Wednesday, May 25, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 13

வேதா3பஹார கு3ருபாதக தை3த்யபீடாத்3 

யாபத்3 விமோசந மஹிஷ்ட்ட2 பலப்ரதா3நை: | 

கோSந்ய: ப்ரஜாபசுபதீ பரிபாதி கஸ்ய 

பாதோ33கேந சிவஸ் ஸ்வசிரோத்4ருதேந || 


வேதங்களை அசுரர் திருடிய போதும், குருபாதகச் செயல்களிலும், தைத்யர்களால் ஏற்பட்ட பல இன்னல்களிலிருந்தும் காப்பாற்றியதாலும், உயர்ந்த பலன்களை நீர் அளிப்பதனாலும் உம்மை விட்டால் பிரம்மா, பசுபதி முதலிய தேவர்களை வேறு யார் காத்தருள்கிறார்கள்? யாருடைய திருப்பாத கமலங்களினின்றும் பெருகிய கங்கையைத் தலையில் சடையில் தாங்கியமையால் ருத்ரன் சிவன் என்று சொல்லப்பட்டார்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment