Sunday, May 15, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 03

பூ4யோ நமோSபரிமித அச்யுத 4க்திதத்வ 

ஜ்ஞாநாம்ருதாப்3தி4 பரிவாஹசுபை4ர் வசோபி4: |  

லோகேSவதீர்ண பரமார்த்த2 ஸமக்3ரப4க்தி 

யோகா3 நாத2முநயே யமிநாம் வராய || 



மீண்டும் அவரையே வணங்கித் தொழுகிறேன். நம்மைக் காப்பதில் என்றும் நழுவாதவன், நம்மையும் என்றும் நழுவவிடாதவன் என்னும்படியான அச்யுதனிடம் கொள்ளும் தூய பக்தியென்ன, உள்ளபடியான தத்வஞானம் என்ன இவையிரண்டும் கடலும் கரையுமாய்ப் பொங்கி வழியும் அமுதவெள்ளம் ஆகிவிட்டது. கரையுடைத்த வெள்ளத்திற்குப் போக்குவீடு விட்டதுபோல் சுபம் நிறைந்த வாக்குகள் வெளிப்பட்டன. அந்த வாக்குகளால் உலகமே உய்வடைய அதற்காகவே அவதரித்த அந்த விசேஷமான பக்தி யோகமோ தானே தனக்குப் பெரும்பயன் என்று அமைந்தது. பிறிதொன்றை வேண்டாது தன்னிலேயே பூரணமானது. அந்த பரமார்த்த ஸமக்ர பக்தியோகத்தை உலக நன்மைக்காக அவதரிப்பித்தவர் யோகிகளில் தலைவராகிய நாதமுநிகள். அவரையே மீண்டும் வணங்குகிறேன். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment