Saturday, June 18, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 37

சகர்த்த2 யஸ்யா 4வநம் பு4ஜாந்தரம் 

தவ ப்ரியம் தா4 யதீ4 ஜன்மபூ4: | 

ஜக3த் ஸமஸ்தம் யத3பாங்க3 ஸம்ச்ரயம் 

யத3ர்த்த2ம் அம்போ4தி4: அமந்த்2யப3ந்தி4 || 



’அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’ என்று யார் விரும்பி உறையும் பவநமாக நின் திருமார்வம் திகழ்கிறதோ, யார் தோன்றிய திருப்பாற்கடலை உனக்குப் பிடித்த உறைவிடமாக நீ ஏற்று மகிழ்கிறாயோ, யாருடைய திருக்கடைக்கண் நோக்கின் கிருபையால் ஜகமெல்லாம் இயங்குகிறதோ, யாருக்காகவென்று கடலைக் கடைந்தாயோ, யாருக்காகவென்று கடலை அடைத்து அணையிட்டாயோ (அந்தத் திருமகளோடு எழுந்தருளியிருக்கும் இருப்பில் நான் கண்டு தொண்டு செய்யும் நாள் எந்நாளோ) 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment