Tuesday, September 1, 2020

கந்தன் திருவருள்

 ’குழகனை அழியாக் குமரனை, அட்ட

குணத்தனைக் குறித்திடல் அரிதாம்
அழகனைச் செந்தி லப்பனை மலைதோறு
ஆடல்வாழ் அண்ணலைத் தேவர்
கழகனைத் தண்டைக் காலனைப் பிணிக்கோர்
காலனை வேலனை மனதிற்
சழக்கிலார்க் கருளும் சாமிநா தனைத்தென்
தணிகையில் கண்டிறைஞ் சுவனே.’
என்று கந்தனை, குமரனை துதிக்கின்றார் ஸ்ரீராமலிங்க வள்ளலார் சுவாமிகள்.
காலையில் கந்தசஷ்டிக் கவசம் டிவியில் பார்த்துக் கேட்பது மனம் நிம்மதியைத் தருகிறது. ஸ்ரீதேவராய சுவாமிகள் பகர்ந்த அற்புதமான துதி இதுவாகும்.
‘சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மையல் நடம்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக..’
என்று ஆரம்பித்தால் மனம் அடங்கி அவன் அபிஷேகத்தைக் காணத் தொடங்கிவிடுகிறது.
‘எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே.’
என்ற வரிகளின் உருக்கம் சொல்ல முடியாது.
‘குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்ற
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ! போற்றி’
***

No comments:

Post a Comment