Thursday, May 19, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 07

தத்வேந யஸ்ய மஹிமார்ணவசீகராணு

க்யோ மாதுமபி ர்வபிதாமஹாத்3யை: | 

கர்த்தும் ததீ3யமஹிமஸ்துதிம் உத்3யதாய 

மஹ்யம் நமோSஸ்து கவயே நிரபத்ரபாய || 



எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தது போல் ஒருவருக்கும் நமஸ்காரம் செய்துவிட வேண்டும். அஃது யாருக்கெனில் எனக்குத்தான். ஏனெனில் யாருடைய தத்வத்தை உள்ளபடி. யாருடைய பெருமையென்னும் கடலில் ஒரு துளியையேனும் இவ்வண்ணம் என்று அளந்து அறிந்து சொல்லிவிட சர்வன் என்னும் சிவனாலும், பிதாமஹர் என்னும் பிரம்ம தேவனாலும் முடியாதோ அந்தப் பகவானின் மஹிமையை அனைத்தும் போற்றிப் பாட முனைந்தேன் அல்லவா, கவி என்று பேர் வைத்துக்கொண்டு, வெட்கமே இல்லாமல்? நிச்சயம் எனக்கு ஒரு நமஸ்காரம். 
(உண்மையில் வடமொழி காவிய சாத்திர உலகில் ஸ்தோத்ரம் என்ற வகைக் கவிதைக்கு உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது இந்த ஸ்தோத்ர ரத்நம் ஆகும்) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment