உரைகள் மிகவும் உதவிதான் பழம் நூல்களைக் கற்பதற்கு. இல்லை என்று சொல்ல முடியாது. ஆயினும் சில இடங்களில் சில ஏதுக்கள் கொண்டு உரைகள் ஒரு வழியில் பார்க்கும் போது மூல நூலின் இணையான இடங்களே இயல்பான பொருள் தரும் வாய்ப்பும் உண்டு. மேலும் பல பழம் நூல்களில் ஒவ்விய ஆட்சிகளைக் காணும் போது இன்னும் தெளிவு பெற வழியும் பிறக்கும். உரைகளை மூடிய கதவு என்று சொல்ல முடியாது. ஊக்கிச் செலுத்தும் வழிகள் என்று நாம் கொள்ள வேண்டும். ஆனால் உரைகளின் நியாயங்களைச் சிறிதும் உணராமல் மனம் போன போக்கில் தோன்றியவாறு சிலர் பொருள் கொள்ளும் போது வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே இலக்காகி நிற்கும் அவலம்தான் மிஞ்சுகிறது.
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Friday, October 22, 2021
உரைகளும் திருக்குறளும்
கீர்த்தன வடிவில் நூல்கள்
பெரும் நூல்களைக் கீர்த்தனங்களாகப் பாடி நூலியற்றும் மரபு இருந்திருக்கிறது. ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்றவற்றை கீர்த்தனங்களாக இயற்றியவர் திருவிடைமருதூர் ஸ்ரீஅநந்தபாரதி சுவாமி அவர்கள். ஸ்ரீஅருணாசலக் கவிராயர் அவர்களின் ஸ்ரீராமநாடகக் கீர்த்தனை இவ்வகை இலக்கியத்திற்கே உந்து சக்தியாக அமைந்தது எனலாம். இராயபுரம் சுப்பராயர் அவர்களின் திருவிளையாடல் கீர்த்தனம், மஹாவைத்தியநாதய்யர் அவர்களின் தமையனார் இராமஸ்வாமி ஐயர் அவர்கள் இயற்றிய பெரிய புராணக் கீர்த்தனை என்று சிலவற்றைச் சொல்ல முடியும். இதைப் போல் கச்சியப்ப முனிவர் தமிழில் செய்த கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இருநூற்றிநாற்பது கீர்த்தனங்கள், முந்நூறு விருத்தங்கள் ஆகிய அளவில் ஸ்காந்த புராணக் கீர்த்தனை என்று செய்தவர் பெருங்கரை ஸ்ரீகவிகுஞ்சர பாரதி அவர்கள். (பிறந்த ஆண்டு 1810.)
சித்தாந்தம் என்று சொன்னால்
அதாவது வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கின்றன. நம்மைச் சுற்றியும் உலகம் இருக்கிறது. அதையும் புரிந்து கொள்கிறோம். நம்மையும் புரிந்து கொள்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இரண்டையும் புரிந்து கொண்டேதான் இருக்கிறோம். புரிந்து கொள்வதின் இந்தத் தொடர்ச்சிதான் வாழ்க்கையில் பயனே ஆகும். நம்மைப் புரிந்து கொள்வதிலும், உலகத்தைப் புரிந்து கொள்வதிலும் பலருடைய எழுத்துகள், ஆய்வுகள், உரையாடல்கள், பலருடைய வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், அவர்களைப் பற்றியதும், கருத்துகளைப் பற்றியதுமான பல்லூடக மொழிதல் எல்லாம் நமக்குப் பல விதத்திலும் உதவியாக இருக்கின்றன.
நம்மாழ்வாருக்கு விளக்கம் சொல்லும் திருமங்கையாழ்வார்
தமிழிலே வேதம் அருளிய நம்மாழ்வாரின் கருத்தை விளக்கும் விதமாக அமைந்தவை திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள். இவ்விருவர்தம் நூல்களுக்கும் துணையாக அமைந்தவை மற்றை எண்மர் நன்மாலைகள் என்பது ஒரு பார்வை. ஸ்ரீமதுரகவியாழ்வாரின் கண்ணிநுண்சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தத்தையே மீட்டும் அடைவதற்கு உறுதுணையாய் நின்ற உயர்நூல். ஸ்ரீஆண்டாளின் நூல்களோ தமிழ் வேதத்துக்கு அமைந்த உபநிஷதங்கள் ஆகும்.
பாணினிதான் இலக்கணம் என்றில்லை
மொழி என்பது இலக்கணத்தை விட பெரிய விஷயம் என்ற யதார்த்தமான பார்வை சம்ஸ்க்ருத வியாகரண அறிஞர்களிடையே இருந்து வருகிறது. அதாவது பாணினி என்பவர் இலக்கணம் செய்தால் அது மிகப் பெரும் சாதனைதான். மொழியின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கும் விதத்தில் ஓரமைப்பு என்ற விதத்தில் இலக்கணம் என்பது மொழியின் இயக்கத்தை, அதன் பரவலான செயல்பாட்டை மனத்திற்குப் புரியும்படி கொணர்ந்து ஒருங்குற நிறுத்துகிறது. ஆனால் ஒருவர் ஒரு காலத்தில் ஓரமைப்பியலாக இலக்கணம் ஒன்று செய்து விட்டால் அதன் பின்னர் அது ஒன்றுதான். வேறு இலக்கணங்கள் அந்த மொழிக்கு ஏற்கனவே இருந்தாலோ, அல்லது அடுத்து வரும் காலங்களில் ஏற்பட்டாலோ அதெல்லாம் தள்ளுபடி, கொள்ளத் தக்கது அல்ல, சான்றானவை அல்ல என்று ஒதுக்கித் தள்ளும் போக்கை மறுத்து சில அறிஞர்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார்கள். அவர்களின் கருத்து யாதெனில் மொழி என்பது எந்த ஓர் இலக்கண அமைப்பிலும் தீர்ந்து போய்விடும் விஷயம் அன்று. அந்த இலக்கணம் எத்தனை பெருமைக்குரியதாய் இருப்பினும் என்பதே.
சாத்திரத்தின் ஜுரம்
ஒருவருக்கு ஜுரம் படுத்துகிறது. ஏதோ உள்ளே ஒன்றுக்கொன்று ஒவ்வாமையினால் இந்த ஜுரம் என்று புரிகிறது. மருத்துவரிடம் சென்று காட்டுகிறார். அவரும் இந்தக் காரணத்தாலோ அல்லது அந்தக் காரணத்தாலோ என்று ஆராய்ந்து பல மருந்துகளைத் தருகிறார். ஆனாலும் உள்ளூற ஜுரம் இருந்தபடி இருக்கிறது. அப்பொழுது ஒரு மருத்துவர் நல்ல வேளையாக இந்த ஜுரம் இந்தக் காரணங்களினால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் என்று கண்டு பிடித்துத் தக்க மருந்து கொடுத்து விடுகிறார். ஜுரம் தணிகிறது.