னுள்ளதும் விவேகத்ருஷ்டியில் ப்ரத்யக்ஷமாணல்லொ. 

“நித்யக்ருத்யங்களில் வ்யாபரிச்சு வின்னஹ்ருதயனாயிரிக்குன்ன ஒருவன் சாந்தங்களாய பத்யங்களேயோ கானங்களேயோ கேள்க்கும்போழ் உத்யானத்திலெ மந்தவாயு ஏல்க்குன்னதினேக்கால் எத்ரயோ அதிகவும் அப்ரதீக்ஷிதவும் ஆய ஒரு ஆச்வாசவும் ஸுகவும் அவன்டெ ஹ்ருதயத்தில் உடனே உண்டாகுன்னதும் சிலப்போழ் ம்லானமாயிருன்ன அவன்டெ முகம் ஆனந்தாச்ரு தாரகளால் தர்சனீயமாகும்வண்ணம் ஆப்லம்விதமாயிப் போககூடியும் செய்யுன்னதும் நாம் காணாருண்டல்லோ ! துக்கபூயிஷ்டமாய ஈ ஜீவலோகத்தில் அப்ரகாரம் உள்ள ஆனந்தபாஷ்பத்தின்டெ ஒரு கணம்தன்னெ எத்ர துர்லபவும், அத்தர், பன்னீர் முதலாய ஸுகோபசார த்ரவ்யங்களேக்கால் எத்ர விலயேறியதும் ஆயிரிக்கணம்.!” 

இதன் கருத்து : 

‘ஈச்வரனுடைய அறியவொண்ணா மாகாத்மியங்களைச் சுலபமாக இதயத்தில் பிரகாசப்படுத்தி, கள்ளம்கபடற்ற ஓர் உள் ஆறுதலையும், ஆனந்தத்தையும் அனுபவிப்பதில் ஆஸ்திகர்களுக்கு இனிமை நிறைந்த ஸ்தோத்ரங்கள் போலே விக்கிரகங்களோ, தேவாலயங்களோ, இயற்கையில் காணப்படுகின்ற கணக்கற்ற அற்புதங்களோ அவ்வளவு சுகமான சகாயங்கள் அல்ல என்பது பலர்க்கும் அனுபவத்தில் தெரியவந்திருப்பதற்கு இடமுண்டு. சிறப்பாக, தேவாலயங்கள், தீர்த்தங்கள் முதலான பாஹ்யமான (மன) பிடிப்புகளுக்குப் போலும், ஈச்வரனுடைய விபூதிகளின் அடியாழம்வரை பாயும் ஆழ்ந்த சிந்தனைகளால் வியாசர் போன்ற திவ்ய்கவிகளின் இதயத்தில் நின்றும் ஸ்தோத்திர ரூபமாக வெளியில் பிரவாஹம் எடுத்துப் போந்த சைதன்ய அலைகளாம், அனைவராலும் அனைத்து விதத்தாலும் ஆராதிக்கப்படும் ஒரு விசேஷத்தை மனித உள்ளத்தில் நிலைநிறுத்துமவை என்பதும் விவேகம் கூடிய பார்வையில் பிரத்யக்ஷமாய்த் தெரியுமன்றோ! 

நித்தியமான தினசரி கார்யங்களில் விழுந்துபோன இதயம் உள்ள ஒருவன் சாந்தம் மிக்க செய்யுள்களையோ, கானங்களையோ கேட்கும் போது தோட்டத்தில் நின்றவாறு தென்றல் வீசவும் படும் சுகத்தை விட எத்தனையோ அதிகமாகவும், எதிர்பார்க்காததாகவும் ஆன ஓர் ஆறுதலும், சுகமும் அவனுடைய இதயத்தில் உடனே உண்டாகும் என்பதும், சில நேரங்களில் சோர்ந்து வாடியிருந்த அவன் முகம் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகளால் பார்க்கத் தெவிட்டாத காட்சியாகிப் போகும் அளவிற்கு (ஸ்தோத்ரங்கள்) செய்யும் என்பதும் நாம் பலரும் கண்டு அனுபவித்ததுதானே! துக்கமே நிறைந்த இந்த ஜீவ லோகத்தில் இந்தப் பிரகாரம் ஆனந்தக்கண்ணீர் ததும்பும் ஒரு கணம் தானும் எத்தனை துர்லபமானது! அத்தர், பன்னீர் முதலான சுகத்திற்கு உதவும் திரவியங்களை விடவும் எத்தனை விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும் !’ 

இது குமரன் ஆசான் தாம் எழுதிய சிவஸ்தோத்திரங்கள் என்பதற்கு முன்னுரையாக எழுதியதில் சில வரிகள். ஆசானுடைய இத்தகையதான சைதன்ய அதிர்வுகள் எதன் காரணமாக உருப்பெற்றிருக்க வேண்டும் என்று ஊஹம் செய்யும் ஸ்ரீ கே அய்யப்பன் தமது முகவுரையில் அஃது ஆசான் தம் பால்யம் தொட்டே ஸ்ரீநாராயண குருவின் சிஷ்யனாக இருந்ததுதான் என்று  கருதுகிறார். ஸ்ரீஅய்யப்பன் எழுதுவது: 

“ ஆசானும் ஒரு பக்தனாயிட்டு ஜீவிதயாத்ர துடங்கி. அது ஈழவருடெ இடயில் ஒரு வலிய மத உணர்வ்விண்டெ காலமாயிருன்னு. அது ஸ்ரீநாராயண குருஸ்வாமியுடெ உல்க்ருஷ்டவும் நிர்ம்மலவுமாய ஸன்னியாஸத்தின்டெ த்ருஷ்டாந்தம் ஜனங்களெ சக்தியாயி ஆகர்ஷிச்சு துடங்கிய காலவுமாயிருன்னு. ஆசான் பால்யத்திலேதன்னெ ஸ்வாமியுடெ சிஷ்யனாயி. ஸ்வாமியுமாயுள்ள பந்தம் ஆசான்டெ ஜீவிதத்தெ ஆகெ ஸ்பர்சிச்சு அதினு கதிமாற்றம்தன்னெ உண்டாக்கியிரிக்கணமென்னாணு ஊஹிக்கேண்டது.” 

மலையாளத்தின் மூன்று கவியரசர்களில் ஒருவராகக் கருதப்படும் குமரன் ஆசான் நவீன இலக்கியத்திற்குச் சொல்ல வருவது என்ன? பழைய மூடநம்பிக்கைகளைத் தவிர்த்து அறிவை அதன் நேரிய பாதையில் செலுத்துவது முக்கியம் என்பதைப் போன்றே அந்த அளவுக்கு முக்கியமானது நவீன மூடநம்பிக்கைகளிலிருந்தும் அறிவையும், ஆன்மத் தெளிவையும் காத்து நிறைவை நோக்கிப் பயணிப்பதும் மிக மிக முக்கியமானது ஆகும் என்பதுதானே? அதுதானே ஸ்ரீநாராயண குருவின் சந்தேசம் பலன் தரும் மார்க்கமும்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment