Saturday, October 23, 2021

கவிதை என்பது அலாதியான திறப்பு

கவிதை என்பது என்னமோ ஓர் அலாதியான உலகத் திறப்பாகத்தான் எனக்கு ஆகிவிடுகிறது. மற்ற ஆர்வங்கள் மனத்தை முழுவதும் கவிதைக்கு விட்டுக்கொடுத்து நகர்ந்து விடுகின்றன. தமிழினி வசந்தகுமார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது. ‘நீங்க கவிதையிலேயே இருங்க. எதுக்கு மற்றவை?’ ஆனாலும் ஓடுகாலி மனம் ஓரிடத்தில் நிற்குமோ? ஆடிய பாதமும், அருளிய பாதமும் ஒன்றாகும் போது நிற்கலாம். அதுவரை தேடிய நாட்டமாய் மனம் என்னும் மான் துள்ளத்தானே செய்யும். 

அமெரிக்க தேசத்தின் கவிஞர் ஒருவர் ஜான் பெர்ரியொல்ட் (John Perreault). அவர் இப்படி எழுதப் போய்த்தான் இந்தச் சிக்கல் -- 

“in front of us
where hours die
as if lived
inside your immortality” 

எங்கள் ஊர் ஸ்ரீதாயுமானவர் கூறுகிறார்: 

“நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால்
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே.” 

வரவர எங்கோ ஏதோ மொழியில் படித்த ஞாபகத்தில் எந்த மொழியிலோ தேடும் பிழைப்பு ஆகிவிட்டது. ஒரு குரல்தான் ஆதிமுதல் பேசிக்கொண்டிருக்கிறது. அதைப் பிடித்து வைக்கும் பாத்திரமாகப் பல மொழிகளை நாம் வைத்திருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment