Saturday, February 15, 2020

புழக்கடை தோட்டத்து வாவி

கிருஷ்ணனே ஆகிய அரங்கன் மெய்க்காட்டு கொள்ளும் இடம் ஆயிரக்கால் மண்டபம். ‘எங்கே அவன் எங்கே அவன் என்று தேட வேண்டாம், என்னைக் கண்டீரோ என்னைக் கண்டீரோ என்று பத்தி உலாத்தும் பரமன் இடம் பாவைக்களம்.

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல்வாய் கூம்பின காண்.

இந்தப் புழக்கடை தோட்டத்து வாவி நம்முடைய உள்ளம்தான். தெரியாத விஷயத்தில் பேசும் வாய் நம்முடையது. விஷயம் தெரிந்தால் வாயடைத்துப் போகும். மனம் கடந்த விஷயத்தை சுத்த மௌனம் வாய்த்த மனம் பிரதிபலித்துக் காட்டும். ஆம்பல் வாய் கூம்புவதும் உள்ளேதான். செங்கழுநீர் வாய் நெகிழ்வதும் உள்ளேதான்.

Analysis has to end and Intuition has to blossom.

நம்முடைய வீட்டுப் புழக்கடைதானே? நமக்குத் தெரியாமல் ஒன்று நடந்துவிடுமா என்ன? உள்ளம்தான் நம்முடையது என்ற பேர். நடப்பதெல்லாம் நம்மைக் கேட்டா நடக்கிறது? புறக்கண் எப்பொழுது மூடும் என்பதும் நம் கையில் இல்லை. அகக்கண் எப்பொழுது மலரும் என்பதும் நம் கையில் இல்லை. வேளை வந்தால் சங்கூதுவதும் அவன் தான். தகுந்த வேளையைக் கொணரும் சக்கிரத்தைச் சுழற்றுவதும் அவன் தான். - சங்கொடு சக்கிரம் ஏந்தும் தடக்கையன். நம் உள்ளமெல்லாம் செங்கழுநீர் வாய்நெகிழட்டும். பங்கயக்கண்ணானைப் பாடுவோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment