Wednesday, June 22, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 41

தா3ஸஸ் ஸகா2 வாஹநம் ஆஸநம் த்4வஜோ

யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |

உபஸ்தி2தம் தேந புரோ க3ருத்மதா

த்வத3ங்க்4ரி ஸம்மர்த்த3 கிண அங்க சோபி4நா || 


*


உமக்கு அடியவனாயும், நண்பனாயும், அமர்ந்து செல்லும் வாஹநமாயும், வீற்றிருக்கும் ஆசனமாயும், உமக்கு வெயிலுக்கும் மழைக்கும் மேல்விரிப்பாகவும், உமக்கு வீசப்படும் சாமரமாகவும், நெருக்கும் உம்முடைய திருவடிகளின் தழும்பேறியவனாகவும் விளங்கும் அந்தக் கருடாழ்வான் தேவரீர் திருமுன்பு சேவித்து நிற்க (அந்த நிலையில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment