Wednesday, June 8, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 27

தவாம்ருதஸ்யந்தி3நி பாத3மங்கஜே 

நிவேசிதாத்மா கத2ம் அந்யதி3ச்ச2தி

ஸ்தி2தேSரவிந்தே3 மகரந்த3 நிர்ப்ப4ரே 

மது4வ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே || 



அமுதம் புறம்பொசிந்து வெள்ளமிடா நின்ற உம்முடைய பாத கமலங்களில் உம்முடைய நிர்ஹேதுக (காரணமற்ற) கிருபையாலே எனக்கு முழுமையான தோய்வு ஏற்பட்ட பின்பு வேறொன்றை எப்படி மனம் விரும்பும்? செந்தாமரையும் மலர்ந்திருக்க, அதில் தேனும் நிறைந்து தளும்ப, அந்தத் தேனை அருந்தவும் வாய்த்த வண்டானது முள்ளிமலரின் மீது பார்வையாவது செலுத்துமோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment