Sunday, June 26, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 45

அசிந்த்ய தி3வ்ய அத்3பு4த நித்ய யௌவந

ஸ்வபா4வ லாவண்யமய அம்ருத உத3தி4ம் |

ச்ரிய: ச்ரியம் ப4க்தஜந ஏகஜீவிதம்

ஸமர்த்த2ம் ஆபத்ஸக2ம் அர்த்தி2கல்பகம் || 

சிந்தனைக்கெட்டாததாய், தெய்விகமாய், என்றும் வியப்பே விளைப்பதாய், நித்யமாய் இருக்கும் இளமையின் இயல்பான எழில்மயமான அமுதக் கடலாக இருப்பவனும், திருவுக்கும் திருவாகிய செல்வனும், பக்தஜநங்களின் ஒரே ஜீவிதமாக இருப்பவனும், தன்னை அனுபவிக்க நினைப்பார்க்கு உரிய பக்குவம் தந்து அநுபவிக்க வைக்கும் ஸாமர்த்தியம் உடையவனும், ஆபத்து அனைத்தையும் அக்கணமே நீக்கும் உயரிய நண்பனாயும், குறையிரந்து வருவோர்க்கு வேண்டுவன அளிக்கும் கல்பகமரம் போன்றவனுமான (உன் சந்நிதியில் நான் கண்டு உனக்குத் தொண்டு செய்யும் நாள் எந்நாளோ?) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment