Monday, March 16, 2020

விநாயகர் கலிவெண்பாவும் திரு தி குப்புசாமி ஐயரும்

ராஜமன்னார்குடியில் 1912ல் நேஷனல் ஹைஸ்கூலில் தமிழ்ப்பண்டிதராய் இருந்திருக்கிறார் திரு தி குப்புசாமி ஐயர் அவர்கள். அவர் தேன்பாகாய்ச் சில செய்யுட்கள் இயற்றியுள்ளார். விநாயகர் கலிவெண்பா, விநாயகர் இரட்டைமணி மாலை, ஸ்ரீவாதவூரடிகள் இரட்டைமணி மாலை என்பன. மூன்றும் சேர்த்தாலும் நூல் மொத்தம் 16 பக்கங்கள்தாம் வருகின்றன. விநாயகர் அகவலோடு இந்த விநாயகர் கலிவெண்பாவும் சேர்ந்து, நமது பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலையும் சேர்ந்தால் சதுர்த்தி ஸ்பெஷலாக இருக்கும்.

“திங்களணி செஞ்சடையாய் தெய்வத் திருநீற்றாய்
கொங்கவிழும் கொன்றையணி குஞ்சரமே - யங்கொருநாள்

பூதரந் தன்னில் புனிதமாம் பாரதத்தை
யாதரங் கொண்டெழுது மற்புதத்தோய் - காதலித்த

வன்பாளர் வேண்ட வவர்முன்னர்ப் போந்தருளி
யின்பார் வரமளிக்கு மேந்தலே - வன்பார்

மலமாயை கன்மமெனு மாமலத்தைப் போக்கிக்
குலமான ஞானங் கொடுப்போய் - நிலையான

வேதப் பொருளாயவ் வேதமுங் காணரிய
போதப் பொருளாய புத்தேளே...”

என்று போகிறது கலிவெண்பா.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment