Monday, May 30, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 18

சீ வதா3ந்ய: கு3ணவாந் ருஜு: சுசி

ம்ருது3ர் 3யாளு: மது4: ஸ்தி2: ஸம: | 

க்ருதீ க்ருதஜ்ஞ: த்வமஸி ஸ்வபா4வத

ஸமஸ்தகல்யாண கு3ணாம்ருத உத3தி4: || 



ஸ்ரீஆளவந்தார் இங்கே ஒரு நாமாவளியே பாடுகிறார். ஆச்ரிதர்களுக்கு வசப்பட்டிருப்பவன் ஆகையாலே வசீ. தம்மை அடைந்தார்க்குத் தம்மையே நல்கும் வள்ளல் ஆகையாலே வதாந்ய:. ஸௌசீல்யம் என்னும் எளிவரும் இயல்பினன் ஆகையாலே குணவாந். அடியார்களுக்கு அருளும் போது அவர்கள் பக்குவத்திற்குத் தக்கபடியெல்லாம் தன்னை அமைத்துக் கொடுத்து அவர்களுக்குப் பக்குவத்தையும் உண்டாக்கி மேலும் மேலும் இலட்சியத்தை நோக்கி நடத்துபவன் ஆகையாலே ருஜு: அருள்வதற்கு அவர்களிடத்தில் ஏதேனும் காரணம் உண்டாக வேண்டும் என்று எதிர்பாராதே நிர்ஹேதுகமாக அருள்பவன் ஆகையாலே சுசி: அடியார்களை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாத ஸ்வபாவன் ஆகையாலே ம்ருது: அடியார்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தயையை உடையவன் ஆகையாலே தயாளு: ஒரு பேச்சுக்கு, அவன் தயையே இல்லாமல் இருந்தாலும் அவனை அடியார்களால் விடமுடியாத அளவிற்கு இனியவன் ஆகையாலே மதுர: அடியார்களைக் காக்கும் விஷயத்தில் எந்த மாற்றமோ சலனமோ இல்லாதவன் ஆகையாலே ஸ்திர: தன் அடியார்கள் இடத்தில் என்றும் எந்தப் பேதமும் இன்றிச் சமமான அக்கறை உடையவனாயிருக்கையாலே ஸம: அடியார்களின் காரியங்களைத் தன் காரியம் போல் நினைத்துச் செய்பவன் ஆகையாலே க்ருதீ, அடியார்கள் செய்த சிறிய நன்மைகளையும் பெரிதாய் நினைத்துப் போற்றுபவன் ஆகையாலே க்ருதஜ்ஞ: இப்படிப்பட்ட நீ இயல்பிலேயே அனைத்துக் கல்யாண குணங்களுக்கும் புகலிடமான அமுதப் பெருங்கடலாய் இருக்கிறாய் அன்றோ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment