Tuesday, March 1, 2016

குழந்தை - (சிறுகதை)

சுசிம்மா! அங்க போகாத 

ஐயய்ய! பாரு 
துருப்பிடிச்ச குழாய்ல கையை வைச்சு...சு சுச் .. எவ்வளவு அழுக்கு பாரு... 

வணக்கம் சார். காத்தால போன் பண்ணியிருந்தேன். ... 

ம் வாங்க வாங்க. ...
உங்க விஷ்யம் சொல்லியிருக்கேன். சிறிது நாட்களில் முடிவாயிடும்....இதெல்லாம் எதுக்கு

இல்லை சார்.....பாப்பாவுக்கு...... 

அதெல்லாம் அவ வாங்க மாட்டா...
இல்லம்மா.. சுசி... 

கண்ணால் வாங்கிக் கொண்டும் கையால் வேண்டாம் என்று சொல்லியபடியும் வாயை இறுக்க மூடியபடி நடந்தது சுசி

என்ன சார்....வாங்க மாட்டேங்குது.....ஐயோ,.... 

அவளுக்கு வீட்டில் பண்ணதுதான் பிடிக்கும். கடையில் வாங்குவது எதுவும்....... 

சுசி அங்கிருந்தபடி அந்தக் கைப்பொருளை ஒரு நோட்டம் விட்டது ஒரு நொடி கண்ணை நிறுத்தாமல். அங்கிருந்தால் தேவையற்ற அல்லாடலுக்குத் தானும் தன் பெயரும் ஆளாகும் என்பதைத் தவிப்பதுபோல்அம்மாஎன்று சொல்லியபடியே சென்ற சுசியின் புராணம் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. ஒரு நிலையில் உள்ளே சென்ற சுசி, அது மறந்து போய், திரும்ப அந்தப்பக்கம் வந்தபோது தந்தையின் விவரிப்புக்குப் பலம் சேர்ப்பது போல்வெளி பொருள்களைச் சாப்பிடக் கூடாது. வயிற்றுல புண் வரும்என்று உபதேசித்துவிட்டுச் சென்றதும்தான் அந்தப் புராணம் ஓய்ந்தது

வந்தவர் கொண்டு வந்த பொருளை ஏதோ மறந்து விட்டுச் சென்றவர் போல் ஒரு வழியாக நழுவிவிட்டார். அதை அங்கிருந்து எடுக்காமலேயே நெடுநேரம் விட்டுவைத்துக் கிடந்தது

சுசி அங்கும் இங்கும் பல தடவை போய்வந்து போய்வந்து அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமலேயே அதன் பக்கத்தில் கிடந்த பேப்பர், தன் புத்தகம் எல்லாவற்றையும் எடுத்து வைத்து என்ன என்னவோ செய்தாலும் அதன் பக்கம் மட்டும் கண் போகவில்லை

திடுதிப்பென்று கண்ணில் பட்டது போல் அதை எடுத்து, ‘ஐயய்யோ அந்த அங்கிள் இதை வைத்துவிட்டுப் போய்ட்டார்ர்ர்ர்என்று கண்டுபிடித்துக் கொடுத்துப் பார்த்தது

அது போகட்டும் அங்கேயே இருக்கட்டும்’ 

இதை வெளில தூலப் போட்ரவா...?’ 

வேணாம் வேணாம் அப்பறம் அந்த அங்கிளைப் பார்த்துக் கொடுத்துக்கலாம்’ 

அவா ஆத்துக்குப் போயா?’ 

நீ இன்னிக்கு வீட்டுப் பாடம் செஞ்சியா?’ 

சிக்னல் ரிஸீவ்டு. இனி அதைப பற்றி நோண்டிக் கேட்கக் கூடாது. ஏதோ ரைம்ஸ் ராகத்தை கோணல் மாணலாக வாயைச் சுளித்துக்கொண்டு ஆள்காட்டி விரலை சுவர், நாற்காலி, டேபிள் என்று அதே வரிசையில் உளள அனைத்தின் மீதும் இழுத்துக் கோடிட்டவாறே அவன் மீதும் அந்த ரேகையைத் தொடர வந்த போது நல்ல வேளையாக செல் ஒலித்தது

அப்புறம் அவன்செல்வந்தன் ஆனான். சுசி விடுதலை பெற்ற பறவைபோல் கைகளை இறக்கையாக்கி பறக்கும் பாவனையில் எங்கோ ஓடிச்சென்றது

சுசீ....... அம்மா கெடுபிடிக் குரல்....

அப்பா கெடுபிடி தடுக்கும் மூங்கில் கழி போன்றது. வேறு காரணத்திற்காக விலகும் போதோ, அல்லது அதிலேயே ஊஞ்சலாடியபடி கீழே விழும் பாவனையில் தரை மட்டமாக நகர்ந்து இந்தப் பக்கம் வந்தோ தப்பிவிடலாம். ஆனால் அம்மா கெடுபிடி என்பது ஆளைச் சுற்றும் கொடி போன்றது. கைகாலை நகர்த்துவதே மிகவும் கஷ்டம். தம் கட்டி உடலை இளக்கி ஒல்லியாக்கி உருவிக்கொண்டுதான் வரவேண்டும். முடியாமலும் போகலாம். அப்பொழுது முழு மனத்தோடு படிந்து போய் நெகிழ்வாக்கி அதை அடுத்த சலுகைகளுக்கு அச்சாரமாக ஆக்கிக்கொள்ளலாம்

சுசி ஈஸ் குட் கேர்ல்

சுசி ! அப்பாவைக் கூப்பிடேன் சாப்பிட்றதுக்கு

அப்பா!.....சொன்னதும் கேட்கும் வேகத்தில், எதற்கோ பதிலாக இரைந்து கூப்பிட சந்தர்ப்பம் வாய்த்த ஊக்கத்தில் சென்ற சுசி, கண் ஓட்டத்தில் அந்தப் பொருள் பட்டுவிடவே, மெதுவாகஅப்பாஎன்று ஒரு முறை கூப்பிட்டுவிட்டுத் திரும்ப ஏதோ விரட்டுவதுபோல் ஓடிவந்து 

அம்மா! அப்பா செல் பேசிண்ட்ருக்கா. வரேன்னு கையாட்டினா’ 

அந்தத் தட்டையெல்லாம் கொஞ்சம் அலம்பிப் போடும்மா! சமத்தோல்லியோ.....’ 

அம்மா கெடுபிடி குழைந்து இனிமையாக....அப்பாடா இப்படியே எப்பவும், இருந்தால்......எங்கோ பாத்ரூமில் இருந்து கேட்டாலும் எவ்வளவு பக்கத்தில் அரவணைப்பாய்.....

சரிம்மா....’ 

போய் சிங்க்கில் போட்டு ஒவ்வொன்றாக அலம்ப எடுக்கும் போது...அது என்ன காட்சி....ஐயய்ய்ய எவ்வளவு அழுக்கு....அப்படியே கன்னங்கரேல்னு கசடுக் குழம்பு....கொஞ்சம் காப்பிப் பொடித் தூள் வடிகட்டினதும் கலந்து....எண்ணை கலர் கலர் இழைகளாகித் தண்ணீரோடு இழைந்து கசடுகளின் இடுக்கில் நெளிந்து குழைந்து சிங்க் ஓட்டையில் போய் விழுந்து..... 

திரும்ப பார்த்தால்...அப்பா இன்னும் செல் போனில்....பாத்ரூமில் இப்பொழுதுதான் தண்ணீர் மக்கில் மொண்டு கொட்டும் ஒலி தொடங்கியிருக்கிறது. வேண்டிய அவகாசம் இருக்கிறது. அதற்குள் இதை ஒரு கை பார்த்துவிடலாம். அந்த கலர் எங்கிருந்து வருகிறது? ஐய என்ன இந்தக் கருப்புக் கசடு? ஐயோ என்ன சாஃப்டா இருக்கு! அட உள்ள ஷைனிங்கா ஒரு தோல் தக்காளியா? இன்னும் அப்படியே இருக்குமா? கண்கள் அப்படியும் இப்படியும் ஓரங்களுக்குப் போய்வந்தது. தக்காளித் துண்டு கையின் உபயத்தில் வாயில். து து து..... 

அதற்குள் செல் நின்று விட்டது போல் இருக்கிறது

ஓகே ஓகே ...நான் நாளைக்குப் பண்றேன்...ஷ்யூர்...இல்லை இல்லை நோ ப்ராப்ளம்..... 

சுசீ !....... 

அப்பா! ப்ளீஸ் கம் ஹியர்.....இங்க பாரு...... 

என்னடா பண்ணிண்ட்ருக்க?....ஐய... 

கையைக் கழுவி விடு. இந்த அம்மா பாரு. எப்படி அழுக்கைப் போட்டு வச்சு..ஐய டர்டி.... 

நீ எண்டா அங்க போய் கையை வச்ச

இல்லப்பா அம்மாதான் தட்டெல்லாம் அலம்பிப் போடுன்னா...... தட்டை அலம்பிப் போடலாம்னா கீழ விழுந்துடுத்து.....எடுத்தா ஒரே அலுக்கு.....ஐய.......

இவுளுக்கு சுத்தமா அறிவே கெடையாது......இரு இரு இப்படிக் கையைக் காட்டு.....

அப்பா நீ நகர்ந்துக்கோ ...உன் வேஷ்டியெல்லாம் ஆயிடும்....

பரவாயில்லம்மா அப்பா அப்பறம் குளிச்சுடுவேன்....

ஐய மேல பட்டா அப்பறம் ஜொரம் வரும்....உனக்கு டாக்டர் ஊச்சி போடுவார்..... 

ஏன் கொழந்தையை தட்டை அலம்ப சொல்ற? நான் தான் வந்துண்டே இருக்கேனே

இல்லப்பா கை தவறி விழுந்துடுத்து.... 

ஐயோ சாரி கண்ணா....அதைக் கழுவிடணும்னு நெனச்சேன், பைத்தியக் காரி மறந்துட்டு போயிட்டேன்....மேல ஆயிடுத்தா?...... 

இல்லம்மா இபிடீ எடுத்தேன் உள்ள விழுந்துடுத்து. அப்படீ மேல பிடிச்சு எடுக்கலாம்னு பார்த்தா கையில் பட்ருத்து....உடனே அப்பாவைக் கூட்டேன்.... 

ஐயோ சமத்து. ......சுசி ஈஸ் குட் கேர்ல்....

அப்பா ஈச் குட் அப்பா.... 

அப்ப அம்மா

அம்மா ஈஸ் குட் அம்மா...... 

ஹஹஹஹஹ ஹிஹிஹி ஊஉ  

பொல்லாது பொல்லாது பொல்லாது......

No comments:

Post a Comment