என்னவெல்லாம் செய்கிறது இந்த மாயை! விவரம் தெரியாதவர்கள் சத்யம் எது என்று அறியாமல் மயங்கினால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் படித்தவர்கள்? வேதங்களைக் கற்று, வேதாந்தம் என்னும் உபநிஷதங்களை நன்கு கற்றுத் தேர்ந்து அறிஞர்களாக இருப்பவர்களும் கூட, பணம் மற்றும் பல நயங்களைக் கண்டு மனம் பேதுற்று, நாலுகால் பிராணிகளைவிட வித்யாசம் எதுவும் இல்லாதவர்களாய்க் கலங்க வைத்துவிடுகின்றதே சில சமயம் ! அப்படி ஆக்கிவிடுகிறதே இந்த மாயை! ஆகாததை ஆக்கிவைக்கும் இந்த மாயையின் வியப்புதான் என்னே!
‘ச்ருதிசத நிகமாந்த சோதகாநபி
அஹஹ தநாதிநிர்தர்சநேந ஸத்ய: |
கலுஷயதி சதுஷ்பதாதி அபிந்நாந்
அகடித கடநா படீயஸீ மாயா ||’
ஸ்ரீதாயுமானவ சுவாமிகள் அருமையாகப் பாடுகிறார்:
‘ஆதிக்கம் நல்கினவர் ஆர் இந்த மாயைக்கு?
என் அறிவு அன்றி இடம் இல்லையோ?
அந்தரப் புஷ்பமும், கானலின் நீரும், ஓர்
அவசரத்து உபயோகமோ?
போதித்த நிலையையும் மயக்குதே! அபயம் நான்
புக்க அருள் தோற்றிடாமல்,
பொய்யான உலகத்தை மெய்யா நிறுத்தி, என்
புந்திக்குள் இந்த்ரஜாலம்
சாதிக்குதே! இதனை வெல்லவும் உபாயம் நீ
தந்து அருள்வது என்று புகல்வாய்?’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment