உயிருக்குயிராய்ப் பழகிய நண்பர்கள். உறவின் உரிமையில் கெழுமிய சொந்தங்கள். ஓருயிருக்கு இரண்டு உடல் என்னலாம்படியான சகோதர பாசங்கள். ஆனால் காமத்துப்பால் ஒவ்வோர் உயிரையும் தன் இன்பத்தை நாடி ஓடும் ஓட்டத்தில் தனிமையாய் ஆக்கி, நட்பு, சொந்தம், உடன்பிறப்பு அனைத்தையுமே தொந்தரவாய்க் கருத வைத்து விடுகிறது. ஆனால் ஏதோ ஒரு நல் வாய்ப்பில், ஜனார்த்தனன் கண்கள் அமலங்களாக விழிக்கும் பார்வையில் படும் கணத்தில் ஒரு ஜீவன் திடீரென பகவானின் நினைவு ஏற்படத் தான் அதுவரை அலைந்தது எல்லாம் திசை மாறிக் கடவுளை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. காமம்தான் பெரிய வேகம் என்று நினைத்தால் அந்த வேகத்தையும் அர்த்தம் அற்றதாக ஆக்கி ஓர் ஆகர்ஷணம் ஆராவமுதன்பால் தள்ளுகிறது.
ஆனால் என்ன ஆச்சரியம்! தான் மட்டும் தனிமையாகப் போய் அனுபவிக்க வேண்டியதுதானே அந்த ஆதிப் பெரும் சுகத்தை !
இல்லையே…..அந்த ஜீவன் உறங்கும் பல ஜீவன்களை எழுப்பி, அவற்றின் கால்களில் விழுந்தாவது அந்தப் பரம சுகத்தின்பால் போகக் கூட்டம் சேர்க்கிறது. ஏங்கி 'வையத்து வாழ்வீர்காள் !' என்று வாழும் ஜீவர்களே என்று அனைவரையும் கூட்டம் சேர்க்கிறது. உத்தம ஆனந்தமோ உயிர்களின் காலில் விழுந்து அவற்றுக்கான நித்ய வாழ்வை அடைய வைக்கத் துடிக்கின்றது.
உயிரை உயிர் அனுபவிக்கும் போது பிற உயிர்கள் பகைகளாய்த் தோன்றுகின்றன. உயிருக்கு உயிரை அனுபவிக்கும் போது அனைத்து உயிர்களும் கூடினாலும் போதாதோ என்று தோன்றுகிறது. உயிர் உடலை அனுபவிக்கும் போது தன் இயல்பு கெட்டுத் தடமாடுகிறது. உயிர் 'தான் உத்தமனுக்கு உடல்' என்பதை உணரும் போது உயிர்க்குல ஒற்றுமையை நாடுகிறது.
'அபிமத விஷயத்திற்குத் தனிமை தேட்டமாக இருக்கும்; பகவத் விஷயத்திற்குக் கூட்டம் தேட்டமாக இருக்குமிறே'
என்பது ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியானங்களில் ஆசார்ய புருஷர்களால் காட்டப்படும் ஒரு கருத்து.
***
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Friday, December 27, 2019
எம்பெருமானார் வியந்ததும், எம்பெருமானாரை வியந்ததும்!
எம்பெருமானாராகிய ஸ்ரீராமாநுஜர் ஆழ்வார் திருநகரி சென்ற போது வியந்து பாடிய வெண்பா ஒன்றை இராமாநுஜாசார்ய திவ்யசரிதை கூறுகிறது. இதுவோ பரமபதத்தெல்லை ! என்று வியக்கும் இடமும், வேதம் தமிழ் செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய் என்று விவரிக்கும் இடமும் மிக அழகு.
இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத் தெல்லை - இதுவோதான்
வேதந் தமிழ்செய்து மெய்ப்பொருட்கு முட்பொருளாய்
ஓதுஞ் சடகோப னூர்.
ஸ்ரீஆண்டாளைப் பற்றி எம்பெருமானார் அருளிய பாக்கள் -- (எம்பெருமானார்க்கே திருப்பாவை ஜீயர் என்று பெயர் வந்ததும் உண்டு)
மெல்லிய பஞ்சடி யுந்துவ
ராடையு மேகலையும்
வல்லியை வென்ற மருங்குமுத்
தார வனமுலையும்
சொல்லியல் வன்மையும் வில்லிபுத்
தூரம்மை தோளழகும்
முல்லையை வென்ற நகையுமெல்
லாமென்றன் முன்னிற்குமே.
வாழி திருப்பாவை பாடு மடப்பாவை
வாழி யரங்க மணவாளர் - வாழியவன்
மாடுநிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடுநிற்கும் வேதாந்தப் பா.
பாடு மடப்பாவை -- அழகான சொல்கட்டு. என்ன மடம்? தன் நாதனை அன்றி வேறு எதுவும் அறியா மடம். மாதவர்க்கு என்றே உணர்வாக எழும் உன்னத பக்தி. அற்புதமான வரி ‘வாழி பெரியாழ்வார் பாடுநிற்கும் வேதாந்தப் பா’. அவர் எதுவும் முயலவே வேண்டாம். வேதாந்தம் தேடிச் சென்று அவர்பாடு நிற்கும் அவருடைய பாடல்களில்.
எம்பெருமானார் மேல்நாட்டினின்று (கர்நாடகா) திரும்பியதும் திருவரங்கம் பெரியகோயிலார் பாடியது --
வையம் குருடன்றோ மாமறையும் பொய்யன்றோ
ஐய னுரைத்ததமி ழாரறிவார் - வையத்துக்கு
ஊன்றுகோ லெந்தை யெதிராசர் உத்தரித்த
மூன்றுகோல் காண்பதற்கு முன்.
ஐயன் ஆகிய நம்மாழ்வார் உரைத்த தமிழை அறியவைத்தார் எம்பெருமானார். ஐயன் உரைத்த தமிழ் அறிந்ததால் மாமறையும் உண்மை என்று வையம் ஆகிய கற்றோர் உலகம் உணர்ந்தது. மாமறை உண்மை என்று உணரவே வையத்தின் குருடும் நீங்கியது. எப்பொழுது? முக்கோல் முனிவேழமாகிய எம்பெருமானர் அவதரித்த பின்னர். நம் குருடும் ஒரு நாள் நீங்காமலா போகும்...!
***
இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத் தெல்லை - இதுவோதான்
வேதந் தமிழ்செய்து மெய்ப்பொருட்கு முட்பொருளாய்
ஓதுஞ் சடகோப னூர்.
ஸ்ரீஆண்டாளைப் பற்றி எம்பெருமானார் அருளிய பாக்கள் -- (எம்பெருமானார்க்கே திருப்பாவை ஜீயர் என்று பெயர் வந்ததும் உண்டு)
மெல்லிய பஞ்சடி யுந்துவ
ராடையு மேகலையும்
வல்லியை வென்ற மருங்குமுத்
தார வனமுலையும்
சொல்லியல் வன்மையும் வில்லிபுத்
தூரம்மை தோளழகும்
முல்லையை வென்ற நகையுமெல்
லாமென்றன் முன்னிற்குமே.
வாழி திருப்பாவை பாடு மடப்பாவை
வாழி யரங்க மணவாளர் - வாழியவன்
மாடுநிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடுநிற்கும் வேதாந்தப் பா.
பாடு மடப்பாவை -- அழகான சொல்கட்டு. என்ன மடம்? தன் நாதனை அன்றி வேறு எதுவும் அறியா மடம். மாதவர்க்கு என்றே உணர்வாக எழும் உன்னத பக்தி. அற்புதமான வரி ‘வாழி பெரியாழ்வார் பாடுநிற்கும் வேதாந்தப் பா’. அவர் எதுவும் முயலவே வேண்டாம். வேதாந்தம் தேடிச் சென்று அவர்பாடு நிற்கும் அவருடைய பாடல்களில்.
எம்பெருமானார் மேல்நாட்டினின்று (கர்நாடகா) திரும்பியதும் திருவரங்கம் பெரியகோயிலார் பாடியது --
வையம் குருடன்றோ மாமறையும் பொய்யன்றோ
ஐய னுரைத்ததமி ழாரறிவார் - வையத்துக்கு
ஊன்றுகோ லெந்தை யெதிராசர் உத்தரித்த
மூன்றுகோல் காண்பதற்கு முன்.
ஐயன் ஆகிய நம்மாழ்வார் உரைத்த தமிழை அறியவைத்தார் எம்பெருமானார். ஐயன் உரைத்த தமிழ் அறிந்ததால் மாமறையும் உண்மை என்று வையம் ஆகிய கற்றோர் உலகம் உணர்ந்தது. மாமறை உண்மை என்று உணரவே வையத்தின் குருடும் நீங்கியது. எப்பொழுது? முக்கோல் முனிவேழமாகிய எம்பெருமானர் அவதரித்த பின்னர். நம் குருடும் ஒரு நாள் நீங்காமலா போகும்...!
***
Thursday, December 26, 2019
ஸ்ரீபாஷ்யம் தமிழ் மொழிபெயர்ப்புச் சங்கம் பற்றி ..
82 வருஷங்களுக்கு முன்னர் ஒரு ஸ்ரீவைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது, ஸ்ரீரங்கத்தில் நடந்த ஒரு முக்கியமான விஷயம்:
ஸ்ரீ உ வே காரப்பங்காடு தேசிவரதாசார்ய ஸ்வாமிகள் என்பார் அப்பொழுது ஸ்ரீரங்கத்தில் வதிந்தவராய் இருந்தார். அந்த ஸ்வாமி உடையவர் ஸந்நிதியில் தொடர்ச்சியாக ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதித்துக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட பெருமக்கள் எல்லாம் கூடி, நன்கு வடமொழி அறிந்தவர்கள், தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் என்று அனைத்து மக்களும் ஆர்வமுடன் 1930க்கு முன் இருக்கும் இராப்பத்து உத்ஸவத்தின் போது ஆயிரக்கால் மண்டபத்தில் கூடி ஒரு மீட்டிங் போட்டனர். என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்பதைச் சொல்கிறேன். அதற்கு முன் சில விளக்கங்களைச் சொல்லிவிட்டுப் பார்ப்போம்.
ஸ்ரீபாஷ்யம் காலக்ஷேபம் சாதித்தார் ஸ்ரீகாரப்பங்காடு தேசிவரதாசாரியார் ஏன்று சொன்னேனா? அவ்வாறு அவர் சாதித்த காலக்ஷேபத்தில் ஸ்ரீபாஷ்யத்திற்கான விரிவான விளக்க உரை ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் ச்ருதப்ரகாசிகை என்பது. அதை எழுதியவர் ஸ்ரீசுதர்சன பட்டர் என்னும் ச்ருதப்ரகாசிகாசாரியார். அவருக்கு நம்பெருமாள் அளித்த பெயர் வியாஸாசாரியர் என்பதாகும். அதில் மிகவும் விரிவாக ஸ்ரீபாஷ்யத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் நுணுக்கமான பொருள் செறிவை ஏடுபடுத்தியுள்ளார் ஸ்ரீசுதர்சன பட்டர். ஸ்ரீபாஷ்யம் என்பது என்ன? அதற்கு ஏன் மேலும் ஒரு விரிவான விளக்க உரை எழுதினார்?
வேத வியாசர் உபநிஷதங்களில் இருக்கும் வேதாந்த முடிவுகள் அனைத்தையும் ஒருங்குற அமைத்து ஸ்ரீகிருஷ்ணனின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உதவியோடு வேதாந்த ஸூத்திரங்கள் அல்லது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்திரங்கள் அல்லது சாரீரக ஸூத்திரங்கள் என்ற பெயரில் அருளிச்செய்தார். ஜைமினி முனிவர் யாகாதிகள், கர்ம காண்டம் என்பதைத் தொகுத்து ஸூத்திரங்களாகத் தந்தது பூர்வ மீமாம்ஸை ஸூத்திரங்கள் என்பதாகும். ஞான காண்டம் என்னும் உபநிஷதங்களின் கருத்துகளைத் தொகுத்து வேத வியாசர் தந்த இந்த ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உத்தர மீமாம்ஸை ஸூத்திரங்கள் என்று பெயர் ஏற்பட்டது. இதற்குத்தான் பல சித்தாந்தங்களைச் சேர்ந்த ஆசாரியர்கள் தங்கள் சித்தாந்ததிற்கு ஏற்ப உரைகளை எழுதினர். அவரவர்களின் வழிவந்தோர் அந்தந்த உரைகளுக்கு மேலும் விரிவுபட விளக்க உரைகள் எழுதினர். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம். சுத்தாத்வைதம், அசிந்த்ய பேதாபேதம் முதலிய பல சித்தாந்தங்களுக்கும் ஏற்ற வகையில் பல உரைவளங்களைக் கண்டது இந்த ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரங்கள் என்னும் வேதாந்தம். முழுமையாகப் பார்க்குமிடத்து வேதாந்தம் என்பது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்திரம், உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் மூன்றிற்குமான உரைக் கோவைகளும் ஒருங்கே வேதாந்த தர்சனம் என்று சொல்லப்படும்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்திற்கு ஏற்றாற்போல் உரை எழுத வேண்டும் என்பதுதான் ஸ்ரீஆளவந்தார் என்னும் பரமாசாரியாரின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறு உரை எழுத வேண்டும் என்றால் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகம சித்தாந்த நுட்பங்களைப் பொதிந்து ஏற்கனவே போதாயனர் என்பார் ஒரு விருத்தி நூல் எழுதி அது அக்காலத்திய காஷ்மீர தேசத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்தது, அதைக் கண்டு அதன் உதவியுடன் செய்தால்தான் நன்கு சிறக்கும். அந்தப் பெரும் சீரிய நற்பணியைச் செய்து முடித்தவர் ஸ்ரீராமாநுஜர். அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி எழுதிய உரையை காஷ்மீர தேசத்தில் இருந்த ஸரஸ்வதி பீடத்தில் ஏற்றுக் கொண்டாடி, ஒரு பாஷ்யம் என்பது எவ்வாறு இருக்க வேண்டுமோ அந்த இலக்கணங்கள் நன்கு பொருந்திய சிறந்த உரை என்னும் பொருள்பட ஸ்ரீபாஷ்யம் என்று அழைத்தனர். எனவே வேதாந்த ஸூத்திரங்களுக்கு ஸ்ரீராமாநுஜர் அருளிய பாஷ்யத்திற்குப் பெயர் ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீராமாநுஜருக்கும் ஸ்ரீபாஷ்யகாரர் என்று பெயர் உண்டானது.
அந்தக் காலத்தில் பொதுவாக வேதாந்தம் படிப்பவர்கள் ஏற்கனவே வியாகரணம், மீமாம்ஸை, நியாயம் என்னும் துறைகளை நன்கு கற்ற பின்னர் வேதாந்தத்தைப் படிக்கத் தொடங்குவர். இந்த நான்கு சாத்திரங்களையும் சேர்த்து சதுர் சாஸ்த்ரம், நான்கு சாத்திரங்கள் என்று கூறுவதுண்டு. இத்தகைய உரிய துணைக்கல்விகளோடு படிப்பவர்களுக்கு அவர்கள் தாமே பெரும் அறிஞர்களாகவும் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருட்கள் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பின்னால் வருவோரின் உதவிக்காக வேண்டி பெருந்தன்மையுடன் ஸ்ரீசுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கான தமது விரிவான விளக்கத்தை ஏடுபடுத்தி வைத்துப் போனார். அதற்குப் பெயர்தான் ச்ருதப்ரகாசிகை என்பதாகும்.
இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம். உடையவர் சந்நிதியில் ஸ்ரீகாரப்பங்காடு தேசிவரதாசாரியார் சுவாமி ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தோமா? அதுவும் ச்ருதப்ரகாசிகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா? அதைக் கேட்ட ஊர்ப்பெரியவர்கள் எல்லோருக்கும் ஓர் எண்ணம். வடமொழி அறிந்தார், அறியாதார் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஸ்ரீராமாநுஜ பாஷ்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு உதவியாக ஸ்ரீபாஷ்யத்தை ச்ருதப்ரகாசிகையுடன் தமிழாக்கம் செய்தால் பெரும் உதவியாக இருக்குமே என்று நினைத்துத்தான் அந்த ஆண்டு இராப்பத்து உற்சவத்தின் போது கூட்டம் போட்டனர். ‘ஸ்ரீபாஷ்யம் தமிழ் மொழிபெயர்ப்புச் சங்கம்’ என்று ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதற்குத் ப்ரஸிடெண்டாக திருப்புறம்பியம் ப்ரபன்ன வித்வான் ஸ்ரீமான் டி டி ராமஸ்வாமி நாயுடு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவரும் பேர் ஆர்வத்துடன் தமது பங்காக பெரும்பணத்தை அளித்து இன்னும் பல திவ்ய தேசங்களினின்றும் பல பண உதவியாளர்களையும் இணைத்து பெரும் முனைப்போடு செயலாற்றினார்.
பெருந்திட்டத்தின் முதற்கட்டமாக ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் நான்கு ஸூத்திரங்களுக்கான ஸ்ரீபாஷ்யம், அதன் ச்ருத்ப்ரகாசிகை என்பதை மட்டும் மொழிபெயர்ப்பது தமிழில் என்று முடிவாகியது. வேதாந்த ஸூத்ரங்களின் முதல் நான்கு ஸூத்ரங்கள்தாம் முழு நூலுக்கான முன்னுரை போன்று அமைந்த பகுதி. அந்த சதுஸ்ஸூத்ரீ (நான்கு ஸூத்ரங்கள்) என்பதற்கே பெயர் உபோத்காதம் (முன்னுரை) என்பதாகும். அந்த நான்கு ஸூத்ரங்களில் முதல் ஸூத்திரமான ’அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ என்னும் ஒரு ஸூத்திரத்துக்கே 800 பக்கங்களுக்கு மேல் அச்சுப் பக்கங்கள் வருகின்றன. இத்தனைக்கும் பெரிய சைஸ் நூல், சின்ன சைஸ் ஃபாண்ட். அதை மொழிபெயர்த்தவர் அப்பொழுது அதாவது 1930ல் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி ஸம்ஸ்க்ருதத் துறையின் தலைவராய் இருந்த ஸ்ரீ உ வே டி வி ஸ்ரீநிவாஸாசாரியர். அருமையான மொழிபெயர்ப்பு. என்ன பணி அது!
சரி விஷயம் இதோடு விட்டதா? நம்பிள்ளை சந்நிதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடை ஸ்ரீமத் உ வே ஸ்ரீநிவாஸாசாரியார் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்தே காலக்ஷேபமும் சாதித்து சாற்றுமுறையும் நடத்திவிட்டார். அதுவே மொழிபெயர்ப்புக்கான பொருள் ஒப்புநோக்கும் சோதனையாகவும் ஆகிவிட்டது. இதில் மொழிபெயர்ப்பாளர் அவ்வப்பொழுது முடிக்கும் பகுதிகள், அவருக்குத் துணையாகத் தேவைப்படும் நூல்குறிப்பு வசதிகள், தொடர்பான சிறு சிறு பங்களிப்புகளை ஒருங்குற முறைப்படுத்திப் பாதுகாத்தல் முதலிய பணிகளைச் செய்தவர் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில் பிரபந்த உபாத்யாயராக இருந்த ஸ்ரீமத் உ வே என் கே ராகவாசாரியர். பொதுவான மேற்பார்வை, மேனேஜ்மண்ட் ஆகியவற்றைச் செய்தவர் ஸ்ரீரங்கம் ஆனரரி மேஹிஸ்ட்ரேட்டாக இருந்த ஸ்ரீமான் ஆர் ஏ பங்காருஸ்வாமி நாயுடு அவர்கள். நூல் ஸ்ரீமத் உ வே சுந்தரராஜ ஐயங்கார் அவர்களின் ஸ்ரீவிலாஸம் பிரிண்டிங் பிரஸ்ஸில் வெளிவந்தது.
முதல் ஸூத்திரத்திற்கான மொழிபெயர்ப்பு 840 பக்கங்களைப் பார்த்ததும் திருச்சி அட்வகேட் ஸ்ரீ உ வே ஏ வி கோபாலாசாரியர் முதல் நான்கு ஸூத்திரங்களில் மீதம் இருக்கும் மூன்று ஸூத்திரங்களுக்கான மொழிபெயர்ப்பைத் தாம் ஒருவரே செய்து முடித்துத் தந்துவிட்டார்.
ஆக சதுஸ்ஸூத்ரீ எனப்படும் உபோத்காதமான முதல் நான்கு ஸூத்ரங்களுக்கான ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகைப் பகுதி தமிழில் இரண்டு வால்யூம்களாக 840 + 390 பக்கங்களில் வெளிவந்தன. அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து தமிழில் வேதாந்தம் என்பதில் இயற்றிய சாதனை இது நடந்தது நம் ஸ்ரீரங்கத்தில் 1930 தொடங்கி 1938 வரையில். தொடர்ந்து மற்ற பகுதிகளும் வந்தனவா என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் கூறலாம். இதில் மேலும் திருத்தமாகத் தெரிந்தவர்கள் கூறினால் நன்றி.
இன்று கிரகணம். அப்பொழுது செய்யும் செயல்கள் மேலும் மேலும் விருத்தியடையும் என்பார்கள். நம் ஸ்ரீரங்கத்து சாதனை மேலும் மேலும் தொடர்ந்தால் முன்னோர்களுக்கு இதைவிட வேறு என்ன உகப்பு! சேனைமுதலியார் சொன்னால்தான் ஸ்ரீரங்கராஜர் திருக்கண் நோக்கத்தால் அருள் எழுத்து சாத்துவாரோ!
***
ஸ்ரீ உ வே காரப்பங்காடு தேசிவரதாசார்ய ஸ்வாமிகள் என்பார் அப்பொழுது ஸ்ரீரங்கத்தில் வதிந்தவராய் இருந்தார். அந்த ஸ்வாமி உடையவர் ஸந்நிதியில் தொடர்ச்சியாக ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதித்துக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட பெருமக்கள் எல்லாம் கூடி, நன்கு வடமொழி அறிந்தவர்கள், தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் என்று அனைத்து மக்களும் ஆர்வமுடன் 1930க்கு முன் இருக்கும் இராப்பத்து உத்ஸவத்தின் போது ஆயிரக்கால் மண்டபத்தில் கூடி ஒரு மீட்டிங் போட்டனர். என்ன பேசினார்கள், என்ன முடிவெடுத்தார்கள் என்பதைச் சொல்கிறேன். அதற்கு முன் சில விளக்கங்களைச் சொல்லிவிட்டுப் பார்ப்போம்.
ஸ்ரீபாஷ்யம் காலக்ஷேபம் சாதித்தார் ஸ்ரீகாரப்பங்காடு தேசிவரதாசாரியார் ஏன்று சொன்னேனா? அவ்வாறு அவர் சாதித்த காலக்ஷேபத்தில் ஸ்ரீபாஷ்யத்திற்கான விரிவான விளக்க உரை ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் ச்ருதப்ரகாசிகை என்பது. அதை எழுதியவர் ஸ்ரீசுதர்சன பட்டர் என்னும் ச்ருதப்ரகாசிகாசாரியார். அவருக்கு நம்பெருமாள் அளித்த பெயர் வியாஸாசாரியர் என்பதாகும். அதில் மிகவும் விரிவாக ஸ்ரீபாஷ்யத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் நுணுக்கமான பொருள் செறிவை ஏடுபடுத்தியுள்ளார் ஸ்ரீசுதர்சன பட்டர். ஸ்ரீபாஷ்யம் என்பது என்ன? அதற்கு ஏன் மேலும் ஒரு விரிவான விளக்க உரை எழுதினார்?
வேத வியாசர் உபநிஷதங்களில் இருக்கும் வேதாந்த முடிவுகள் அனைத்தையும் ஒருங்குற அமைத்து ஸ்ரீகிருஷ்ணனின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உதவியோடு வேதாந்த ஸூத்திரங்கள் அல்லது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்திரங்கள் அல்லது சாரீரக ஸூத்திரங்கள் என்ற பெயரில் அருளிச்செய்தார். ஜைமினி முனிவர் யாகாதிகள், கர்ம காண்டம் என்பதைத் தொகுத்து ஸூத்திரங்களாகத் தந்தது பூர்வ மீமாம்ஸை ஸூத்திரங்கள் என்பதாகும். ஞான காண்டம் என்னும் உபநிஷதங்களின் கருத்துகளைத் தொகுத்து வேத வியாசர் தந்த இந்த ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரங்களுக்கு உத்தர மீமாம்ஸை ஸூத்திரங்கள் என்று பெயர் ஏற்பட்டது. இதற்குத்தான் பல சித்தாந்தங்களைச் சேர்ந்த ஆசாரியர்கள் தங்கள் சித்தாந்ததிற்கு ஏற்ப உரைகளை எழுதினர். அவரவர்களின் வழிவந்தோர் அந்தந்த உரைகளுக்கு மேலும் விரிவுபட விளக்க உரைகள் எழுதினர். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம். சுத்தாத்வைதம், அசிந்த்ய பேதாபேதம் முதலிய பல சித்தாந்தங்களுக்கும் ஏற்ற வகையில் பல உரைவளங்களைக் கண்டது இந்த ஸ்ரீபிரஹ்ம ஸூத்திரங்கள் என்னும் வேதாந்தம். முழுமையாகப் பார்க்குமிடத்து வேதாந்தம் என்பது ஸ்ரீப்ரஹ்ம ஸூத்திரம், உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் மூன்றிற்குமான உரைக் கோவைகளும் ஒருங்கே வேதாந்த தர்சனம் என்று சொல்லப்படும்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்திற்கு ஏற்றாற்போல் உரை எழுத வேண்டும் என்பதுதான் ஸ்ரீஆளவந்தார் என்னும் பரமாசாரியாரின் உள்ளக் கிடக்கையாக இருந்தது. அவ்வாறு உரை எழுத வேண்டும் என்றால் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகம சித்தாந்த நுட்பங்களைப் பொதிந்து ஏற்கனவே போதாயனர் என்பார் ஒரு விருத்தி நூல் எழுதி அது அக்காலத்திய காஷ்மீர தேசத்தில் ஸரஸ்வதி பீடத்தில் இருந்தது, அதைக் கண்டு அதன் உதவியுடன் செய்தால்தான் நன்கு சிறக்கும். அந்தப் பெரும் சீரிய நற்பணியைச் செய்து முடித்தவர் ஸ்ரீராமாநுஜர். அவர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின்படி எழுதிய உரையை காஷ்மீர தேசத்தில் இருந்த ஸரஸ்வதி பீடத்தில் ஏற்றுக் கொண்டாடி, ஒரு பாஷ்யம் என்பது எவ்வாறு இருக்க வேண்டுமோ அந்த இலக்கணங்கள் நன்கு பொருந்திய சிறந்த உரை என்னும் பொருள்பட ஸ்ரீபாஷ்யம் என்று அழைத்தனர். எனவே வேதாந்த ஸூத்திரங்களுக்கு ஸ்ரீராமாநுஜர் அருளிய பாஷ்யத்திற்குப் பெயர் ஸ்ரீபாஷ்யம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீராமாநுஜருக்கும் ஸ்ரீபாஷ்யகாரர் என்று பெயர் உண்டானது.
அந்தக் காலத்தில் பொதுவாக வேதாந்தம் படிப்பவர்கள் ஏற்கனவே வியாகரணம், மீமாம்ஸை, நியாயம் என்னும் துறைகளை நன்கு கற்ற பின்னர் வேதாந்தத்தைப் படிக்கத் தொடங்குவர். இந்த நான்கு சாத்திரங்களையும் சேர்த்து சதுர் சாஸ்த்ரம், நான்கு சாத்திரங்கள் என்று கூறுவதுண்டு. இத்தகைய உரிய துணைக்கல்விகளோடு படிப்பவர்களுக்கு அவர்கள் தாமே பெரும் அறிஞர்களாகவும் இருந்தமையால் ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருட்கள் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பின்னால் வருவோரின் உதவிக்காக வேண்டி பெருந்தன்மையுடன் ஸ்ரீசுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கான தமது விரிவான விளக்கத்தை ஏடுபடுத்தி வைத்துப் போனார். அதற்குப் பெயர்தான் ச்ருதப்ரகாசிகை என்பதாகும்.
இப்பொழுது நம்முடைய கதைக்கு வருவோம். உடையவர் சந்நிதியில் ஸ்ரீகாரப்பங்காடு தேசிவரதாசாரியார் சுவாமி ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் சாதிப்பார் என்று சொல்லிக் கொண்டிருந்தோமா? அதுவும் ச்ருதப்ரகாசிகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் அல்லவா? அதைக் கேட்ட ஊர்ப்பெரியவர்கள் எல்லோருக்கும் ஓர் எண்ணம். வடமொழி அறிந்தார், அறியாதார் என்ற வேறுபாடின்றி அனைவரும் ஸ்ரீராமாநுஜ பாஷ்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அதற்கு உதவியாக ஸ்ரீபாஷ்யத்தை ச்ருதப்ரகாசிகையுடன் தமிழாக்கம் செய்தால் பெரும் உதவியாக இருக்குமே என்று நினைத்துத்தான் அந்த ஆண்டு இராப்பத்து உற்சவத்தின் போது கூட்டம் போட்டனர். ‘ஸ்ரீபாஷ்யம் தமிழ் மொழிபெயர்ப்புச் சங்கம்’ என்று ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதற்குத் ப்ரஸிடெண்டாக திருப்புறம்பியம் ப்ரபன்ன வித்வான் ஸ்ரீமான் டி டி ராமஸ்வாமி நாயுடு அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவரும் பேர் ஆர்வத்துடன் தமது பங்காக பெரும்பணத்தை அளித்து இன்னும் பல திவ்ய தேசங்களினின்றும் பல பண உதவியாளர்களையும் இணைத்து பெரும் முனைப்போடு செயலாற்றினார்.
பெருந்திட்டத்தின் முதற்கட்டமாக ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரத்தின் முதல் நான்கு ஸூத்திரங்களுக்கான ஸ்ரீபாஷ்யம், அதன் ச்ருத்ப்ரகாசிகை என்பதை மட்டும் மொழிபெயர்ப்பது தமிழில் என்று முடிவாகியது. வேதாந்த ஸூத்ரங்களின் முதல் நான்கு ஸூத்ரங்கள்தாம் முழு நூலுக்கான முன்னுரை போன்று அமைந்த பகுதி. அந்த சதுஸ்ஸூத்ரீ (நான்கு ஸூத்ரங்கள்) என்பதற்கே பெயர் உபோத்காதம் (முன்னுரை) என்பதாகும். அந்த நான்கு ஸூத்ரங்களில் முதல் ஸூத்திரமான ’அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ என்னும் ஒரு ஸூத்திரத்துக்கே 800 பக்கங்களுக்கு மேல் அச்சுப் பக்கங்கள் வருகின்றன. இத்தனைக்கும் பெரிய சைஸ் நூல், சின்ன சைஸ் ஃபாண்ட். அதை மொழிபெயர்த்தவர் அப்பொழுது அதாவது 1930ல் செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி ஸம்ஸ்க்ருதத் துறையின் தலைவராய் இருந்த ஸ்ரீ உ வே டி வி ஸ்ரீநிவாஸாசாரியர். அருமையான மொழிபெயர்ப்பு. என்ன பணி அது!
சரி விஷயம் இதோடு விட்டதா? நம்பிள்ளை சந்நிதியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கந்தாடை ஸ்ரீமத் உ வே ஸ்ரீநிவாஸாசாரியார் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்தே காலக்ஷேபமும் சாதித்து சாற்றுமுறையும் நடத்திவிட்டார். அதுவே மொழிபெயர்ப்புக்கான பொருள் ஒப்புநோக்கும் சோதனையாகவும் ஆகிவிட்டது. இதில் மொழிபெயர்ப்பாளர் அவ்வப்பொழுது முடிக்கும் பகுதிகள், அவருக்குத் துணையாகத் தேவைப்படும் நூல்குறிப்பு வசதிகள், தொடர்பான சிறு சிறு பங்களிப்புகளை ஒருங்குற முறைப்படுத்திப் பாதுகாத்தல் முதலிய பணிகளைச் செய்தவர் ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில் பிரபந்த உபாத்யாயராக இருந்த ஸ்ரீமத் உ வே என் கே ராகவாசாரியர். பொதுவான மேற்பார்வை, மேனேஜ்மண்ட் ஆகியவற்றைச் செய்தவர் ஸ்ரீரங்கம் ஆனரரி மேஹிஸ்ட்ரேட்டாக இருந்த ஸ்ரீமான் ஆர் ஏ பங்காருஸ்வாமி நாயுடு அவர்கள். நூல் ஸ்ரீமத் உ வே சுந்தரராஜ ஐயங்கார் அவர்களின் ஸ்ரீவிலாஸம் பிரிண்டிங் பிரஸ்ஸில் வெளிவந்தது.
முதல் ஸூத்திரத்திற்கான மொழிபெயர்ப்பு 840 பக்கங்களைப் பார்த்ததும் திருச்சி அட்வகேட் ஸ்ரீ உ வே ஏ வி கோபாலாசாரியர் முதல் நான்கு ஸூத்திரங்களில் மீதம் இருக்கும் மூன்று ஸூத்திரங்களுக்கான மொழிபெயர்ப்பைத் தாம் ஒருவரே செய்து முடித்துத் தந்துவிட்டார்.
ஆக சதுஸ்ஸூத்ரீ எனப்படும் உபோத்காதமான முதல் நான்கு ஸூத்ரங்களுக்கான ஸ்ரீபாஷ்யம், ச்ருதப்ரகாசிகைப் பகுதி தமிழில் இரண்டு வால்யூம்களாக 840 + 390 பக்கங்களில் வெளிவந்தன. அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து தமிழில் வேதாந்தம் என்பதில் இயற்றிய சாதனை இது நடந்தது நம் ஸ்ரீரங்கத்தில் 1930 தொடங்கி 1938 வரையில். தொடர்ந்து மற்ற பகுதிகளும் வந்தனவா என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் கூறலாம். இதில் மேலும் திருத்தமாகத் தெரிந்தவர்கள் கூறினால் நன்றி.
இன்று கிரகணம். அப்பொழுது செய்யும் செயல்கள் மேலும் மேலும் விருத்தியடையும் என்பார்கள். நம் ஸ்ரீரங்கத்து சாதனை மேலும் மேலும் தொடர்ந்தால் முன்னோர்களுக்கு இதைவிட வேறு என்ன உகப்பு! சேனைமுதலியார் சொன்னால்தான் ஸ்ரீரங்கராஜர் திருக்கண் நோக்கத்தால் அருள் எழுத்து சாத்துவாரோ!
***
Wednesday, December 25, 2019
பரிபாஷைகள்
பரிபாஷைகள் பொதுவாக முதல் நிலை மொழியின் புழக்கத்தின் பின்னர்தானே எழுகிறது. பெரும்பாலும் பரிபாஷை என்பது ஒரு குழுவினரின், அல்லது ஒரு கோஷ்டியினரின் பரிமாற்றப் பேச்சு. எனவே இன்னார்தாம் இந்த பரிபாஷையை முதலில் கூறியது என்பதைப் பெரும்பாலும் நிர்ணயித்தல் கடினம். பேச்சு வழக்குகள் என்பனவற்றில் குழூஉக்குறி, சங்கேதம் என்பன பொதுவாக அமையும். பரிபாஷைகள் என்பன ஒரு சித்தாந்தம், ஓர் ஊக்கம் என்ற அடிப்படையில் பரஸ்பரம் இயங்கும் குழுவினர்கள் தம்மிடையே வழங்கும் முதல் நிலை மொழியைச் சிறப்புறச் செய்யும் ஆர்வத்தால் எழுவது. அல்லது, அறிஞர்கள் தம் துறைகளில் முதல் நிலை கருத்துகளை விளக்கவும் வகைப்படுத்தி மாட்டெறிந்து தொடர்புறுத்திக் காட்டவும் பயன்படுத்தும் கருவிமொழியாகவும் அமைவது. வியாகரணம், விளக்கநெறியாகிய மீமாம்ஸை, கலைக் கொள்கைகளை விளக்கும் காவ்ய சாஸ்திரங்கள் முதலியவற்றில் பயன்படுவது. இன்றும் technical jargon, field-specific special nomenclatures என்ற பெயரில் பல துறைகளிலும் பரிபாஷைகளின் செயல்பாடுகளைக் காணலாம். பாணினி வியாகரணத்தில் பரிபாஷைகளிலேயே மூன்று விதங்கள் இருப்பதாய் வியாக்கியானக்காரர்கள் காட்டுகின்றனர். சில ஸூத்ரங்களை பரிபாஷா ஸூத்ரங்கள் என்றே வார்த்திகம் குறிப்பிடுகிறது.
பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும். பரிபாஷை என்பதும் சரி, meta என்ற முன்னொட்டும் சரி பன்முகம் கொண்ட சொற்கள். convention, குழூஉக்குறி என்பன ஒரோவழி பரிபாஷையின் பொருள்களில் அடங்கும். ஆயினும் கன்வென்ஷன் என்பது அநாதி காலமாய் வருவதற்குத் தான் முக்கியத்வம் கொடுத்த பொருள். பரிபாஷை என்பதற்கு அஃது முழுதும் அடக்கிய பொருளன்று. குழூஉக்குறி பொதுவில் வெளிப்படுத்தாத மந்தணக் குறிப்பு (ரகஸியக் குறிப்பு) உடையது. பரிபாஷையில் மந்தணம் எதுவும் இல்லை. எனவே, அவையிரண்டும் பரிபாஷைக்குப் போதிய பொருள் ஆகா.இதற்கு meta என்னலே சாலப் பொருத்தம் ஆகும். ஈண்டு பரிபாஷை என்பது முதல் நிலை மொழிக்கு மேல் சிறப்பித்து வரும் இரண்டாம் நிலை மொழியாகும்.
meta -- of a higher or second-order kind (metalanguage)
pp 635, The Concise Oxford Dictionary of Current English,
Seventh Edition, Ed by J B Sykes, Oxford University Press 1986
இனி பரிபாஷை என்பதற்கு வியாகரண உரைகளினின்றும் வரையறைகளைக் காண்போம்.
காசிகா விவரண பஞ்சிகா, காசிகாவ்ருத்திக்கு ஜினேந்திர புத்தி அவர்களால் எழுதப்பட்ட விரிவுரையில், பரிதோ வ்யாப்ருதாம் பா4ஷாம் பரிபா4ஷாம் ப்ரசக்ஷதே.
வேறு ஒரு வரையறை -- பரிதோ பா4ஷ்யதே யா ஸா பரிபா4ஷா ப்ரகீர்த்திதா
துர்க்கஸிம்ஹர் எழுதிய காதந்திர ஸூத்ர வ்ருத்தியில் காணும் வரையறை -- விதௌ4 நியம காரிணீ பரிபா4ஷா.
ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத் தேருகிறது.
பரி என்ற முன்னொட்டிற்கு வருவோம். பரி என்பதை adverb(கர்ம ப்ரவசனீயம்) ஆகவும் பயன்படுத்தலாம். அப்பொழுது அஃது 'ஒன்றைக்குறித்து', 'ஒன்றைச்சுட்டி', 'ஒன்றை விலக்கி', 'ஒன்றைப் பகிர்ந்து' என்ற பொருட்களில் வரும். இங்கு பரிபாஷை என்பதில் ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பொருள் மிகுதி விளைக்கும் முன்னொட்டாக வருகிறது. இவ்வாறு வரும் பொழுது இந்தப் பரி என்பதற்கு யாது பொருள் என்னில், ஆப்தேயின் சம்ஸ்க்ருத அகராதிக் குறிப்பின் படி
परि ind. (Sometimes changed to परी, as परिवाह or परीवाह, परिहास or परीहास) 1 As a prefix to verbs and nouns derived from them, it means (a) round, round about, about; (b) in addition to, further; (c) opposite to, against; (d) much, excessively. -2As a separable preposition it means (a) towards, in the direction of, to, opposite to (with an acc.); वृक्षं परि विद्योतते विद्युत्; (b) successively, severally (with an acc.); वृक्षं वृक्षं परि सिञ्चति 'he waters tree after tree'; (c) to the share or lot of (showing भाग or participation) (with acc.); यदत्र मां परि स्यात् 'what may fall to my lot'; or लक्ष्मीर्हरिं परि Sk.;
இதில் நமது சொல்லமைப்புக்குப் பொருத்தமானது (b) in addition to, further;. மற்றவை எல்லாம் adverb, preposition ஆகிய பயன்பாட்டைக் குறிக்கும்.
உதாரணமாக 'எழுந்தருளப்பண்ணுதல்' என்பதை எடுத்துக்கொள்வோம். சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, 'சுமந்து வருதல்' என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் தத்துவத்தில் ஈடுபாடு, பக்தி என்பதற்குப் பொருத்தமாக இருக்குமா? எனவே பரிபாஷைச் சொல் பயன்படுத்தப் படுகிறது. தோள் மீது சுமக்கும் பல்லக்கு, அல்லது வாகனத் தண்டு தோளின் மீது பெரும் பாரமாய்த் தொடர்ந்து அந்தக் கைங்கர்யம் செய்வோர்தம் தோள்மீது புடைத்துப் போகும் அளவிற்குச் சிரம சாத்யமானது. ஆனால் விடாமல் அந்தக் கைங்கர்யம் இயற்றப்படுவதன் மர்மம் கைங்கர்ய பரர்களின் பக்தியும், ஈடுபாடும். எனவே அந்தக் கட்டைகளுக்கான பரிபாஷையாக ‘தோளுக்கினியான்’ என்பது பயன்படுகிறது.
இதில் 'உயர்வு' என்ற பொருள் பரி என்பதற்கு வருவதில்லை. அதாவது இந்தச் சொல்லைக் குறிப்பிடுவதா? இதைவிட உயர்ந்த சொல்லாக ஒன்றைக் கொள்வோம் என்ற நோக்கத்தில் பயன்படுத்தப் படுவதில்லை பரிபாஷை என்பது. உதாரணமாக பெருமாளை எழுந்தருளப்பண்ணும் பல்லக்கின் கட்டைகளுக்கு ஆகம ரீதியாக வேறு பெயர் சம்ஸ்க்ருதத்தில் இருந்திருக்கும். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் அதை நீக்கி 'தோளுக்கினியான்' என்பதை பரிபாஷையாகக் கொண்டுவருகிறது.
அதேபோல் பெருமாளுக்குத் 'தாம்பூலம் ஸமர்ப்பித்தல்' என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை நீக்கி 'அடைக்காய் அமுது' என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி 'அக்காரை அடிசில்' என்று சொல்வதையே சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது.
குரக்கினத் தலைவனான சுக்கிரீவன் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் 'மஹாராஜர்' என்ற பெயரால் அழைக்கப் படுகிறான். 'மஹாராஜர்' என்றால் வ்யாக்கியானங்களில் பொதுவாக சுக்கிரீவரைக் குறிக்கும். ஸ்ரீராமரைப் பெற்ற தசரதனுக்குக் கூட அந்தப் பெயர் வாய்க்கவில்லை. அது போல ஸ்ரீராமனின் தம்பிதான் பரதன். ஆனால் பெயர் பரிபாஷையில் 'பரதாழ்வான்'. குகன் வேடுவத் தலைவன். ஆனால் பரிபாஷையில் 'குஹப்பெருமாள்'. வெறுமனே 'பெருமாள்' என்றால் ஸ்ரீராமனைக் குறிக்கும். குஹனுக்குப் பெருமாள் பட்டம். பரதனுக்கு ஆழ்வான் பட்டம். லக்ஷ்மணன் என்று சொல்வது குறைவு. 'இளையவில்லி' என்று சொல்லும் போதே ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சாரியர்கள் நாவில் ஒரு பெருமிதத்தோடு வெளிவரும்.
இவ்வளவும் சொல்வதற்குக் காரணம் உயர்ந்த தாழ்ந்த என்ற காரணம் பரிபாஷையில் வேலை செய்வதில்லை என்பதைக் காட்டவே. பரி என்ற முன்னொட்டின் பொருளில் in addition to, further; என்ற பொருளே ஈண்டு பொருந்துகிறது என்பது என் கருத்து. meta என்னும் ஆங்கில முன்னொட்டும் இந்தப் பொருளையே சுட்டும்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம்தான். மற்ற திவ்ய தேசத்துக் கோயில்கள், அடைமொழியிட்டு வரும். பெருமாள் கோயில்(காஞ்சீபுரம்) போல்வன. அடைமொழி இல்லாது கோயில் என்று சொன்னால் பூலோக வைகுண்டமானதும், ஸ்ரீவைஷ்ணவ ராஜதானியுமான ஸ்ரீரங்கம் என்று பொருளாகும். பெருமாள் என்றால் ஸ்ரீராமன், பெரிய பெருமாள் என்றால் ஸ்ரீரங்கநாதர். மற்ற திவ்ய தேசத்து மூர்த்திகள் எல்லாம் அடைமொழியோடு பெருமாள் என்று வரும். சௌரிராஜப் பெருமாள், புண்டரீகாக்ஷ பெருமாள் என்பது போல.
என்ன விஷயம் என்றால் community participatory authoring என்று ஒரு விஷயம் இருக்கிறது. பரிபாஷை என்பது இந்த வகையில் சேரும். அதனால் சில சொல்புழக்கங்கள் ஒரு குழுவில், ஒரு காலக் கட்டத்தில் பயன்பாடு மிகுதிப்படுவதாய்க் காண முடியுமே அன்றிக் குறிப்பிட்டு இன்னார், இன்ன தேதியில் இவ்வாறு சொல்லத் துவங்கினார் என்று அறுதியிடல் முடியாது. இந்த மாதிரியான hermeneutical அம்சங்களை இலக்கியத் திறனாய்வாளர்கள் உலக இலக்கியங்களில் கண்டு ஆய்கின்றனர். உதாரணத்திற்கு Wolfgang Iser என்பவர் The Implied Reader என்ற கொள்கையைச் சொன்னவர். அவருடைய கருத்து --
”.... Although reader and text assume similar conventions from reality, texts leave great portions unexplained to the reader, whether as gaps in the narrative or as structural limits of the text's representation of the world. This basic indeterminacy "implies" the reader and begs her participation in synthesizing, and indeed living, events of meaning throughout the process of reading. Such a theory of aesthetic response denies the simple dichotomy of fiction and reality. According to Iser, fiction proposes alternate worlds created within the virtual reality of the text's meaning. In other words, in literature the actual and the possible can exist simultaneously. Literature thus takes on a greater human function of imagining beyond the given constraints of experience.'
பரிபாஷை பரிபாஷை என்றால் என்ன? பாஷை என்றால் language. பரிபாஷை? பரி என்பது ஆங்கிலத்தில் meta என்கிறோமே அந்தப் பொருளில் வருவது. பாஷை என்பது உலகத்தில் உள்ள பொருட்களையும், கருத்துகளையும் குறிக்க, தெரிவிக்கப் பயன்படுவது. பரிபாஷை என்பது ஏற்கனவே உலக வழக்கில் தெரிந்த பொருட்களாயினும், கருத்துகளாயினும் ஒரு சிறப்பான கருத்துச் சூழலில் தோய்ந்தோர் தங்கள் மத்தியில் உவப்பதற்கும், உகந்து பயன் படுத்துவதற்கும் பயன்படுத்தும் சிறப்பு மொழி பரிபாஷையாகும். பரிபாஷை என்பதும் சரி, meta என்ற முன்னொட்டும் சரி பன்முகம் கொண்ட சொற்கள். convention, குழூஉக்குறி என்பன ஒரோவழி பரிபாஷையின் பொருள்களில் அடங்கும். ஆயினும் கன்வென்ஷன் என்பது அநாதி காலமாய் வருவதற்குத் தான் முக்கியத்வம் கொடுத்த பொருள். பரிபாஷை என்பதற்கு அஃது முழுதும் அடக்கிய பொருளன்று. குழூஉக்குறி பொதுவில் வெளிப்படுத்தாத மந்தணக் குறிப்பு (ரகஸியக் குறிப்பு) உடையது. பரிபாஷையில் மந்தணம் எதுவும் இல்லை. எனவே, அவையிரண்டும் பரிபாஷைக்குப் போதிய பொருள் ஆகா.இதற்கு meta என்னலே சாலப் பொருத்தம் ஆகும். ஈண்டு பரிபாஷை என்பது முதல் நிலை மொழிக்கு மேல் சிறப்பித்து வரும் இரண்டாம் நிலை மொழியாகும்.
meta -- of a higher or second-order kind (metalanguage)
pp 635, The Concise Oxford Dictionary of Current English,
Seventh Edition, Ed by J B Sykes, Oxford University Press 1986
இனி பரிபாஷை என்பதற்கு வியாகரண உரைகளினின்றும் வரையறைகளைக் காண்போம்.
காசிகா விவரண பஞ்சிகா, காசிகாவ்ருத்திக்கு ஜினேந்திர புத்தி அவர்களால் எழுதப்பட்ட விரிவுரையில், பரிதோ வ்யாப்ருதாம் பா4ஷாம் பரிபா4ஷாம் ப்ரசக்ஷதே.
வேறு ஒரு வரையறை -- பரிதோ பா4ஷ்யதே யா ஸா பரிபா4ஷா ப்ரகீர்த்திதா
துர்க்கஸிம்ஹர் எழுதிய காதந்திர ஸூத்ர வ்ருத்தியில் காணும் வரையறை -- விதௌ4 நியம காரிணீ பரிபா4ஷா.
ஆக நியமமாகக் கொள்ளப்பட்ட சிறப்புமொழிக்கு பரிபாஷா என்று கூறலாம் எனத் தேருகிறது.
பரி என்ற முன்னொட்டிற்கு வருவோம். பரி என்பதை adverb(கர்ம ப்ரவசனீயம்) ஆகவும் பயன்படுத்தலாம். அப்பொழுது அஃது 'ஒன்றைக்குறித்து', 'ஒன்றைச்சுட்டி', 'ஒன்றை விலக்கி', 'ஒன்றைப் பகிர்ந்து' என்ற பொருட்களில் வரும். இங்கு பரிபாஷை என்பதில் ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பொருள் மிகுதி விளைக்கும் முன்னொட்டாக வருகிறது. இவ்வாறு வரும் பொழுது இந்தப் பரி என்பதற்கு யாது பொருள் என்னில், ஆப்தேயின் சம்ஸ்க்ருத அகராதிக் குறிப்பின் படி
परि ind. (Sometimes changed to परी, as परिवाह or परीवाह, परिहास or परीहास) 1 As a prefix to verbs and nouns derived from them, it means (a) round, round about, about; (b) in addition to, further; (c) opposite to, against; (d) much, excessively. -2As a separable preposition it means (a) towards, in the direction of, to, opposite to (with an acc.); वृक्षं परि विद्योतते विद्युत्; (b) successively, severally (with an acc.); वृक्षं वृक्षं परि सिञ्चति 'he waters tree after tree'; (c) to the share or lot of (showing भाग or participation) (with acc.); यदत्र मां परि स्यात् 'what may fall to my lot'; or लक्ष्मीर्हरिं परि Sk.;
இதில் நமது சொல்லமைப்புக்குப் பொருத்தமானது (b) in addition to, further;. மற்றவை எல்லாம் adverb, preposition ஆகிய பயன்பாட்டைக் குறிக்கும்.
உதாரணமாக 'எழுந்தருளப்பண்ணுதல்' என்பதை எடுத்துக்கொள்வோம். சுவாமியின் அர்ச்சையை ஒரு பீடத்தில் வைத்து, இரண்டு மூங்கில் கழிகளைக் கட்டி, 'சுமந்து வருதல்' என்றால் அந்தப் பரம்பொருள் என்ற பெரும் தத்துவத்தில் ஈடுபாடு, பக்தி என்பதற்குப் பொருத்தமாக இருக்குமா? எனவே பரிபாஷைச் சொல் பயன்படுத்தப் படுகிறது. தோள் மீது சுமக்கும் பல்லக்கு, அல்லது வாகனத் தண்டு தோளின் மீது பெரும் பாரமாய்த் தொடர்ந்து அந்தக் கைங்கர்யம் செய்வோர்தம் தோள்மீது புடைத்துப் போகும் அளவிற்குச் சிரம சாத்யமானது. ஆனால் விடாமல் அந்தக் கைங்கர்யம் இயற்றப்படுவதன் மர்மம் கைங்கர்ய பரர்களின் பக்தியும், ஈடுபாடும். எனவே அந்தக் கட்டைகளுக்கான பரிபாஷையாக ‘தோளுக்கினியான்’ என்பது பயன்படுகிறது.
இதில் 'உயர்வு' என்ற பொருள் பரி என்பதற்கு வருவதில்லை. அதாவது இந்தச் சொல்லைக் குறிப்பிடுவதா? இதைவிட உயர்ந்த சொல்லாக ஒன்றைக் கொள்வோம் என்ற நோக்கத்தில் பயன்படுத்தப் படுவதில்லை பரிபாஷை என்பது. உதாரணமாக பெருமாளை எழுந்தருளப்பண்ணும் பல்லக்கின் கட்டைகளுக்கு ஆகம ரீதியாக வேறு பெயர் சம்ஸ்க்ருதத்தில் இருந்திருக்கும். ஆனால் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் அதை நீக்கி 'தோளுக்கினியான்' என்பதை பரிபாஷையாகக் கொண்டுவருகிறது.
அதேபோல் பெருமாளுக்குத் 'தாம்பூலம் ஸமர்ப்பித்தல்' என்ற ஸம்ஸ்க்ருத பதங்களை நீக்கி 'அடைக்காய் அமுது' என்று பரிபாஷை கொண்டு வருகிறது. பெருமாளுக்கு க்ஷீரான்னம் ஸமர்ப்பித்தல் என்பதை மாற்றி 'அக்காரை அடிசில்' என்று சொல்வதையே சம்ப்ரதாய ரீதியாக சுத்த ப்ரயோகம் என்று ஆக்கிவைத்திருக்கிறது.
குரக்கினத் தலைவனான சுக்கிரீவன் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் 'மஹாராஜர்' என்ற பெயரால் அழைக்கப் படுகிறான். 'மஹாராஜர்' என்றால் வ்யாக்கியானங்களில் பொதுவாக சுக்கிரீவரைக் குறிக்கும். ஸ்ரீராமரைப் பெற்ற தசரதனுக்குக் கூட அந்தப் பெயர் வாய்க்கவில்லை. அது போல ஸ்ரீராமனின் தம்பிதான் பரதன். ஆனால் பெயர் பரிபாஷையில் 'பரதாழ்வான்'. குகன் வேடுவத் தலைவன். ஆனால் பரிபாஷையில் 'குஹப்பெருமாள்'. வெறுமனே 'பெருமாள்' என்றால் ஸ்ரீராமனைக் குறிக்கும். குஹனுக்குப் பெருமாள் பட்டம். பரதனுக்கு ஆழ்வான் பட்டம். லக்ஷ்மணன் என்று சொல்வது குறைவு. 'இளையவில்லி' என்று சொல்லும் போதே ஸ்ரீவைஷ்ணவ பூர்வாச்சாரியர்கள் நாவில் ஒரு பெருமிதத்தோடு வெளிவரும்.
இவ்வளவும் சொல்வதற்குக் காரணம் உயர்ந்த தாழ்ந்த என்ற காரணம் பரிபாஷையில் வேலை செய்வதில்லை என்பதைக் காட்டவே. பரி என்ற முன்னொட்டின் பொருளில் in addition to, further; என்ற பொருளே ஈண்டு பொருந்துகிறது என்பது என் கருத்து. meta என்னும் ஆங்கில முன்னொட்டும் இந்தப் பொருளையே சுட்டும்.
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் கோயில் என்றால் ஸ்ரீரங்கம்தான். மற்ற திவ்ய தேசத்துக் கோயில்கள், அடைமொழியிட்டு வரும். பெருமாள் கோயில்(காஞ்சீபுரம்) போல்வன. அடைமொழி இல்லாது கோயில் என்று சொன்னால் பூலோக வைகுண்டமானதும், ஸ்ரீவைஷ்ணவ ராஜதானியுமான ஸ்ரீரங்கம் என்று பொருளாகும். பெருமாள் என்றால் ஸ்ரீராமன், பெரிய பெருமாள் என்றால் ஸ்ரீரங்கநாதர். மற்ற திவ்ய தேசத்து மூர்த்திகள் எல்லாம் அடைமொழியோடு பெருமாள் என்று வரும். சௌரிராஜப் பெருமாள், புண்டரீகாக்ஷ பெருமாள் என்பது போல.
என்ன விஷயம் என்றால் community participatory authoring என்று ஒரு விஷயம் இருக்கிறது. பரிபாஷை என்பது இந்த வகையில் சேரும். அதனால் சில சொல்புழக்கங்கள் ஒரு குழுவில், ஒரு காலக் கட்டத்தில் பயன்பாடு மிகுதிப்படுவதாய்க் காண முடியுமே அன்றிக் குறிப்பிட்டு இன்னார், இன்ன தேதியில் இவ்வாறு சொல்லத் துவங்கினார் என்று அறுதியிடல் முடியாது. இந்த மாதிரியான hermeneutical அம்சங்களை இலக்கியத் திறனாய்வாளர்கள் உலக இலக்கியங்களில் கண்டு ஆய்கின்றனர். உதாரணத்திற்கு Wolfgang Iser என்பவர் The Implied Reader என்ற கொள்கையைச் சொன்னவர். அவருடைய கருத்து --
”.... Although reader and text assume similar conventions from reality, texts leave great portions unexplained to the reader, whether as gaps in the narrative or as structural limits of the text's representation of the world. This basic indeterminacy "implies" the reader and begs her participation in synthesizing, and indeed living, events of meaning throughout the process of reading. Such a theory of aesthetic response denies the simple dichotomy of fiction and reality. According to Iser, fiction proposes alternate worlds created within the virtual reality of the text's meaning. In other words, in literature the actual and the possible can exist simultaneously. Literature thus takes on a greater human function of imagining beyond the given constraints of experience.'
***
தமிழ்ப் புலவர் போற்றும் நம்மாழ்வார்
ஔவை வாக்காக ஒரு பாடலைப் பெருந்தொகை கூறுகிறது. (பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936)
ஔவை வாக்கு --
ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத் -- தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியா னிவ்வுலகின்
தாய்மொழிய தென்பேன் றகைந்து.
இவ்வாறு பாடுகின்ற இந்த ஔவை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நன்கு ஊறிய கல்வி உடையவர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் வேதாந்தப் பரிச்சயம் மட்டுமின்றி, வேதாந்த தாத்பர்யம் என்ன என்று முனைவோருக்குத்தான் ஐம்பொருள் என்னும் கருத்து நினைவில் நிற்கும்.
ஐம்பொருள் என்பது அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படுவது.
மிக்க இறைநிலை -- ப்ரஹ்ம ஸ்வரூபம்;
மெய்யாம் உயிர் நிலை -- ஜீவாத்ம ஸ்வரூபம்;
தக்க நெறி -- முக்திப் பெருநிலைக்கு ஏற்ற வழியான ஹிதம்;
ஊழ்வினை -- முக்தி மார்க்கத்தில் தடையாக இருக்கும் விரோதி ஸ்வரூபம்;
வாழ்வினை -- பரமபுருஷார்த்தமான பெரும் பேறு.
மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் -- தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத் தியல்.
என்பது பராசர பட்டரின் திருவாய்மொழிக்கான தனியன்களில் ஒன்று. இந்த ஐந்து அர்த்தங்களை ஓதும் திருவாய்மொழி யாழினிசை வேதம் என்று சொல்லப்படுவதான சாம வேதத்தைச் சேர்ந்ததான சாந்தோக்ய உபநிஷத்தின் பொருளை முழுதும் உள்ளடக்கியது என்பதால் திருவாய்மொழியை சாமவேத சாரமானது என்னும் மரபைப் பதியவிடுகிறார் பராசர பட்டர். அஃது நெடுநாளைய மரபு என்பதை ஔவையின் வாக்கு உணர்த்துகிறது.
நாற்பொருள் -- நான்கு புருஷார்த்தங்கள், அறம், பொருள், காமம், வீடு.
முப்பொருள் -- சித், அசித், ஈச்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம்.
ஆக ஐம்பொருள், நாற்பொருள், முப்பொருள் ஆகிய அர்த்த விசேஷங்களைத் தன்னகத்தே பொதிந்து கொண்டதான செம்பொருள் -- ஸாரதமமாகிய அர்த்தம் என்பது வெறுமனே மேலெழுந்தவாரியாக வேதங்களைக் கற்பதால் மட்டும் ஒருவர் பெறுவதற்கரிது. அதில் நீண்ட பயிற்சியும், ஆழ்ந்த சிந்தனையும், தியானமும் உடையோர்க்கே வேதமானது செம்பொருளை நீண்ட முயற்சிக்குப் பின்னர் பகவத் க்ருபையால் உணர்த்தக் கூடியது.
ஏனெனில் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண இயலா பேதைகள் தன்னகத்தே உள்ள அர்த்தங்களைத் தம் மந்த மதியின் காரணமாக எங்கேனும் கலக்கிவிடுவரோ என்று வேதமே அஞ்சுகிறது என்று ரிக் வேதமே பாடுகிறது.
எனவே ஒருவர் வேதத்தின் மூலமாக மட்டும் செம்பொருளை அறிய முயல்வது சேட்பாலதான நெடுமுயற்சி, பெரும் வருத்தம். ஆனால் அந்தச் செம்பொருளை சேய்மொழி ஆகிய திருவாய்மொழி ஆரம்பம் முதல் உள்ளீடாக நூல் பரப்பெங்கும் கடைசிவரை, தெள்ளத் தெளிவாகக் காட்டிநிற்பது. ஔவையின் இந்தக் கருத்தைத்தான் பின்னால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் அருமையாகப் பாடிக்காட்டுகிறார்.
செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே.
என்று. இங்கு ஔவை அற்புதமான ஒரு நயம் காட்டுகிறார். சேய்மொழி திருவாய்மொழி, தாய்மொழி எது? வேதம் என்கிறார். அது மட்டுமன்று. சிலர் திருவாய்மொழியைச் சேய் மொழி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கூறுவது என்னவெனில் திருவாய்மொழி என்பது தாய்மொழியேதான் என்பதாம். அதாவது வேதமேதான். அதாவது இங்கு சேய்மொழி என்பதை வேதார்த்தம் விளக்கும் உபப்ருஹ்மணம் மட்டுமன்று திருவாய்மொழி. தானே வேதம் என்று சொல்லத்தக்கது என்பது ஔவை காட்டும் அற்புத நயம். இந்தக் கருத்தைத் தெள்ளத் தெளிவாகக் கல்வெட்டாக்கி வைத்தார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்னும் மஹாக்ரந்தத்தில்.
'வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.'
அடுத்து இடைக்காடர் வாக்கு என்று ஒரு செய்யுளைக் காட்டுகிறது பெருந்தொகை.
இடைக்காடர் வாக்கு --
சேய்மொழியோ வாய்மொழியோ செப்பி லிரண்டுமொன்றவ்
வாய்மொழியை யாரு மறையென்ப -- வாய்மொழியால்
ஆய்மொழிகள் சால வுளவெனினு மம்மொழியின்
சாய்மொழியென் பேன்யான் றகைந்து.
இதுவும் ஔவையின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது. திருவாய்மொழியை வாய்மொழியாகிய வேதத்தின் சாய்மொழி, துணைவிளக்க நூலான உபப்ருஹ்மணம் என்று கூறுகிறார் இடைக்காடர். நம்மாழ்வாரைப் பற்றிய பெருங்களஞ்சிய நூல் உருவாகும் பொழுது தமிழகத்தின் உண்மையான ஏற்றம் எவ்வண்ணம் திகழ்ந்தது, எங்கு மையமிட்டு நின்றது என்பது தானே போதரும்.
***
ஔவை வாக்கு --
ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத் -- தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியா னிவ்வுலகின்
தாய்மொழிய தென்பேன் றகைந்து.
இவ்வாறு பாடுகின்ற இந்த ஔவை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் நன்கு ஊறிய கல்வி உடையவர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் வேதாந்தப் பரிச்சயம் மட்டுமின்றி, வேதாந்த தாத்பர்யம் என்ன என்று முனைவோருக்குத்தான் ஐம்பொருள் என்னும் கருத்து நினைவில் நிற்கும்.
ஐம்பொருள் என்பது அர்த்த பஞ்சகம் என்று சொல்லப்படுவது.
மிக்க இறைநிலை -- ப்ரஹ்ம ஸ்வரூபம்;
மெய்யாம் உயிர் நிலை -- ஜீவாத்ம ஸ்வரூபம்;
தக்க நெறி -- முக்திப் பெருநிலைக்கு ஏற்ற வழியான ஹிதம்;
ஊழ்வினை -- முக்தி மார்க்கத்தில் தடையாக இருக்கும் விரோதி ஸ்வரூபம்;
வாழ்வினை -- பரமபுருஷார்த்தமான பெரும் பேறு.
மிக்க விறைநிலையும் மெய்யா முயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் -- தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத் தியல்.
என்பது பராசர பட்டரின் திருவாய்மொழிக்கான தனியன்களில் ஒன்று. இந்த ஐந்து அர்த்தங்களை ஓதும் திருவாய்மொழி யாழினிசை வேதம் என்று சொல்லப்படுவதான சாம வேதத்தைச் சேர்ந்ததான சாந்தோக்ய உபநிஷத்தின் பொருளை முழுதும் உள்ளடக்கியது என்பதால் திருவாய்மொழியை சாமவேத சாரமானது என்னும் மரபைப் பதியவிடுகிறார் பராசர பட்டர். அஃது நெடுநாளைய மரபு என்பதை ஔவையின் வாக்கு உணர்த்துகிறது.
நாற்பொருள் -- நான்கு புருஷார்த்தங்கள், அறம், பொருள், காமம், வீடு.
முப்பொருள் -- சித், அசித், ஈச்வர தத்வங்கள் ஆகிய தத்வ த்ரயம்.
ஆக ஐம்பொருள், நாற்பொருள், முப்பொருள் ஆகிய அர்த்த விசேஷங்களைத் தன்னகத்தே பொதிந்து கொண்டதான செம்பொருள் -- ஸாரதமமாகிய அர்த்தம் என்பது வெறுமனே மேலெழுந்தவாரியாக வேதங்களைக் கற்பதால் மட்டும் ஒருவர் பெறுவதற்கரிது. அதில் நீண்ட பயிற்சியும், ஆழ்ந்த சிந்தனையும், தியானமும் உடையோர்க்கே வேதமானது செம்பொருளை நீண்ட முயற்சிக்குப் பின்னர் பகவத் க்ருபையால் உணர்த்தக் கூடியது.
ஏனெனில் ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காண இயலா பேதைகள் தன்னகத்தே உள்ள அர்த்தங்களைத் தம் மந்த மதியின் காரணமாக எங்கேனும் கலக்கிவிடுவரோ என்று வேதமே அஞ்சுகிறது என்று ரிக் வேதமே பாடுகிறது.
எனவே ஒருவர் வேதத்தின் மூலமாக மட்டும் செம்பொருளை அறிய முயல்வது சேட்பாலதான நெடுமுயற்சி, பெரும் வருத்தம். ஆனால் அந்தச் செம்பொருளை சேய்மொழி ஆகிய திருவாய்மொழி ஆரம்பம் முதல் உள்ளீடாக நூல் பரப்பெங்கும் கடைசிவரை, தெள்ளத் தெளிவாகக் காட்டிநிற்பது. ஔவையின் இந்தக் கருத்தைத்தான் பின்னால் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்னும் ஆசாரியர் அருமையாகப் பாடிக்காட்டுகிறார்.
செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே.
என்று. இங்கு ஔவை அற்புதமான ஒரு நயம் காட்டுகிறார். சேய்மொழி திருவாய்மொழி, தாய்மொழி எது? வேதம் என்கிறார். அது மட்டுமன்று. சிலர் திருவாய்மொழியைச் சேய் மொழி என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கூறுவது என்னவெனில் திருவாய்மொழி என்பது தாய்மொழியேதான் என்பதாம். அதாவது வேதமேதான். அதாவது இங்கு சேய்மொழி என்பதை வேதார்த்தம் விளக்கும் உபப்ருஹ்மணம் மட்டுமன்று திருவாய்மொழி. தானே வேதம் என்று சொல்லத்தக்கது என்பது ஔவை காட்டும் அற்புத நயம். இந்தக் கருத்தைத் தெள்ளத் தெளிவாகக் கல்வெட்டாக்கி வைத்தார் ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தமது ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்னும் மஹாக்ரந்தத்தில்.
'வடமொழி மறை என்றது தென்மொழி மறையை நினைத்திறே.'
அடுத்து இடைக்காடர் வாக்கு என்று ஒரு செய்யுளைக் காட்டுகிறது பெருந்தொகை.
இடைக்காடர் வாக்கு --
சேய்மொழியோ வாய்மொழியோ செப்பி லிரண்டுமொன்றவ்
வாய்மொழியை யாரு மறையென்ப -- வாய்மொழியால்
ஆய்மொழிகள் சால வுளவெனினு மம்மொழியின்
சாய்மொழியென் பேன்யான் றகைந்து.
இதுவும் ஔவையின் கருத்தைப் பிரதிபலிக்கின்றது. திருவாய்மொழியை வாய்மொழியாகிய வேதத்தின் சாய்மொழி, துணைவிளக்க நூலான உபப்ருஹ்மணம் என்று கூறுகிறார் இடைக்காடர். நம்மாழ்வாரைப் பற்றிய பெருங்களஞ்சிய நூல் உருவாகும் பொழுது தமிழகத்தின் உண்மையான ஏற்றம் எவ்வண்ணம் திகழ்ந்தது, எங்கு மையமிட்டு நின்றது என்பது தானே போதரும்.
***
அது நமது விதிவகையே!
சில சமயம் நமது ஞாபகம் நம்மை ஏமாற்றிவிடும் என்ற பயத்தால் நூல்களைப் படித்து ஒரு முறை சரிபார்த்த பிறகு விஷயங்களைப் போடுவது வழக்கம். அது எல்லா நேரத்திலும் சரியாக வருவதில்லை. நேற்று திருநெடுந்தாண்டகம் பற்றிப் போடும்போது ‘எம்பெருமானார் பராசர பட்டரின் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, நம்மை இவனை நினைத்திருப்பதைப் போலே நினைத்திருங்கோள்’ என்று சொன்னார் என்று முதலில் எழுதியிருந்தேன். பிறகு ஒரு தடவை சரிபார்க்கலாம் என்று ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் நூலைப் பார்த்த பொழுது பராசர பட்டர் கையில் நூல் எதுவும் தந்தது போல் வரவில்லை. சரி நம் ஞாபகம் ஏமாற்றிவிட்டது போலும் என்று அதை மாற்றிப் போட்டுவிட்டேன். இப்பொழுது ‘அருள்தருவான் அமைகின்றான். அது நமது விதிவகையே’ என்பதற்குப் பொருள் தேடும்போது அந்த விஷயம் கண்ணில் படுகிறது.
அதாவது பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி, முதல் பாசுரம் ஈட்டு வியாக்கியானத்தில் அது நமது விதிவகையே என்பதை விவரிக்கும் பொழுது, நெஞ்சைக் குறித்து ஆழ்வார் பாடுகிறார். ஏ நெஞ்சே! ஆழியான் அருள்தருவதற்காக அமைகின்றான். இருள்தரு மாஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன். நீயும் மருளை ஒழித்து என்னுடன் வா என்பது போல் பாட்டின் கதி. அப்பொழுது நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்: ‘அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே’. இங்கு விதிவகையே என்பதற்கு பூருவர்கள் சொல்லும் பொருள்: ‘நமது பாக்கிய அநுகுணமாக இறே.’ ஆனால் எம்பெருமானார் இதற்குச் சொல்லும் பொருள்: ‘இத்திருவாய்மொழியில் மேலோடுகின்ற ரஸத்திற்குச் சேராது, நாம் விதித்தபடியே செய்வானாய் இருந்தான் என்கிறார்’ என்று அருளிச் செய்வர்.
இந்த இடத்தில் ஒரு விருத்தாந்தம் அருளிச்செய்கிறார் நம்பிள்ளை. -- நமது விதிவகையே என்பதற்கு பராசர பட்டர் பொருள் சொல்லுவாராம். நித்ய விபூதியில் சேனை முதலியார் என்ன சொல்கிறாரோ அதை பவ்யமாகக் கேட்டிருந்து அநுமதி பண்ணி மேலெழுத்திடுவது போல் தம் அருள்நோக்கு காட்டி அருள்புரிவர் பகவான் என்பதற்கு ஒரு சுலோகம் சொல்வார் பராசர பட்டர் : ’ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:’ என்று. இவ்வாறு பராசர பட்டர் அருளிச் செய்த போது கிடாம்பி ஆச்சானும் மற்றவர்களும் பராசர பட்டரைச் சுற்றி இருந்தனர். அனைவரும் அந்த சுவையான விளக்கத்தைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்கள். அதிலும் கிடாம்பியாச்சான் மிகவுமே நெகிழ்ந்து போனார். அவரை இளையாழ்வான் என்னும் ஆச்சானின் சிஷ்யர் கேட்டாராம்: ‘பராசர பட்டரை ஆச்ரயித்தவர்களில் அனைவரிலும் தாங்கள் ஏன் மிகவும் அதிகமாக நெகிழ்ந்து, பெரும் விநயமும், பிரமிப்பும் தோற்ற பராசர பட்டரிடம் நடந்துகொள்கிறீர்கள்?’ என்று அதற்கு கிடாம்பியாச்சானின் பதில்: ’நீ அன்று கண்டிலைகாண். எம்பெருமானார் பட்டர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்துத் திருமுன்பே ஒரு சுலோகத்தை விண்ணப்பம் செய்வித்துத் திருப்பிரம்புக்குப் புறம்பாகக்கொண்டு புறப்பட்டுச் சுற்றும் பார்த்தருளி, நம்முடையாரடங்கலும் நம்மை நினைத்திருக்குமா போலே இவனை நினைத்திருங்கோள்” என்றருளிச்செய்தார்.--
எனவே ஞாபகம் ஏமாற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால் எந்த இடத்தில் படித்தோம் என்பது நினைவிற்கு வரவில்லை என்றால் என்ன செய்வது? ஆனால் இப்படி யதேச்சையாக நாம் எழுதியது சரியே என்று தக்க சான்றுகள் எதிர்பாராத இடத்தில் வந்து நம்மை எதிர்கொள்ளும் போது அது ஒரு தனி ஆனந்தம்தான். அதாவது நாம் சொல்வது தக்க சான்றுகள் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் கொஞ்சம் இப்படிக் கஷ்டப்பட வேண்டியது நியாயம்தானே!
***
அதாவது பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி, முதல் பாசுரம் ஈட்டு வியாக்கியானத்தில் அது நமது விதிவகையே என்பதை விவரிக்கும் பொழுது, நெஞ்சைக் குறித்து ஆழ்வார் பாடுகிறார். ஏ நெஞ்சே! ஆழியான் அருள்தருவதற்காக அமைகின்றான். இருள்தரு மாஞாலத்து இனிப் பிறவி யான் வேண்டேன். நீயும் மருளை ஒழித்து என்னுடன் வா என்பது போல் பாட்டின் கதி. அப்பொழுது நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்: ‘அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே’. இங்கு விதிவகையே என்பதற்கு பூருவர்கள் சொல்லும் பொருள்: ‘நமது பாக்கிய அநுகுணமாக இறே.’ ஆனால் எம்பெருமானார் இதற்குச் சொல்லும் பொருள்: ‘இத்திருவாய்மொழியில் மேலோடுகின்ற ரஸத்திற்குச் சேராது, நாம் விதித்தபடியே செய்வானாய் இருந்தான் என்கிறார்’ என்று அருளிச் செய்வர்.
இந்த இடத்தில் ஒரு விருத்தாந்தம் அருளிச்செய்கிறார் நம்பிள்ளை. -- நமது விதிவகையே என்பதற்கு பராசர பட்டர் பொருள் சொல்லுவாராம். நித்ய விபூதியில் சேனை முதலியார் என்ன சொல்கிறாரோ அதை பவ்யமாகக் கேட்டிருந்து அநுமதி பண்ணி மேலெழுத்திடுவது போல் தம் அருள்நோக்கு காட்டி அருள்புரிவர் பகவான் என்பதற்கு ஒரு சுலோகம் சொல்வார் பராசர பட்டர் : ’ததாநுஜாநந்தம் உதார வீக்ஷணை:’ என்று. இவ்வாறு பராசர பட்டர் அருளிச் செய்த போது கிடாம்பி ஆச்சானும் மற்றவர்களும் பராசர பட்டரைச் சுற்றி இருந்தனர். அனைவரும் அந்த சுவையான விளக்கத்தைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்து போனார்கள். அதிலும் கிடாம்பியாச்சான் மிகவுமே நெகிழ்ந்து போனார். அவரை இளையாழ்வான் என்னும் ஆச்சானின் சிஷ்யர் கேட்டாராம்: ‘பராசர பட்டரை ஆச்ரயித்தவர்களில் அனைவரிலும் தாங்கள் ஏன் மிகவும் அதிகமாக நெகிழ்ந்து, பெரும் விநயமும், பிரமிப்பும் தோற்ற பராசர பட்டரிடம் நடந்துகொள்கிறீர்கள்?’ என்று அதற்கு கிடாம்பியாச்சானின் பதில்: ’நீ அன்று கண்டிலைகாண். எம்பெருமானார் பட்டர் கையிலே புஸ்தகத்தைக் கொடுத்துத் திருமுன்பே ஒரு சுலோகத்தை விண்ணப்பம் செய்வித்துத் திருப்பிரம்புக்குப் புறம்பாகக்கொண்டு புறப்பட்டுச் சுற்றும் பார்த்தருளி, நம்முடையாரடங்கலும் நம்மை நினைத்திருக்குமா போலே இவனை நினைத்திருங்கோள்” என்றருளிச்செய்தார்.--
எனவே ஞாபகம் ஏமாற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால் எந்த இடத்தில் படித்தோம் என்பது நினைவிற்கு வரவில்லை என்றால் என்ன செய்வது? ஆனால் இப்படி யதேச்சையாக நாம் எழுதியது சரியே என்று தக்க சான்றுகள் எதிர்பாராத இடத்தில் வந்து நம்மை எதிர்கொள்ளும் போது அது ஒரு தனி ஆனந்தம்தான். அதாவது நாம் சொல்வது தக்க சான்றுகள் உள்ளதாக இருக்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் கொஞ்சம் இப்படிக் கஷ்டப்பட வேண்டியது நியாயம்தானே!
***
ஸ்ரீஆண்டாளின் அருள்நிலையின் சிறப்பு
ஆன்மிகம் என்னும் பாதையில் பெரும் தடைகள் எவை என்று பார்க்கும் போது காமம், குரோதம், லோபம் முதலிய உணர்ச்சி சார்ந்த மன நிகழ்வுகள் முன்னிற்கின்றன. உலகின் மிஸ்டிக்ஸ் எல்லோருமே விலக்க வேஎண்டிய தடைகள் என்று சொல்லி எச்சரிப்பதும் இவற்றை. அதுவும் யோக முறையில் எடுத்தவுடனே செய்ய வேண்டிய தூய்மை நடைமுறையாய் சமம், தமம் என்னும் புலனடக்கம், மனவடக்கம் முதலியன வந்துவிடுகின்றன.
பக்தியின் பாதையிலும் தொடக்கத்தில் இந்தப் பயங்கள் இருக்கின்றன. ஆனால் பக்தி உணர்ச்சி நிலைத்து திடப்பட்டு அதிகப்படும் பொழுது அந்த பக்திக்கென்று ஓர் அசாத்திய வலிமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் வேகத்திற்கு எதிரே நிற்க முடியாமல் இயற்கை உணர்ச்சிகள் காணாமல் போகின்றன. எது எது எல்லாம் இயற்கை உணர்ச்சிகளைத் தூண்டும் காரணங்களாய் இருந்தனவோ அந்தக் காரணங்கள் எல்லாம் தீவிர பக்தியின் வசத்தில் தம் விடத்தன்மை இழந்து பக்தியையே இன்னும் மேலும் மேலும் அதிகப்படுத்தும் நல் ஏதுக்களாய் மாறி விடுகின்றன. உலகம் என்பது பிரம்மத்தை மறைக்கும் என்பது போய் உலகம் என்பது பிரம்மத்தை மிகத் தெளிவாய்க் காட்டும் கண்ணாடிக் கூடு போல் ஆகிவிடுகிறது பக்தியின் கண்களுக்கு. அதனால்தான் வெறும் ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றி உணர்வது என்றால் பக்தியின் தீவிரம் விஞ்ஞானம் என்று சொல்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஸ்ரீராமகிருஷ்ணரின் பார்வையில் யாரேனும் மது அருந்துவோர் கண்ணில் பட்டால் போதும் உடனே அவருக்குப் பரவச நிலையில் சமாதி கூடிவிடும். காரணம் மது அருந்துவோரின் தன் நினைவு இழந்த நிலை அவருக்கு கடவுள்பால் மனம் இழந்த நிலையை ஞாபகம் மூட்டி அத்தகைய பரவசத்தைக் கூட்டிவிடும்.
பக்தி உலகின் அதி உன்னத தீவிர நிலையை நமக்கு உணர்த்தி நிற்பவள் ஸ்ரீஆண்டாள் என்னும் பிராட்டியார். உலகில் ஆன்மிக சாதகர்களால் சாதாரணமாகக் கண்டு பயப்படப்படும் காமதேவன் ஆகிய அநங்கதேவனையே குறித்துப் பிரார்த்திக்கின்றார் என்றால் என்ன சொல்வது! என்ன பிரார்த்திக்கின்றார்? அந்தத் திருவேங்கடவனுக்கு என்னை விதிப்பாயாக. நீதான் இன்னார் இன்னாருக்கு என்று விதிக்கும் தெய்வம் என்று சொல்கிறார்களே அப்படியானால் நீ ஒன்று செய் உன் திறமையெல்லாம் காட்டி என்னை அந்த வேங்கடவர்க்கு என்று விதித்து விடு பார்க்கலாம். - என்று சொல்லும் போது அதின் உட்பொருள் நமக்குப்புரிய வேண்டுமானால் நம் மனம் காமம் குரோதம் ஆகிய குற்றங்கள் அற்று, கடவுளையே வேண்டி, கடவுளுக்கே ஏங்கி நிற்கும் பக்தி நிலைக்கு வரவேண்டாமா?
நாமோ உயர்ந்த நிலைக்கு முன்னேறவும் மாட்டோம். மனக்குற்றங்கள் அற்ற பக்திப் பெருநிலையை நமக்குப் புரிய வைக்க நாம் பழகிய விஷயங்களை உதாரணம் காட்டி யாரேனும் கருணை மிக்க அருளாளர்கள் விளக்க முன்வந்தால் உடனே அவர்கள் சொன்னதை நம் நிலைக்கு இழுத்துவந்து குதர்க்கம் பண்ணுவோம். சகதியில் ஆழ்மடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை நம்முடையது. காக்கும் கரங்களையும் நம் நிலைக்கு இழுப்போமே அன்றி நாம் உய்வடைய வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் ஏற்பட்டாலும் அது நமக்குப் பெரும்பாலும் பயன்படாமல் போகும் அபாய நிலை நம்முடையது.
”தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தநங்கதேவா
உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.”
*
பக்தியின் பாதையிலும் தொடக்கத்தில் இந்தப் பயங்கள் இருக்கின்றன. ஆனால் பக்தி உணர்ச்சி நிலைத்து திடப்பட்டு அதிகப்படும் பொழுது அந்த பக்திக்கென்று ஓர் அசாத்திய வலிமை ஏற்பட்டுவிடுகிறது. அதன் வேகத்திற்கு எதிரே நிற்க முடியாமல் இயற்கை உணர்ச்சிகள் காணாமல் போகின்றன. எது எது எல்லாம் இயற்கை உணர்ச்சிகளைத் தூண்டும் காரணங்களாய் இருந்தனவோ அந்தக் காரணங்கள் எல்லாம் தீவிர பக்தியின் வசத்தில் தம் விடத்தன்மை இழந்து பக்தியையே இன்னும் மேலும் மேலும் அதிகப்படுத்தும் நல் ஏதுக்களாய் மாறி விடுகின்றன. உலகம் என்பது பிரம்மத்தை மறைக்கும் என்பது போய் உலகம் என்பது பிரம்மத்தை மிகத் தெளிவாய்க் காட்டும் கண்ணாடிக் கூடு போல் ஆகிவிடுகிறது பக்தியின் கண்களுக்கு. அதனால்தான் வெறும் ஞானம் என்பது பிரம்மத்தைப் பற்றி உணர்வது என்றால் பக்தியின் தீவிரம் விஞ்ஞானம் என்று சொல்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். ஸ்ரீராமகிருஷ்ணரின் பார்வையில் யாரேனும் மது அருந்துவோர் கண்ணில் பட்டால் போதும் உடனே அவருக்குப் பரவச நிலையில் சமாதி கூடிவிடும். காரணம் மது அருந்துவோரின் தன் நினைவு இழந்த நிலை அவருக்கு கடவுள்பால் மனம் இழந்த நிலையை ஞாபகம் மூட்டி அத்தகைய பரவசத்தைக் கூட்டிவிடும்.
பக்தி உலகின் அதி உன்னத தீவிர நிலையை நமக்கு உணர்த்தி நிற்பவள் ஸ்ரீஆண்டாள் என்னும் பிராட்டியார். உலகில் ஆன்மிக சாதகர்களால் சாதாரணமாகக் கண்டு பயப்படப்படும் காமதேவன் ஆகிய அநங்கதேவனையே குறித்துப் பிரார்த்திக்கின்றார் என்றால் என்ன சொல்வது! என்ன பிரார்த்திக்கின்றார்? அந்தத் திருவேங்கடவனுக்கு என்னை விதிப்பாயாக. நீதான் இன்னார் இன்னாருக்கு என்று விதிக்கும் தெய்வம் என்று சொல்கிறார்களே அப்படியானால் நீ ஒன்று செய் உன் திறமையெல்லாம் காட்டி என்னை அந்த வேங்கடவர்க்கு என்று விதித்து விடு பார்க்கலாம். - என்று சொல்லும் போது அதின் உட்பொருள் நமக்குப்புரிய வேண்டுமானால் நம் மனம் காமம் குரோதம் ஆகிய குற்றங்கள் அற்று, கடவுளையே வேண்டி, கடவுளுக்கே ஏங்கி நிற்கும் பக்தி நிலைக்கு வரவேண்டாமா?
நாமோ உயர்ந்த நிலைக்கு முன்னேறவும் மாட்டோம். மனக்குற்றங்கள் அற்ற பக்திப் பெருநிலையை நமக்குப் புரிய வைக்க நாம் பழகிய விஷயங்களை உதாரணம் காட்டி யாரேனும் கருணை மிக்க அருளாளர்கள் விளக்க முன்வந்தால் உடனே அவர்கள் சொன்னதை நம் நிலைக்கு இழுத்துவந்து குதர்க்கம் பண்ணுவோம். சகதியில் ஆழ்மடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் நிலை நம்முடையது. காக்கும் கரங்களையும் நம் நிலைக்கு இழுப்போமே அன்றி நாம் உய்வடைய வேண்டும் என்ற முனைப்பு நம்மிடம் ஏற்பட்டாலும் அது நமக்குப் பெரும்பாலும் பயன்படாமல் போகும் அபாய நிலை நம்முடையது.
”தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தநங்கதேவா
உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே.”
*
Subscribe to:
Posts (Atom)