Tuesday, September 1, 2020

அத்திகிரி அருளாளரின் அழகு!

 அத்திகிரி அருளாளரின் குணங்களைக் கூறும் அழகே தனிதான், ஸ்ரீவேதாந்த தேசிகர்:

‘வேரொப்பார் விண்முதலாம் காவுக்கெல்லாம்
விழியொப்பார் வேதம் எனும் கண் தனக்குக்
காரொப்பார் கருணைமழை பொழிந்தி டுங்கால்
கடலொப்பார் கண்டிடினும் காணாக் கூத்தால்
நீரொப்பார் நிலமளிக்கும் தன்மை தன்னால்
நிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்கும் நேரால்
ஆரொப்பார் இவர் குணங்கள் அனைத்தும் கண்டால்
அருளாளர் தாம் எனினும் தமக்கொவ் வாரே.’
***

No comments:

Post a Comment