Friday, February 14, 2020

நினைத்துப் பார்த்தால்!

சிலவற்றை நாம் நன்கு உணராமல் இருக்கும்வரை வண்டி நன்றாக ஓடுகிறது. இந்த உலகம், உலக வாழ்வு, அதன் இயல்பு இதெல்லாம் ஏதோ நிகழ்ச்சி நிரலாகப் போகும்வரை ஆகா அடுத்தது அடுத்தது என்று காரியம் போகிறது. ஆன்மிகம், உலகியல், பாரமார்த்திகம், லௌகிகம், இகம், பரம், போதும் இந்த உலக வாழ்க்கைக்குச் செய்து கொண்டது, இனி அப்பாலைய நிலைக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டாவோ என்றெல்லாம் சௌக்கியமாகக் கவலைப்பட முடிகிறது. ஆனால் ஒரு கணம் நாம் என்ன செகிறோம், எங்கு இருக்கிறோம், என்ன இதெல்லாம், வாழ்க்கையின் நிலை என்ன, அதில் நம்முடைய ஸ்திதி என்ன, நான் என்பது யார் இந்த மாதிரியான குடைச்சல் தொடங்கிவிட்டால் பின்பு ஒரு கட்டுச்சோறும் ஒன்றும் பயன்படுவதில்லை. அந்த மந்த்ரம் இந்த மந்த்ரம், இந்த ஜபம், அந்த ஹோமம் எல்லாம் நாம் என்று செய்து என்று மனம் நிலைநின்று, இந்த உலகியல் நம்மிடம் விட்டு அகன்று, அப்பொழுதுதான் புது லோடு எல்லாம் கொண்டுவந்து இறக்குகிறது வாழ்க்கை. பழைய மிச்சம் தீர்ந்துவிட்டது என்று நினைத்தது கூடச் சரியில்லை, அதுவே இன்னும் ஒரு மோழி கிடக்கிறது என்று உணரும்போது என்று விடிவுகாலம்? இல்லை இல்லை இதெல்லாஅம் ஒரு நாழிகையில் முடித்துவிட்டு அப்புறம் முழுக்க ஜபம், ஹோமம் என்று உட்கார வேண்டியதுதான், அந்தப் புராணத்தில் பார்த்தேன் ரொம்ப பவர்ஃபுல் மந்த்ரமாம், ஒரு மண்டலம் ஜபித்தாலே அவ்வளவு எஃபெக்டு, இப்படி ஒருவர் நினைத்துக்கொண்டே இருந்தால் நிச்சயம் அவரைப் போல் ஒரு வெகுளி யாருமே இருக்க மாட்டார்கள். என் போன்றோருக்கெல்லாம் ஏதோ அவனாகத் தன்னை மட்டுமே பார்த்தபடி பக்கத்தில் இருக்கும் அம்மாவின் ஐயோபாவம் என்ற சிபாரிசால் மனம் இரங்கி அருள் செய்தால்தான் உண்டு.

நம்பிள்ளையிடம் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் இதைப் பற்றிக் கேட்க நம்பிள்ளை சொன்னார் என்று பதிவு தருகிறது வார்த்தாமாலை. ஏதோ திக்பிரமை பிடித்த நெஞ்சுக்குக் கொஞ்சம் ஆச்வாசம்!

“ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஸம்ஸாரத்தினுடைய பொல்லாங்கையும், மந்த்ரங்களினுடைய பன்மையையுங்கண்டு பிள்ளைக்கு விண்ணப்பம் செய்ய; ஆகையாலன்றோ தானே உபாயமாக வேண்டுவது என்றருளிசெய்தார்.”

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment