Sunday, May 29, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 17

யத3ண்டம் அண்டா3ந்தரகோ3சரம் யத் 

3சோத்தராணி ஆவரணாநி யாநி

கு3ணா: ப்ரதா4நம் புருஷ: பரம் பத3ம் 

பராத்பரம் ப்3ரஹ்ம தே விபூ4தய: || 



அண்ட முழுமையும் எதுவோ, அண்டத்தினுள் இருக்கின்றவை எதுவோ, மேன்மேல் அடுக்கு அடுக்காக மூடியாய் அமைந்திருக்கும் நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற ஆவரணங்கள் எவையோ, மூன்று குணங்களான சத்வம், ரஜஸ், தமஸ் என்பவையும், அவற்றை உள்ளடக்கிய பிரதானம் என்னும் பிரகிருதியும், ஸம்ஸாரத்தில் கட்டுண்டு சுழலும் ஜீவர்களின் மொத்தமும், அனைத்தினும் மேம்பட்ட ஸ்ரீவைகுண்டமும், அருள்வடிவாம் திவ்யமங்கள விக்ரகமும் எல்லாம் உன்னுடைய விபூதிகள், சரீரங்கள் அல்லவோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment