Friday, May 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - சுலோகம் 01

நமோSசிந்த்ய அத்3பு4 அக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்3 ராயே

நாதா2 முநயே S கா34 43வத்3 4க்தி ஸிந்த4வே ||  

என்னைத் தடுத்தாட்கொண்ட தலைவர், நாதர் அவர். 

அது மட்டுமா? ஆழ்வார்களின் திருமால்நெறி  வாழவேண்டும் என்றும், அதில் நான் ஈடுபட வேண்டும் என்றும், முன்னமே நன்கு மனன சீலராய் நன்கு கருதி அன்றோ மணக்கால் நம்பிகளைப் பணித்துவிட்டுப் போயிருக்கிறார். கண்ணில் பார்க்கும் உயிருக்கு மட்டுமன்றி, கண்காணாத இனித்தான் வரப்போகும் உயிர் என்னும்படியான என்னையொத்த எத்தனை உயிர்களுக்கு நன்மையைக் கருதிப் பாதுகாப்பு செய்துவிட்டுப் போயிருக்கிறார் அந்த நாதரும் முனிகளும் ஆன நாதமுனிகள்! நன்கு தீர ஆலோசித்து இனிவரப்போகும் நெடுங்காலத்திற்கு நன்மை கருதும் மனனசீலம் மிக்கவனை அன்றோ முனி என்பது! என்றால் அவர்தானே முனிகள்! நாதாய முநயே

அவருடைய ஞானம்தான் எத்தகைய அற்புதமானது! நம் சிந்தனைக்குச் சிறிதும் எட்டாத தளங்களில் எல்லாம் சிறகடித்துப் பறக்கவல்லது அவர்தம் ஞானம்! இத்தனைக்கும் அந்த ஞானத்திற்காக அவர் ஏதும் உபாசனம் எதுவும் செய்யவில்லை. கடவுளின் அருள் அவரிடம் அப்படி ஞானத்தை மலைமலையாகக் குவித்தது. ஆம் அவர் ஞானராசிகளுக்கு, ஞானமலைக்குவியலுக்குச் சொந்தக்காரர். ஞானம் மட்டுமா? ஞானம் மலை என்றால் அவருடைய வைராக்கியம் ஒரு பெருமலை அல்லவா? இல்லையேல் பேரரசன் பின் தொடர இருந்தவர் ஆழ்வார்களின் பத்துப் பாசுரங்களைப் பின் தொடர்ந்து அப்படி அலைபவராக ஆவரா? அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞானவைராக்கிய ராசயே !

ஞானம் ஒரு மலை. வைராக்கியமோ பெரிது என்றால் அவருடைய பக்தி! ஆழம் காண இயலாத பெருங்கடல் அன்றோ அவருடைய பக்தி! பெருவெள்ளமெடுத்த அந்தப் பக்தியில்தானே அவரும் வில்தாங்கிய இருவர் குரக்குடன் வந்தார் என்று பின் தொடர்ந்து போய்விட்டார்! அகாத பகவத் பக்திக் கடல், ஸிந்து என்றால் அவர்தான்! அவரை வணங்குகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

4 comments:

  1. ஆரம்பமே களை கட்டுகிறது

    ReplyDelete
  2. ஆரம்பமே களை கட்டுகிறது

    ReplyDelete
  3. விளக்கம் அற்புதம்.

    ReplyDelete