Monday, May 16, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 04

தத்வேந யச்சித3சிதீ3ச்வர தத்ஸ்வபா4

போ4கா3பவர்க்க3 தது3பாய 3தீ: உதா3: |

ஸந்த3ர்யந் நிரமிமீத புராணரத்நம்  

தஸ்மை நமோ முநிவராய பராராய ||



வெளிப்படையாகச் சொன்னவர் ஆகையாலே உதாரர். ஸ்ரீவிஷ்ணு புராணம் எழுதிய பராசரர் என்னும் முனிவர், முனிவர்கள் எல்லாம் தம்மை அண்டிக் கேட்க விளக்கம் தரவல்ல முனிவரர். சித், அசித், ஈச்வரன் (உயிர், உலகப் பொருள், கடவுள்) இவற்றின் உள்ளபடியான இயல்புகள், உலக வாழ்க்கையில் கர்மங்கள் கர்மபலன்களைத் துய்த்தல், மோக்ஷம் என்னும் வீட்டுலகின் நிலைமை, கர்மங்கள் கழன்று வீடுபேறு அடைவதற்கான உபாயம், அடையப்படும் பேற்றின் சிறப்புகள் இவற்றையெல்லாம் உள்ளது உள்ளபடி விளக்கிக் காட்டிப் புராணங்களில் ரத்நம் என்று சொல்லத்தக்க ஸ்ரீவிஷ்ணு புராணத்தை இயற்றியருளிய அந்தப் பராசர முனிவரருக்கு நமஸ்காரம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment