சுமார் 334 வருஷங்களுக்கு முன்னர் ஒரு மகான் இருந்தார். அவரின் பெயர் ஸ்ரீமான் வாலப்பிரமசரிய இராமவிரதர் என்பதாகும். இஃது அவருக்குச் சிறப்புப் பெயாராக அமைந்தது. அவரது இயற்பெயர் ஸ்ரீவேங்கடத்துறைவான் கவிராயர் என்பதாகும். வேளாளர் குலத்தில் உதித்தவராய் வாழ்க்கை முழுவதும் பிரமசரிய விரதமே பூண்டு, கல்விக் கடலாய், இலக்கண இலக்கியங்களை நல்லாசிரியர்பால் ஐயந்திரிபறக் கற்று, ஸ்ரீராமபிரான் மீது அசஞ்சல பக்தி பூண்டவராய், ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ உ வே ஆத்தான் ஆசாரியர் என்பவரிடத்தில் ஆச்ரயித்துப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, திவ்யப் பிரபந்தங்களும், அவற்றின் வியாக்கியானங்களும், ஸ்ரீவைஷ்ணவ ஸத்சம்பிரதாய கிரந்தங்களையும் ஆசாரிய ஸந்நிதியில் கேட்டுத் தெளிந்து, பிரபந்ந அனுஷ்டானத்தில் மிக்கவராய், வாலபிரமசரிய ராமவிரதர் என்னும் சிறப்பு பெயரும் பெற்று விளங்கினார். ஆழ்வார் திருநகரியில் ஆழ்வாருக்குத் திருமஞ்சன கைங்கரியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவராய் இருந்தார்.
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Tuesday, September 1, 2020
மாறன் கோவை
அத்திகிரி அருளாளரின் அழகு!
அத்திகிரி அருளாளரின் குணங்களைக் கூறும் அழகே தனிதான், ஸ்ரீவேதாந்த தேசிகர்:
கந்தன் திருவருள்
’குழகனை அழியாக் குமரனை, அட்ட
ஆழ்வார்களின் பெருமை
ஆழ்வார்களின் பெருமை அளவிடற்கரியது. ஆழ்வார்கள் என்ற சொல்லின் பொருள் யாது? என்பதை திருமழிசை கோயில் கந்தாடை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி விளக்குகிறார் தமது பழநடை விளக்கம் என்னும் நூலில் :
ஸாதுக்களின் உலகம்
ஸாதுக்களின் உலகம் அலாதியானது. சிறுவயதிலேயே தந்தை, பெரியப்பா, தந்தையின் நண்பர்கள் இவர்கள் பேசும் பெரும் விஷயங்களையே வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பதே இன்பமாக இருந்தவனுக்கு சாதுக்களோடு ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் பரஸ்பரம் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டும், பின்னர் அவற்றை மனத்தில் நினைத்த படியும் இருப்பது மிகவும் இன்பமாக இருப்பது என்றால் எவ்வளவு பட்டிக்காடு என்பதுதான் என்னைப் பற்றிய அறிய வேண்டிய செய்தி. ஆனால் நவநாகரிக உலகில் பட்டிக் காட்டிற்கு என்ன வேலை? தெரியவில்லை. ஏதோ நடுவாந்தரத்தில் வைத்து அவன் நடத்தும் நாடகம். அல்லது ஒரு ஸ்ட்ரீட் தமாஷா. ஆனால் நாம் நினைப்பதுதான் நம் தகுதி ஆகிவிடுமா? நம் யோக்கியதை என்ன என்பதை அவளல்லவோ அறிவாள்! என்னைப் பற்றி ஓவராக நான் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கோ பார்த்தால் பழைய சாக்ஸை எடுத்துச் சுருட்டி ஒளித்து வைத்துக் கொண்டிருப்பேன். அது நாறுகிற நாற்றம் எனக்கு உறைக்காது. வைத்த இடத்தில் நன்றி என்று இருப்பது உத்தமம் என்பது புரிகிறது. ஆயினும் யூட்யூபில் ஸ்ரீராமகிருஷ்ண மட சாதுக்களின் பரஸ்பர பழைய நினைவுகளைக் காணவும் கேட்கவும் செய்யும் போது ஓர் ஏக்கம், கண்ணீர் பூசத்தான் செய்கிறது. யார் யாருக்கு எந்த வழி எங்கு கிளம்பி எங்கே போகிறது என்று யாரே அறிவார் ஆனந்தமயி அவளை அன்றி!
பக்தி யோகம் என்றால் என்ன?
நாம் ‘பக்தி யோகம்’ என்றால் ஒரு கருத்தை மனத்தில் கொண்டிருக்கிறோம். விக்ரஹ ஆராதனை என்றால் ஒரு கருத்தை மனத்தில் வைத்திருக்கிறோம். இந்தக் கருத்துகள் எல்லாம் பெரும்பாலும் போகிற வாக்கில் பலர் பலவிதமாகச் சொல்ல முயற்சிப்பதன் இடையில் பல அபிப்ராயங்களின் சராசரிக் கருத்தாய் ஒரு வடிவில் நம் மனத்தில் படிந்தவை. அவசர அடி உலகில் இஃது இயல்புதான் என்றாலும் நாம் பல கருத்துகளை வாழ்க்கையின் எப்பகுதியிலேனும் மீண்டும் எடுத்து நாம் கொண்ட கருத்து மிகச் சரியானதுதானா என்று சரிபார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு என்றுமே உண்டு. தெளிவற்ற மேம்போக்கான கருத்துகளே ஏற்படக் கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தத் தெளிவின்மையே அசைக்க முடியாத தீர்மானமான கருத்து என்ற அடம் நம்மிடம் ஏற்படாமல் இருக்க நாம் தொடர்ந்து இந்த வீட்டுப் பாடம் செய்தே தீர வேண்டும். சொல்லப் போனால் இன்றைய சூழலில் நம்மால் இயன்ற தார்மிக வழி இதுவாகும். ஞானத் தெளிவு பெறுவதற்கான உச்சக் கட்ட சாத்தியங்களைச் சூழவும் வைத்துக் கொண்டு நாம் சாக்கு போக்கு சொல்ல முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் கருத்துத் தெளிவின்மை என்பதாகும். இவ்வாறு எனக்குத் தோன்றுவதற்குக் காரணம் கபிலர் தம் தாயான தேவஹூதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய தாய் எத்தனையோ ஆத்மிக விஷங்களைத் தம் மகனிடமிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறார். தம் தாய்க்கு கபிலர் அளிக்கும் விளக்கமாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருவது இந்தப் பகுதி:
ஷண்முக வழிபாடும் வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரமும்
தெய்வ வழிபாடுகள் மிகவும் புராதனமானவை. வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரத்தில் குஹன், ஷண்முகன், கார்த்திகேயன் வழிபாடும், குஹாலயம் பற்றிய குறிப்பும் வருகிறது. புஷ்பங்கள், அப்பம், தக்ஷிணை முதலியன எடுத்துக் கொண்டு போய், பாலனையும் குஹாலயத்திற்கு அழைத்துச் சென்று நடத்தும் வழிபாடு, அர்ச்சனை, மந்திர உச்சாடனம் பற்றிப் பேசுகிறது வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் (ப்ரச்னம் 3 காண்டம் 22). அதே வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் ப்ரச்னம் 4, காண்டம் 10 ல் மிக விரிவாக விஷ்ணு பூஜையைப் பற்றிய விவரிப்பும் வருகிறது, விஷ்ணு அர்ச்சனம் என்றே அப்பகுதி தொடங்குகிறது. வைகானஸ ஸூத்ரங்கள் பற்றி போதாயனரும் குறிப்பிடுகிறார் என்பதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் வைகானஸரின் காலம் பொது யுகத்தின் முன் 600க்கு முந்தையதா? அல்லது காலண்டு 300 பொது யு பின் என்று கீழ் எல்லை வகுப்பதா? கால ஆய்வுகள் ஒரு புறம் இருக்க ஸ்கந்தன், ஷண்முகன், குஹன் ஆலயம் பற்றியும், அங்கு சென்று ஒரு தந்தை தன் பாலனுக்காகச் செய்யும் பூஜைகளும், அதே நேரத்தில் விஷ்ணு பூஜை என்னும் விரிவான பகுதியும் ஸநாதநமான தர்மத்தின் ஆணிவேர்க் கருத்தான ‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ என்பதையன்றோ காலம் காலமாக நமக்கு உணர்த்துகிறது.