Monday, March 16, 2020

பகவான் தத்தாத்ரேயர்

பகவான் தத்தாத்ரேயர் என்னும் அவதார புருஷரைப் பற்றிப் புராணங்கள் நெடுகிலும் புகழ்கள் காணப்படுகின்றன. அவருடைய வைபவத்தைக் குறித்த தொகுப்புகளும் வந்துள்ளன. தளாதன மகரிஷி என்பவர் செய்த ஸ்தோத்திரம் தத்தலஹரி என்பதாகும். 102 ச்லோகங்களால் துதிக்கும் ஓர் அரிய நூல் இது. ப்ரஹ்மஸ்ரீ ஆங்கரை ரங்கஸ்வாமி சாஸ்திரிகள் என்பார் இதனைத் தமிழ்ப் பதவுரை, விளக்கத்துடன் பதிப்பித்துள்ளார். நூல் வந்த ஆண்டு 1950.

மஹாயோகாதீசை: அவிதித மஹாயோகசதுரம்
கதம் ஜாநந்தி த்வாம் குடில மதயோ மாத்ருச ஜநா: |
ததாபி த்வாம் ஜாநே தவ பத யுகாம்போஜ பஜநாந்ந
சேத்த்வத் பாதாப்ஜ ஸ்ம்ருதிவிஷயவாணீ கதமபூத் ||

‘மஹாயோகீஸ்வரர்களுக்கு அறியவொண்ணா மஹாயோகத்தில் வல்லவர் நீர்; என் போன்ற குடில மதி உள்ளவர்கள் யாங்ஙனம் தங்கள் பெருமையை அறிய முடியும்? ஆயினும் தங்கள் சரணகமலங்களில் தோய்ந்து தொழுவதை அறிந்திருக்கிறோம் அன்றோ! பின் எப்படித்தான் தங்கள் இணையடி மலர்களைப் பற்றிய நினைவால் ஆன வாக்கு எங்களிடம் ஏற்பட்டிருக்கும்!’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment