Sunday, July 17, 2022

ஸ்தோத்ர ரத்நம், ஸ்ரீஆளவந்தார் அருளியது - பொருளடக்கம்

ஸ்ரீஆளவந்தார் அருளிய ஸ்தோத்ர ரத்நம் முழுமையும் 65 சுலோகங்கள் கொண்டது. ஒவ்வொரு சுலோகமும் ஒலிக்குறிப்புடனும், எளிய தமிழில் விளக்கமும் தரப்பட்டு நிறைவேறியது. ஒலிக்குறிப்பில் வர்க்க எழுத்துகளுக்குப் பொதுவாக ஸ்ஃபிக்ஸில் 1, 2 போன்று எண்களால் குறிப்பு காட்டியிருக்கிறேன். ஸ, ஷ போன்ற ஒலிகளுக்கு நேர் எழுத்துகள் இருக்கின்றன. சங்கரர் என்பதில் ஒலிக்கும் சிறப்பு என்பதை இடாலிக்ஸில் காட்டியிருக்கிறேன். சுலோகங்கள் அச்சு எழுத்திலும், விளக்கம் சாதாரண எழுத்திலும் வருகின்றன. செல் உலகமாக வாழ்க்கை ஆகிவிட்டது என்பதனால் செல் மூலமாகவே படிக்க வசதியாக, வழக்கம்போல் பொருளடக்கப் பக்கமாகிய இதில் வரும் தலைப்புகள் அனைத்தும் ஹைபர்டெக்ஸ்ட் செய்யப்பட்டு, அந்தந்தத் தலைப்பைத் தொட்டதுமே திறந்துகொள்ளும் படி செய்திருக்கிறேன். ஆக்கபூர்வமான ஆன்மிகச் சிந்தை வளர்வதற்கு இது உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கை. நண்பர்கள் பயன்கொள்க. 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 







































































குறிப்புதவி நூல்கள் - 1) ஸ்ரீஸூக்திமாலா மலர் 2, ஸ்தோத்ர ரத்ந வியாக்கியானம் பெரியவாச்சான்பிள்ளை, பதிப்பாசிரியர் கீர்த்திமூர்த்தி ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி, மூன்றாம் பதிப்பு 1999; 2) ஸ்தோத்ரரத்நம், ரத்நப்ரபா வியாக்கியானம் ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி, 1927
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

ஸ்ரீஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நம் சில குறிப்புகள்

பிரபத்தி என்பது தனக்குப் பேறு தன்னால் அன்று அவனால் என்னும் திடநம்பிக்கையும், தன்னை ரக்ஷிப்பது தான் அன்று அவனே என்னும் திடமும், தன்னை நினைந்தால் இயலாமையே நிதர்சனமாய் இருப்பதும், தன்னால் இயல்வதாக நினைப்பதெல்லாம் தன்னை அவனிடமிருந்து அகற்றிக் கொள்ளும் வழியாக முடிவதையும் கண்டு, என்றும் தன்னுடைய தோஷங்களையும், தான் அவன் அருளினாலன்றி கடைத்தேற இயலாது என்பதையும் விண்ணப்பிக்கும் பிரார்த்தனை நிறைந்த மனநிலை பிரபன்னரின் தன்மையாக இருப்பது. இதை அறிவுக்கு விஷயமாக்கிப் புரிந்துகொள்வது ஒருவிதம் என்றால் ஸ்தோத்ர ரூபமாக இதை உணர்வு பூர்வமாக உள்ளம் கலந்து கரைவது என்பது மிகவும் சிறந்தது. இதைத்தான் ஸ்ரீஆளவந்தார் நம் அனைவரின் நன்மைக்காகவும் இயற்றி நமக்குக் கொடுத்திருக்கிறார். இதனால் பிரபன்ன குலத்தின் என்றென்றைக்குமான நன்றிக்கு உரியவர் அவர் ஆகிறார். இதை நாம் பகவானைப் பிரார்த்திப்பதற்கு முன் மாதிரி என்று கொள்வது மிகுந்த நன்மை பயக்கவல்லது. கூடவே விசிஷ்டாத்வைத தத்துவக் கூறுகளையும், பிரபத்தி நெறியின் நுட்பங்களையும் ஆழமாகப் பொதிந்து ஸ்ரீஆளவந்தார் அருளியிருப்பது நமக்கு இந்த ஸ்தோத்ர ரத்நம் நித்யம் ஆன்மிக அனுஷ்டானமாக, தியானமாக அமையும் போது புரியவரும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, July 16, 2022

ஸ்ரீஆளவந்தாரும் ஸ்தோத்ர ரத்நமும்

ஸ்ரீவைஷ்ணவத்தின் வரலாற்றில் ஸ்ரீஆளவந்தாரின் இடத்தைக் குறித்து உருவகமாக எம்பார் இயற்றிய சுலோகம் ஒன்றில் இவ்வாறு வருகிறது.: 

லக்ஷ்மீநாதா2க்2ய ஸிந்தௌ4 2ரிபு ஜலத3:

ப்ராப்ய காருண்ய நீரம்

நாதா2த்3ராவப்4யஷிஞ்சத் தத3நு

ரகு4வராம்போ4ஜ சக்ஷுர்ஜ2ராப்4யாம் |

3த்வா தாம் யாமுநாக்2யாம் ஸரிதமத2

யதீந்த்3ராக்2ய பத்3மாகரேந்த்3ரம்

ஸம்பூர்ய ப்ராணிஸஸ்யே ப்ரவஹதி

3ஹுதா4 தே3சிகேந்த்3ர ப்4ரமௌகை4: || 

திருமால் என்னும் லக்ஷ்மீநாதனாகிய கருணையம் பெருங்கடல். அதில் கருணை என்னும் நீரைப் பருகியது நம்மாழ்வார் என்னும் சடகோபராகிய மேகம். ஸ்ரீநாதமுநிகள் என்னும் மலையின் பேல் அந்த நீரைப் பெய்தது. மலையின் மீது பெய்த கருணை என்னும் நீர், புண்டரீகாக்ஷர் என்னும் உய்யக்கொண்டார், ராமமிச்ரர் என்னும் மணக்கால் நம்பி ஆகிய இரு அருவிகளின் வழியே யாமுநாசார்யர் என்னும் ஸ்ரீஆளவந்தாராகிய பெரிய ஆற்றில் புகுந்தது. அங்கிருந்து யதீந்த்ரர் என்னும் இராமாநுசராகிய பெரும் ஏரியில் வந்து சேர்ந்தது. அந்த ஏரியினின்றும் ஆசார்யர்கள் என்னும் வாய்க்கால்கள் மூலம் உயிர்கள் என்னும் பயிர் செழிக்கப் பாய்கிறது. 

அந்த கருணையாகிற நீர் பிரபத்தி நெறி என்பது தானே போதரும். ஸ்ரீவைஷ்ணவத்தின் சாரமும், அனைத்து வேத வேதாந்தக் கருத்துகளின் உட்பொருளும் ஆகிய பிரபத்தியைத் தாம் இயற்றிய ஸ்தோத்ர ரத்நத்தால் அனைவரும் தினமும் மனத்திலேயே பாடமாகக் கொண்டு நினைக்கும் வண்ணம் செய்தவர் ஸ்ரீஆளவந்தார். அவரைப் பற்றிய தனியன் ஒன்று இவ்வண்ணம் சொல்கிறது. 

ஸ்வாத3யந்நிஹ ஸர்வேஷாம்

த்ரய்யாந்தார்த்த2ம் ஸுது3ர்க்3ரஹம் |

ஸ்தோத்ரயாமாஸ யோகீ3ந்த்3ர:

தம் வந்தே3 யாமுநாஹ்வயம் || 

அறிதற்கு அரிதான வேதாந்த நுண்பொருளை எந்த ஒரு யோகீந்த்ரர் இவ்வண்ணம் அனைவரும் இனிதே அனுபவித்துப் பயில வாய்ப்பாக ஸ்தோத்ரமாக ஆக்கினாரோ அந்த யாமுநர் என்று அழைக்கப்படும் ஸ்ரீஆளவந்தாரை வணங்குகிறேன். 

மேலும் ஒரு தனியன் ஸ்தோத்ர ரத்நத்தைப் பெற்ற மகிழ்ச்சியில் பலகால் வணக்கி இறும்பூதெய்துகிறது. 

நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: | 
நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: || 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 65

அக்ருத்ரிம த்வச்சரணாரவிந்த3

ப்ரேமப்ரகர்ஷாவதி4ம் ஆத்மவந்தம் |

பிதாமஹம் நாத2முநிம் விலோக்ய

ப்ரஸீத3 மத்வ்ருத்தம் அசிந்தயித்வா || 

நிறைவு சுலோகம்:

என்னுடைய நடத்தையை நோக்காதீர்! என் நடத்தையைச் சிந்தனையில் கொள்ளாதீர்! என்னுடைய தாத்தா (பிதாமஹமர்), உமது சரணாரவிந்தங்களில் இயல்பான பிரேமை எல்லையற்றுப் பிரவாகமாய் இருந்தவர், ஆத்மஞானத்தில் சிறந்தவர், ஸ்ரீநாதமுனிகளையே கண்ணால் பார்த்துக்கொண்டே என்னையும், என் நடத்தையையும் கிருபை கூர்ந்து மன்னித்துவிடும். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, July 15, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 64

நநு ப்ரபந்நஸ் ஸக்ருதே3வ நாத2

தவாஹமஸ்மீதி ச யாசமாந: |

தவாநுகம்ப்ய: ஸ்மரத: ப்ரதிஜ்ஞாம்

மதே3கவர்ஜம் கிமித3ம் வ்ரதம் தே || 

நாதனே! ’ஒரே முடிவாய் உன்னைச் சரணடைந்துவிட்டேன்’, ‘நான் உனக்கே ஆட்பட்டவன் ஆகவேணும்’ என்றெல்லாம் வேண்டி உன்னை யாசிக்கின்ற நான், (சரணாகதி அடைந்தோர் குறித்து) நீ செய்துள்ள பிரதிஜ்ஞையை என்றும் நினைவுகொண்டிருக்கும் உனக்குத் தயையுடன் அருள்செய்யத் தக்கவன் அன்றோ? (சரணாகதி அடைந்தோரைக் கைவிடேன்) என்ற உன்னுடைய விரதம் என் ஒருவனைத் தவிர்த்துவிட்டு இயலுமோ? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, July 14, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 63

ரகு4வர யத3பூ4ஸ்த்வம் தாத்3ருசோ வாயஸஸ்ய

ப்ரணத இதி த3யாளுர்யச்ச சைத்3யஸ்ய க்ருஷ்ண

ப்ரதிப4வம் அபராத்3து4ர் முக்34 ஸாயுஜ்யதோ3Sபூ4:

வத3 கிமபத3மாக3ஸ்தஸ்ய தேSஸ்தி க்ஷமாயா: || 



ரகுவரனே! அப்படிப்பட்ட பாபம் செய்த காகாஸுரன் விஷயத்தில் சரணாகதி செய்தான் என்பதே கொண்டு தயாளுவாய் அருளினாய் அன்றோ! குற்றமே இல்லாத கிருஷ்ணனே! ஜன்மம் தோறும் அபராதமே செய்து போந்த சேதிகுலத்தவனான சிசுபாலனுக்கு ஸாயுஜ்யமே கொடுத்தாய் அன்றோ! அத்தகைய உன்னுடைய பொறுமைக்குப் பாத்திரம் அல்லாத பாபம் என்னதான் இருக்கிறது? நீயே கூறியருளாய்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***























Wednesday, July 13, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 62

அமர்யாத3: க்ஷுத்3ச் சலமதி: அஸூயாப்ரஸவபூ4:

க்ருதக்4நோ து3ர்மாநீ ஸ்மரபரவசோ வஞ்சநபர: |

ந்ரும்ஸ: பாபிஷ்ட2: கத2மஹமிதோ து3:க்க3ஜலதே4:

அபாராது3த்தீர்ண: தவ பரிசரேயம் சரணயோ: || 

வரம்புகளை மீறியவன், நீச விஷயங்களில் சபலம் உள்ளவன், நிலையற்ற நெஞ்சம் கொண்டவன், பிறருடைய நல்லவற்றைக் கண்டு பொறாத அசூயைக்கே பிறப்பிடமானவன், செய்நன்றியைக் கொன்றவன், தீயகர்வம் மிக்கவன், காம எண்ணங்களில் என்னை இழப்பவன், வஞ்சனையே செய்பவன், கொடிய காரியங்களைச் செய்பவன், பாபத்திலேயே நிலைபெற்றவன், இப்படிப்பட்ட நான் இந்தக் கரைகாண முடியாத துக்கக் கடலிலிருந்து கரையேறி உன்னுடைய திருவடிகளுக்கு அடிமை செய்யும் பேறு பெறுவது எங்ஙனம்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***