Monday, March 2, 2020

பரம்பொருள் ஒன்று பக்தி பலவிதம் - முக்திகோபநிஷதம்

பரம்பொருள் ஒன்று. அதை ஞானிகள் பலவாறாக விவரிக்கிறார்கள் - என்னும் கருத்தை வேதம் எவ்வளவு வழிகளிலெல்லாம் அலுக்காமல் உணர்த்துகிறது!

முக்திக உபநிஷதம் என்பதில் ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமபிரான் உபதேசிப்பதாக வருகிற பகுதியில் ததேதத் ருசாப்யுக்தம் - அதுவே ரிக்வேத மந்திரமும் சொல்கிறது - என்று ஒரு மந்திரம் மேற்கோள் காட்டப் படுகிறது. உயர்ந்த சாக்ஷாத்காரத்தை அடைந்த ஞானிகள் அங்கு பரம்பொருளை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு அரிய ஓர் உதாரணம் கூறப்படுகிறது. கண் எப்படி அங்கும் இங்கும் எங்கும் ஒரேமட்டாகப் பரவிய ஆகாயத்தைப் பார்வை கொள்ளுமோ அதைப் போல் விஷ்ணுவின் பரமம் பதம் என்னும் அந்த உயர்ந்த சாக்ஷாத்கார நிலையில் பாரமார்த்திக அனுபவம் இருக்கிறது.

அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய்
ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது எது

என்று ஸ்ரீதாயுமானவரின் வார்த்தைகள் அந்த நிலையை எப்படிப் படம் பிடிக்கின்றன!

அந்த அனுபவத்தை வெளியில் சொல்லும் பொழுது ஞானிகள் பலவாறாக விவரிக்கிறார்கள்.

தத் விஷ்ணோ: பரமம் பதம்
ஸதாபச்யந்தி ஸூரய:
திவி இவ சக்ஷுராததம்
தத் விப்ராஸோ விபந்யவோ
ஜாக்ருவாம்ஸ: ஸமிந்ததே
விஷ்ணோர் யத் பரமம் பதம்
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment