Friday, October 22, 2021

மாட்டின் கழுத்துமணி

 ஊரெல்லாம் தூங்கிய பின்,

புள் எல்லாம் உறங்கிய பின்,
குழந்தையும் சேட்டை மறந்துறங்க,
மாடும் தெருவோரம் கண்ணயர்ந்த பின்னும்
மாட்டின் கழுத்து மணி மட்டும்
அப்படி என்னதான் பேசுமோ
நினைத்து நினைத்து,
யாரிடமோ.. ?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.

***

No comments:

Post a Comment