Monday, March 16, 2020

ஸ்ரீபாகவத ஸாரம் ஸ்ரீஅண்ணா

நிகம கல்பதரோர் கலிதம் பலம்
சுகமுகாத் அம்ருதத்ரவ ஸம்யுதம் |
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா: ||

நிகமம் என்னும் வேதக் கற்பகத் தருவினின்றும்
சுகருடைய வாயினின்றும் நழுவி விழுந்ததாம்
பாகவதம் என்னும் கனி, அமுதமே நிறைந்தது;
ரஸனை மிக்கவர்களே! முடிவின்றித் திளையுங்கள்.

பாகவதத்திலும் தமிழில் பல மொழிபெயர்ப்புகள் வந்ததுண்டு. ஆயினும் இரண்டு வால்யூம்களாக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ அண்ணா சுப்ரமண்யம் அவர்கள் ஸாரமாகத் திரட்டி ஏழுநாளில் படிக்கும் நிரலாக அமைத்துத் தந்த அந்த ஸ்ரீபாகவத ஸாரத்தைப் படித்த எவர்தான் பண்டிதர் ஆகாமல் இருப்பார்?

அவரைப் பார்த்துப் பேசவும், அவர் வீட்டிற்குச் சென்று அவரது பூஜையைக் காணவும் கிடைத்தது ஒரு பாக்கியமே. ஸ்ரீராமகிருஷ்ணரின் நேர்சிஷ்யரான தாரக் என்னும் சுவாமி சிவாநந்தரின் சிஷ்யர். அவருடைய பாகவத ஸாரத்தில் கீழ்க்குறிப்புகளே என்ன மதிப்பு! அதனோடு கூட அந்த ஆன்மிகம் துலங்கும் தமிழ்நடை மூலத்தை அப்படியே படித்த கம்பீரத்தையும், அர்த்தத்தின் ஆழத்தையும் ஒருங்கே தரக்கூடியது. பரமரிஷிப்யோ நம:
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment