Saturday, February 26, 2022

கணபதி துதி

கணாதிப நமஸ்துப்யம் ஸர்வவிக்னப்ரசாந்தித I
உமாநந்தப்ரத ப்ராஜ்ஞ த்ராஹி மாம் பவஸாகராத் II
ஹராநந்தகர த்யான ஜ்ஞானவிக்ஞானத ப்ரபோ I
விக்னராஜ நமஸ்துப்யம் ஸர்வதைத்யைகஸூதன II
ஸர்வப்ரீதிப்ரத ஸ்ரீத ஸர்வயக்ஞைக ரக்ஷக I
ஸர்வாபீஷ்டப்ரத ப்ரீத்யா நமாமி த்வாம் கணாதிப II
(பத்ம புராணம், ஸ்ருஷ்டி கண்டம்)


பொருள் :
கணங்களின் தலைவரே! அனைத்து இடர்ப்பாடுகளையும் களைபவரே! உமாதேவிக்கு ஆனந்தம் விளைவிப்பவரே! அறிவே வடிவானவரே! உமக்கு நமஸ்காரம். பவஸாகரத்தினின்றும் என்னைக் காப்பாற்றுவீர்! ஹரனுக்கு ஆனந்தம் தருபவரே! ஞானமும் விஞ்ஞானமும் அளிப்பவரே! விக்னங்களையெல்லாம் அடக்கியாள்பவரே! உமக்கு நமஸ்காரம். அரக்கர்களை நீக்குபவரே! அனைத்து ப்ரீதி களையும் அளிப்பவரே! செல்வத்தைத் தருபவரே! அனைத்து யக்ஞங்களையும் ஒருவராய்க் காப்பவரே! அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவரே! உம்மைப் ப்ரீதியுடன் வணங்குகின்றேன் கணாதிபரே!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment:

  1. நல்ல தொண்டு. சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete