Thursday, July 14, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 63

ரகு4வர யத3பூ4ஸ்த்வம் தாத்3ருசோ வாயஸஸ்ய

ப்ரணத இதி த3யாளுர்யச்ச சைத்3யஸ்ய க்ருஷ்ண

ப்ரதிப4வம் அபராத்3து4ர் முக்34 ஸாயுஜ்யதோ3Sபூ4:

வத3 கிமபத3மாக3ஸ்தஸ்ய தேSஸ்தி க்ஷமாயா: || 



ரகுவரனே! அப்படிப்பட்ட பாபம் செய்த காகாஸுரன் விஷயத்தில் சரணாகதி செய்தான் என்பதே கொண்டு தயாளுவாய் அருளினாய் அன்றோ! குற்றமே இல்லாத கிருஷ்ணனே! ஜன்மம் தோறும் அபராதமே செய்து போந்த சேதிகுலத்தவனான சிசுபாலனுக்கு ஸாயுஜ்யமே கொடுத்தாய் அன்றோ! அத்தகைய உன்னுடைய பொறுமைக்குப் பாத்திரம் அல்லாத பாபம் என்னதான் இருக்கிறது? நீயே கூறியருளாய்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***























No comments:

Post a Comment