Saturday, October 23, 2021

சொன்னது நீதானா

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே. 
என்று ஒரு சினிமா பாடல். 

சொன்னது உண்மை. எவ்வளவு உண்மை என்றால் சொல்லவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கனத்த‌ உண்மை. இதை பெட்ரோ ஸலினாஸ் என்னும் ஸ்பானிஷ் கவிஞர் தமது காதல் கவிதைகளில் சொல்லும் விதம் : 

And what she said to me
was in a language of the world,
with grammar and a history.
So true,
that it seemed to be a lie.
(Memory in my hands, The love poetry of Pedro Salinas, tr by Ruth Katz Crispin, 2009 Peter Lang, pp 9) 

உலகத்து மொழியில்தான் சொன்னாள். இதே இலக்கணம், வரலாறு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட மொழிதான்.. உண்மை.. அவ்வளவு உறுதியான உண்மை... எவ்வளவு உறுதி... ஒரு வேளை சொல்லவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு. 

சொன்னது நீதானா...... சொல் சொல் சொல்.. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment