Tuesday, March 31, 2020

முகம் பார்க்கும் கண்ணாடி

என்ன அழகான கருத்து, பகவத்பாத ஸ்ரீஆதிசங்கரரின் சுலோகமொன்று!

நாம் ஏன் கடவுளை வணங்குகிறோம்? நமக்குத்தானே வருத்தம், பயம், தேவை எல்லாம். நமக்கு ஒன்று தேவை என்றால் உடனே கடவுளிடம் போய் முறையிடுகிறோமே ஏன்? இதற்குப் பல ஞானிகளும் பல விதங்களில் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீஆதிசங்கரர் சொன்ன பதிலில் என்னமோ ஓர் அழகு, ஓர் ஆழம்!

ஸ்ரீஆதிசங்கரர் கேட்கிறார்: நீ கண்ணாடியைப் பார்ப்பதுண்டா? ஆமாம். நீ நெற்றியில் பொட்டு இட்டுக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருந்தாய். ஆனால் கண்ணாடியில் பார்த்ததும் அடடா நெற்றிக்கு இட்டுக்கொள்ள மறந்துவிட்டதே என்று போய் எடுத்துவந்து எந்த நெற்றியை அலங்கரிக்கிறாய்? கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பத்தின் நெற்றியையா? இல்லையே. கண்ணாடிக்கு முன்னர் நிற்கும் பிம்பமாகிய உன் நெற்றியில்தானே அலங்காரம் செய்கிறாய்? அது போல் உன்னை நீ மேம்படுத்த விரும்பினால், அல்லது நீ இந்த தேகி என்று நினைப்பாயாகில் உனக்குள்ளே பிரபுவாக உணரப்படுகின்ற உன் ஜீவனுக்கு நன்மை செய்ய வேண்டும், அழகு செய்ய வேண்டும் என்று நீ கருதினாயாகில் போ! கடவுளாகிய ஸ்ரீந்ருஸிம்ஹனைப் போய் வழிபடுவாய்.

”த்வத் ப்ரபு ஜீவப்ரியம் இச்சஸி சேத்
நரஹரி பூஜாம் குருஸததம் |
ப்ரதிபிம்பாலங்க்ருதி த்ருதி குசலோ
பிம்பாலங்க்ருதிம் ஆதநுதே || “

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment