Saturday, May 28, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 16

உல்லங்கி4 த்ரிவித4ஸீம ஸமாதிசாயி 

ஸம்பா4வநம் தவ பரிப்3ரடி4மஸ்வபா4வம்

மாயாப3லேந 4வதாSபி நிகூ3ஹ்யமாநம் 

ச்யந்தி கேசித3நிம் த்வத3நந்யபா4வா: || 



(அசுரத் தன்மையால் சிலர் உன்னை அறிவதேயில்லை என்பது ஓரளவிற்கு உண்மையாயினும் அங்கும் அவர்களின் அசுரத் தன்மை எப்படி ஏற்படுகிறது? அவர்களும் ஜீவர்களில் ஒருவர்தானே? பிரகிருதியினாலும், அவர்கள் செய்த கர்மங்களின் பலன்களின் தொடர்ச்சியினாலும் அவர்களுக்கு அப்படிப்பட்ட தன்மை ஏற்படுகிறது? ஏன் அவர்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் இருக்கும் நீ அவர்களின் அசுரத் தன்மையை நீக்கி உணர்த்திவிட முடியாதா என்றால், அந்தப் பிரகிருதியே உன் ஆச்சரியமான விசித்ர மாயைதானே! அவர்களின் கர்மங்கள் கழிந்து அந்த ஜீவர்கள் பக்குவ நிலைக்கு வரவேண்டும் என்று நீயும் உன் உள்ளபடியான ஸ்வரூபத்தை உன்னுடைய ஆச்சரியமான மாயையால் மறைத்துவிடுகிறாய் அன்றோ!) 

உள்ளபடியான உன் ஸ்வரூபம் இருக்கிறதே அஃது எப்படிப் பட்டது? காலத்தால் அளவுபடுதல், இடத்தால் அளவுபடுதல், பொருளின் தன்மையால் அளவுபடுதல் என்னும் மூவித எல்லைகளையும் கடந்தது உன் ஸ்வரூபம். தனக்குச் சமமான ஒன்று, தனக்கு அதிகமான ஒன்று இருக்கலாம் என்னும் சாத்தியத்தையும் கடந்தது உன் பிரபுத்தன்மை மிக்க ஸ்வபாவம். உன்னாலேயேதான் உன் ஆச்சரியமான மாயையின் பலத்தினால் அந்த உன் நிஜமான ஸ்வபாவம் பொதுவாக ஜீவர்களின் பார்வைக்கு மறைக்கப்பட்டு விடுகிறது. ஆனாலும் சில ஞானிகள் இருக்கின்றார்கள், அவர்கள் உன்னையே உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று உன்னையன்றி வேறு இல்லாத தன்மையர்கள் ஆகையாலே உன் நிஜமான ஸ்வபாவத்தை உள்ளபடி எக்காலமும் இடைவிடாது பார்க்கின்றார்கள் அல்லவா! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment