Friday, March 20, 2020

பதினைந்து உபநிஷதங்களின் தமிழாக்கம்

வில்லவரம்பல் குப்புசாமி ஐயர் நமக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தான். ஸ்ரீபகவத் கீதையின் மூன்று சித்தாந்த பாஷ்ய அர்த்தங்களுடனும் தமிழில் கொண்டு வந்தவர் என்று பார்த்தோம். அவரே 1888 ல் ஒரு பதினைந்து உபநிஷதங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு பொருள் எழுதி தமிழில் கொண்டு வந்திருக்கிறார். என்ன பதினைந்து உபநிஷதங்கள்?

கைவல்லியம், அம்ருதபிந்து, நாரயண, மைத்திராயணி, மைத்திரேய, ஸர்வசார, நிராலம்ப, ஆத்மபோத, நாரதபரிவ்ராஜக, ஸ்கந்த, பைங்கள, சாரீரக, வராக, கலிசந்தாரண, முக்திக - என்பவை அந்த உபநிஷதங்கள். இவற்றை மொழிபெயர்ப்பதில் அவர் தமக்கு உதவிய நண்பர்கள் இருவரைச் சுட்டுகின்றார். ஆச்சரிய தர்ப்பணம் என்னும் நூலைச் செய்தவரான பென்ஷன் சிரஸ்தேதார் ப்ரம்மஸ்ரீ பொன்முடி வெங்கட்ரமணய்யர், பென்ஷன் டிப்ட்டி கலெக்டரான வெங்கடேசய்யர் ஆகிய இருவரும் சொன்னதை எழுதினேன் என்கிறார். அப்படியென்றால், என்ன ஆண்டு? 1888. இதற்குப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சிகாகோ சர்வமத மஹாசபை நடக்கப் போகிறது. அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் அனைவரும் ஒருமித்து எவ்வளவு ஆழமாகவும், நெடும்பயன் விளையுமாறும் தமிழுக்கு வளம் சேர்த்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டாமா?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்


***

No comments:

Post a Comment