Wednesday, May 18, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 06

யந் மூர்த்4நி மே ச்ருதி சிரஸ்ஸு பா4தி 

யஸ்மிந் அஸ்மந் மநோரத2பதஸ் ஸகலஸ்ஸமேதி

ஸ்தோஷ்யாமீ : குலத4நம் குல2தை3வதம் தத் 

பாதா3ரவிந்த3மரவிந்த3விலோசநஸ்ய || 



யாருடைய திருவடிகள் ஒக்க என் தலையிலும், வேதங்களின் முடியிலும் (உபநிஷதங்களிலும்) விளங்கித் தோன்றுகிறதோ, எந்தத் திருவடிகளினிடத்தில் நம் மனோரதங்கள் (விருப்பங்கள்) எல்லாம் அனைத்தும் நிறைவு எய்துகின்றனவோ, உறவால் நமக்குக் கிடைக்கப் பெறுகின்ற குலதனமாய் இருப்பதும், நமது முந்தையர் வழிவழியாக வணங்கி வழிபட்டு நமக்குக் காட்டிய குலதெய்வமாக இருப்பதும் ஆன அந்த இணையடித் தாமரைகளைப் பாடுகின்றேன். (கதிரொளி கண்டு மலரும் தாமரை. ஆனால்) இந்த அரவிந்தமோ நாம் சென்று பணிந்தேத்த மலரும், சுடரும் அரவிந்த விலோசநம். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment