Monday, May 23, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 11

ஸ்வாபா4விக அநவதி4காதி சித்ருத்வம் 

நாராயண! த்வயி ம்ருஷ்யதி வைதி3: : | 

ப்3ரஹ்மா சிச்தமக2: பரம: ஸ்வராடி3த் 

யேதேSபி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே || 



யார் வேதவேதாந்தங்களைப் பரம்பொருள் யார் என்று அறியவும், மோக்ஷத்திற்கான மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் உரிய சான்று நூலாகக் கொண்டு அதனைக் கற்று அதன் முடிவுகளை வைத்து ஒழுகுகின்றார்களோ அவர்கள் வைதிகர்கள். அந்த வைதிகர்களிடம் சென்று ‘நாராயணனே தன்னியல்பிலேயே எல்லையற்ற சிறப்பும் ஈச்வரத்தன்மையும் கொண்டு திகழும் பரம்பொருள்’ என்று சொன்னால் அவர்கள் தங்கள் வேதவேதாந்தங்கள் முடிவாகக் காட்டும் பரம்பொருளும் நாராயணனே என்பதால் அதற்கு இசையாமல் இருப்பார்களோ? இந்தக் கருத்தை நாராயணனிடமே கூறுவதாக அமைந்திருக்கிறது இந்தச் சுலோகம். 

நாராயணா! யாருடைய மஹிமையாகிய கடலில் துளிகள் போன்று பிரம்மாவும், சிவனும், இந்திரனும், என்றும் ஸம்ஸாரத்தில் நுழையாத நித்யமுக்தரும், இன்னும் இவரையொத்தோர் எல்லாம் இருக்கின்றனரோ அந்த உன்னுடைய இயல்பானதும், எல்லையற்ற சிறப்பும் ஈசுவரத்தன்மையும் உன்னிடமே பொருந்தியுள்ளது என்று சொன்னால் அதை இசையாமல் பிணங்கும் வைதிகர்கள் யார்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment