Friday, July 15, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 64

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதே3வ நாத2

தவாஹமஸ்மீதி ச யாசமாந: |

தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்

மதே3கவர்ஜம் கிமித3ம் வ்ரதம் தே || 

நாதனே! ’ஒரே முடிவாய் உன்னைச் சரணடைந்துவிட்டேன்’, ‘நான் உனக்கே ஆட்பட்டவன் ஆகவேணும்’ என்றெல்லாம் வேண்டி உன்னை யாசிக்கின்ற நான், (சரணாகதி அடைந்தோர் குறித்து) நீ செய்துள்ள பிரதிஜ்ஞையை என்றும் நினைவுகொண்டிருக்கும் உனக்குத் தயையுடன் அருள்செய்யத் தக்கவன் அன்றோ? (சரணாகதி அடைந்தோரைக் கைவிடேன்) என்ற உன்னுடைய விரதம் என் ஒருவனைத் தவிர்த்துவிட்டு இயலுமோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment