Friday, February 7, 2020

கருவூர் சி கிருஷ்ணஸ்வாமி நாயுடுவும் கிருஷ்ணோபநிஷத்தும்

1930, 1940 களில் நடந்த ஒன்று. வேதாந்தக் கல்வி என்பது தமிழ் மொழியின் வாயிலாக நன்கு தொடர்ந்து நடந்தேறியது என்பதை விளக்கும் விதத்தில் கருவூர் சி கிருஷ்ணசாமி நாயுடு என்பார் திருப்பதி சுவாமிகள் போன்றோரிடம் அத்வைத சித்தாந்தத்தை நன்கு பயின்றவர்களில் ஒருவர். பெரும் செல்வந்தர். தமது பெருஞ்செல்வத்தை அனைத்தையும் வேதாந்தக் கல்வியை வளர்ப்பதற்கே செலவிட்டார். கருவூரில் கிருஷ்ண மந்திர வேதாந்தாசிரமம் என்று ஓர் ஆசிரமம் ஆரம்பித்து, அதற்கு நிலைத்த தனமாக தமது செல்வத்தை வைத்து, அங்கு பெரியோரைப் பேணல், ஞானநூல் பயிலல், தத்துவம் ஆராய்தல் போன்ற ஆன்ம சாதனைகளின் இடமாக ஆக்கி, அதனை நன்கு நிர்வகித்து வருமாறு தமது மனைவியார், மற்று குமாரத்திகள், சுற்றத்தார் என எல்லோரையும் அதில் ஈடுபடுத்தி வந்தார். ஸ்ரீகிருஷ்ண யஜுர் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவரான ஸ்ரீகாசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளைக் கொண்டு அதர்வ வேதத்தைச் சேர்ந்தது என்று கருதப்பட்ட ஸ்ரீகிருஷ்ணோபநிஷத்து என்பதை மந்திரமும், பதவுரையும், விளக்க உரையுமாகத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து நன்கொடையாகவே அனைவருக்கும் வழங்கினார். தமிழில் வேதாந்தம் வளர்த்த மகனீயர்களைத் தொழுவோமாக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

No comments:

Post a Comment