Thursday, May 2, 2019

சும்மா அளக்காதீங்க..

அளப்பது என்பது to measure. எவ்வளவு வகையான அளத்தல் இருக்கின்றன? நாழி முகவாது நானாழி என்று கேள்விப்பட்டிருப்போம். இத்தனை மடங்கு இது, இந்த உயரம் இருக்கும், இதுனால பத்து மடங்கு, இருங்க ஒன்று, இரண்டு, மூன்று -- இவ்வாறெல்லாம் அளவைக்கான பேச்சுகள் நம் காதில் விழுந்திருக்கும்.  ஆங்கிலத்தில் டிகிடல். அனலொக் என்றெல்லாம் சொல்வார்கள். பண்டைய தமிழகத்தில் ஏழுவகை அளவைகளைக் கூறுகின்றனர். நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல் என்பன.

பெய்தளர்த்தல் - எண்ணை முதலியவை அளக்கப்படும் விதம்.

சார்த்தியளத்தல் -- அளவோடு அளவை ஒப்பிட்டு அளத்தல்

தெறித்தளத்தல் -- இசைக் கருவியைப் புடைத்து அதன் ஒலியை கேட்டு அளத்தல்.

தேங்க முகந்து அளத்தல் - தானியங்களையும், அரிசியையும் படியினைக் கொண்டு முகந்தளத்தல். இவற்றை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் மாத்திரைக்கு அளவு கூறும் சூத்திரத்திற்கு உரை வரையுங்கால் கூறுவர்.

எனவே சும்மா அளக்காதீங்க. என்ன அளவை என்று சொல்லிவிட்டு அளந்திடுக.

***

No comments:

Post a Comment