Friday, May 20, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 08

யத்3வா ச்ரமாவதி4 யதா2மதி வாப்யக்த

ஸ்தௌம்யேவமேவ 2லு தேபி ஸதா3 ஸ்துவந்த: | 

வேதா3: சதுர்முக2முகா2ச் மஹார்ணவாந்த

கோ மஜ்ஜதோ: அணுகுலாசலயோ: விசே: || 



கடலுக்கடியில் மூழ்கியவைகளைப் பார்த்தால் ஒரு கூழாங்கல் இருக்கிறது. அங்கு ஒரு பெரிய மலையும் இருக்கிறது. பெரிய மலை என்பதால் கொஞ்சமாகத்தான் முழுகியது. கூழாங்கல் என்பதால் முழுக்கவும் மூழ்கிவிட்டது என்று ஏதேனும் வித்யாசம் உண்டா? முழுகிப் போய் நீருக்கடியில் இருப்பவை என்பதில் எல்லாம் ஒன்றுபோல்தானே? என்னால் முடியாது என்று தெரிந்தாலும் என் ஞானம், என் சக்தி இவைகளுக்கேற்றபடிப் பகவானைத் துதிக்கின்றேன். ஞானத்தாலும், சக்தியாலும் மிக்க பெரியவர்களான சதுர்முகன், சநகாதிகள், எப்பொழுதும் துதிக்கவல்லதான வேதங்கள் இவர்கள் எல்லாம் கூட என்ன சொல்கிறார்கள்? தங்கள் சக்திக்கும், ஞானத்திற்கும் தக்கபடி மாத்திரமே பகவானைத் துதிக்க முயல்வதாகக் கூறுகின்றனர். வேதமோ முழுவதும் துதிக்க முயன்று மனத்துடன் கூட வாக்கும் திரும்பி வந்துவிட்டது என்றே சொல்கிறது. அசக்தன் நான் என்ன சொல்கிறேன். ஏதோ என் அறிவுக்கெட்டினவரையில் என்கிறேன். என்ன வித்யாசம்? கடலுக்கடியில் முழுகிப் போன மலைக்கும் அணுவுக்கும் இடையில் என்ன விசேஷம்? எல்லாம் முழுகிப் போய்க் கிடக்கிறது. அவ்வளவுதான். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment