Friday, June 24, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 43

ஹதாகி2ல க்லேமலை: ஸ்வபா4வத:

ஸதா3நுகூல்யைகரஸை: தவோசிதை: |

க்3ருஹீத தத் தத் பரிசார ஸாத4நை:

நிஷேவ்யமாணம் ஸசிவை: யதோ2சிதம் || 

அவித்யை, அஹங்காரம், மிகுந்த ஈடுபாடு, விருப்பு, வெறுப்பு என்னும் ஐந்தும் கிலேசங்கள் என்று சொல்லப்படும். இவ்விதக் கிலேசங்களும், பிரகிருதியுடன் தொடர்பால் விளையும் மலங்களாகிய குற்றங்களும் எதுவும் அற்றவர்களாயும், இயல்பாகவே நின் கைங்கர்யம் என்னும் ஒன்றிலேயே ஊன்றிய ரஸவடிவாய் இருப்பவர்களும், உனக்கு உவப்பானவர்களும், உன் கைங்கரியத்திற்கு ஏற்ற அந்தந்தத் துணைச் சாதனங்களைக் கைக்கொண்டு, முறையுணர்ந்து உசிதமாகச் சேவை செய்வதிலேயே நிலைத்தவர்களுமான நித்யசூரிகளால் சேவிக்கப்படும் இருப்பில் (நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment