Monday, March 16, 2020

புஷ்பங்களின் தத்துவம்

என்ன என்ன நூல்கள்! எந்தப் பொருள் பற்றி! எந்தப் பூக்களை எந்தக் காலத்தில் பறிக்க வேண்டும்; எந்தத் தெய்வத்திற்கு எந்தப் பூ உகந்தது - இப்படி ஒரு புத்தகம் புட்பவிதி. நூல் செய்தவர் திருவாரூர் ஞானப்ரகாச பட்டாரகர். நூல் வந்த ஆண்டு 1906. இன்னும் ஒரு நூல் புட்பபலன். எந்தப் பூவை எந்தத் தெய்வத்திற்குப் பூசித்தால் என்ன பலன். உள்ளே போனால் பூக்களுக்கும், மனத்தின் பாவங்களுக்கும், தெய்வத்தின்பால் பக்திக்கும் உள்ள பரஸ்பரம் வியப்பாக இருக்கிறது. (ஸ்ரீஅன்னை அவர்கள் மலர்களைப் பற்றிய ஆன்மிகத் தன்மைகளை விளக்கி ஒரு நூல் உண்டு ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில்.)

பூக்களில் பொதுவான வகைகள் என்ன என்று புட்பவிதியும் புட்பபலனும் என்னும் நூல் கூறுகிறது 1906ல்.

’கோட்டுப் பூக் கொடிப்பூ நீர்ப்பூ குலவிய நிலப்பூ நான்காம்
கோட்டுப் பூவதனில் கொன்றை
கொடிப்பூவில் தாளியாகும்
நீட்டுநீர்ப் பூவில் நீலோற்பலமாகும்
நிலப்பூதன்னில்
நாட்டிய தும்பைதானே நவிலதில் அதிகமாகும். ‘

பூக்கள் நான்கு வகை. கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment