Tuesday, September 8, 2020

அக்கினிக் குஞ்சு

 எந்தக் கலைகளும், அறிவுகளும் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் பயிற்சியில் இருந்தால்தான் கெடாமல் இருக்கும். அப்யாஸம் இல்லை என்றால் எந்த வித்யையும் மறைந்துவிடும். ஆனால் ஞானக்கலை என்னும் பிரம்மவித்யையோ அப்படியன்று. ஆர்வம் தோன்றிவிட்டால், ஒருமுறை மனத்தில் விசாரம் எழுந்துவிட்டால் பிறகு அதற்கு மறைவு என்பதே கிடையாது. சிறுகச் சிறுக அனைத்தையும் உண்டு தானே மிக்கதாய் வளர்ந்து நிற்கும். மகாகவி பாரதி சும்மாவா பாடினார்: ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ ஒரு சுலோகம் சொல்கிறது : ‘ஸர்வைவ ஹி கலாஜந்தோரநப்யாஸேந நச்யதி| இயம் ஜ்நாநகலா த்வந்த: ஸக்ருத்ஜாதா விவர்த்ததே||’ - உயிர்களுக்கு ஸர்வகலைகளும் அப்யாஸம் இல்லையெனில் நாசம் அடையும். ஆனால் இந்த ஞானக்கலையானதோ என்றால் ஒரு முறை தோன்றிடின் பின் வளர்ந்துகொண்டே இருக்கும்.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.
***

No comments:

Post a Comment