Tuesday, October 15, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 03

3000 பொது யு. மு. என்ன அது பொது யு மு? கி மு, கி பி என்று காலக் கணக்கைச் சொல்வதுண்டு. கி பி என்பதைப் பொதுயுகம் என்றும் குறிப்பிடுகிறார்கள். கி மு என்பதைப் பொதுயுகத்திற்கு முன்னர் என்றும் குறிப்பிடுகிறார்கள். 3000 கி மு என்றும் சொல்லலாம். அதாவது நமக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அஸிரியா, பாபிலோனியா என்ற பகுதிகளில் வாழ்ந்த ஒரு பக்தர் தாம் வணங்கும் தாய்த் தெய்வத்தை, தெய்வங்களுக்கெல்லாம் தலைமையான தேவியாக விளங்கும் அன்னைத் தெய்வத்தை வேண்டுகிறார். 

களிமண்ணைச் சுட்டுப் பலகையாக ஆக்கி அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகளில் இருந்து, அந்தப் புரியாத எழுத்துகளை ஒருவாறு கண்டுபிடித்து, அந்த எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த பலப்பல விஷயங்களில் ஒன்றாக இந்தத் துதி வருகிறது. நிச்சயம் இந்தத் துதியைப் பாடியவரைப் பற்றிய தகவல் இல்லை. இவை அச்சுக்கு வருவதற்குள் பலபேர்கள் கடலைக் கடந்து, மலையைப் புரட்டி என்னன்னவோ செய்து பின்னர்தான் நூலாக ஆகியிருக்கிறது. இன்று சர்வ சாதாரணமாக நானும் எடுத்துக் காட்டி எழுதுகிறேன். நீங்களும் படிக்கிறீர்கள். ஆனால் இவையெல்லாம் முதல் வெளிச்சம் காண்பதற்குள் எத்தனை இருட்டைக் கடந்து வந்துள்ளன! ஆனாலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிரார்த்தித்த அந்தப் பக்த இதயம் இன்று நம்மோடு பக்கம் நின்று பேசுவதைக் காணலாம். 

“O mother of the gods, who fulfills their commands, O lady of mankind, who makes the green herb to spring up, who created all things, who guides the whole of creation, O mother Ishtar, whose side no god can approach, O exalted lady, whose command is mighty, a prayer will I utter. That which appears good unto her, may she do unto me. O my lady, from the days of my youth I have been much yoked to misfortune. Food have I not eaten, weeping was my nourishment. Water have I not drunk, tears were  my drink. My heart never rejoices, my spirit is never glad. 

“ I, thy servant, full of sighs, cry unto thee. Whosoever has sinned, thou acceptest his fervent prayer. The man on whom thou lookest in pity, that man lives, O ruler of all things, lady of mankind, O merciful one, whose turning is propitious,, who acceptest supplication. 

“Beside thee, there is no deity that guides aright. In justice look on me with pity and accept my supplication. Declare my forgiveness and let thy spirit be appeased. When, O my lady, will thy countenance be turned? I moan like the doves, I satiate myself with sighs.” 

யார் வேண்டுதல் பாடுவது? “That which appears good unto her, may she do unto me.” என்ற குரல் யாருடையது? பாரதியார் எப்பொழுது அங்குப் போனார்? 

யாது மாகி நின்றய் - காளீ! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்மை வாழ்க்கை யெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.” 

”நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி 

நலத்தை நமக் கிழைப்பாள் 

அல்லது நீங்கும்..” 

என்று பாடும் பாரதிக்கும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அஸிரிய பாபிலோனியப் பிராந்தியத்தில் இருந்த பக்தருக்கும் என்ன தொடர்பு? 

சண்டீ என்னும் துர்க்கா ஸப்தசதீ பாடுகிறது: “துர்க்கையே! நின்னைச் சரணடைந்த பேர்களை விபத்து அண்டுவதில்லை. நின்னை அண்டியவர்கள் பிறரால் அண்டி அடையப்பட்டு ஆதரவாக விளங்குகிறார்கள்” 

“த்வாம் ஆச்ரிதாநாம் ந விபந் நராணாம் 

த்வாம் ஆச்ரிதா ஹி ஆச்ரயதாம் ப்ரயாந்தி”

பாபிலோனிய பக்தர் பாடுகிறார்: 

“O MY GOD, whom I know and whom I know not, my sins are many,
great are my transgressions.
O my goddess, whom I know and whom I know not, my sins are
many, great are my transgressions” 

“தனக்கும் தன் தன்மை அறிவரியானை” என்கிறார் நம்மாழ்வார்.

பாரதியின் குரல்: 

“சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு 

சொல்லும் அவர்தமையே 

அல்லல் கெடுத்து அமரர்க்கு இணை ஆக்கிடும்..” 

O my lady, from the days of my youth I have been much yoked to misfortune. Food have I not eaten, weeping was my nourishment. Water have I not drunk, tears were  my drink. My heart never rejoices, my spirit is never glad. I, thy servant, full of sighs, cry unto thee. ” என்ற பாபிலோனிய இதயத்தின் தாபம் 

“ஊரிலேன் காணி இல்லை; உறவு மற்றொருவர் இல்லை 

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன், பரமமூர்த்தி.. 

“மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை 

சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா. 

புனத்துழாய் மாலையானே ! பொன்னிசூழ் திருவரங்கா! 

எனக்கு இனி கதி என் சொல்லாய்!..” (திருமாலை)

என்று கதறும் திருவரங்கத்தாரின் குரலோடு ஒத்திசை எழுகிறதே எப்படி? ஒற்றை மானிடம்தான் ஓராயிரம் கோடி குரல்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருக்கிறதோ? எல்லாக் குரல்களும், எக்காலத்தும் லௌட்ஸ்பீக்கர்களாக அந்த ஆதிக் குரலைக் கடத்தியும், பரப்பியும் செய்வனவோ! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


1 comment: