Friday, February 7, 2020

சாம்யுவல் பெக்கட்

சாம்யுவல் பெக்கட் பற்றிய ஒரு வீடியோ, ஒன்றரை மணி நேரம் ஓடுகிறது. அவருடைய ‘வெயிட்டிங் ஃபார் கோடோ’ என்பதன் மைய த்வனியிலேயே டாக்யுமண்ட்ரியையும் எடுத்திருக்கிறார்கள் போலும். அந்த மையக் கருத்து வியாபித்திருக்கிறது. ஃப்ரான்ஸில் யுத்த காலத்தின் போது ஐரிஷ் ஆஸ்பத்திரியில் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில் அவர் கண்ட யுத்த கோரம் அதுவரை மந்தகதியில் போய்க்கொண்டிருந்த அவருடைய எழுத்தைத் தீவிரமும், ஆழமும் உடையதாக ஆக்கியது என்று விளக்குகிறார்கள். ‘வெயிட்டிங் ஃபார் கோடோ’ என்பது விளையாட்டு உலகத்தின் ஒரு சொற்கோவையாக இருந்ததாம். அதை அவர் கையாண்டுள்ளார். அதை உண்மையாக மொழிபெயர்க்க வேண்டுமெனில் ‘பெருசா ஏதாவது நடக்குமா வாழ்க்கையிலே’ என்று சொல்லலாம். இப்படிப் பெரும் நிகழ்வுக்குக் காத்திருந்து ஆனால் கடைசிவரை எதுவும் நடக்காமல் ஒரு நாள் போல் மறுநாள் என்று போகும் சராசரி வாழ்க்கையின் ஒரு யதார்த்த சிந்தனை சாம்மின் பங்களிப்பு எனலாம். ஆனாலும் அந்த புனரபி தினம் தினம் என்ற பார்வையையும் எங்கள் திருச்சிக்காரர் அநாயாசமாகச் சொல்லிவிடுகிறார் என்னும் போது - ‘யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்’.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

*** 

No comments:

Post a Comment