Monday, July 11, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 60

பிதா த்வம் மாதா த்வம் த3யிததநயஸ்த்வம் ப்ரியஸுஹ்ருத்

த்வமேவ த்வம் மித்ரம் கு3ருரஸி க3திச்சாஸி ஜக3தாம் |

த்வதீ3யஸ் த்வத்3ப்4ருத்யஸ் தவ பரிஜநஸ் த்வத்33திரஹம்

ப்ரபந்நச்சைவம் ஸத்யஹமபி தவைவாஸ்மி ஹி ப4ர: || 

உலகத்திற்கெல்லாம் தகப்பனும் நீயே; தாயும் நீயே; பிரியமான மகனும் நீயே; என்றும் அன்புடைய தோழனும் நீயே; மறைப்பில்லாமல் உள்ளத்தில் உள்ளதைப் பகிரத்தக்க நட்பும் நீயே; ஆசாரியனும் நீயே; நல்வழியும் நீயே. நானோ உன்னைச் சேர்ந்தவன்; உன்னுடைய அடிமை; உனக்குத் தொண்டு செய்யும் வேலைக்காரன்; உன்னையே ஒரே உபாயமாகக் கொண்டவன்; உன்னிடம் சரணாகதி அடைந்த பிரபன்னன். இவ்வாறு இருக்கையில் நான் உனக்கே காக்க வேண்டிய பொறுப்புள்ள அடைக்கலமடைந்த உயிர் ஆக அன்றோ இருக்கின்றேன்! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment